Skip to main content

வீடு புகுந்து காதலி, விவசாயி மீது கொலைவெறி தாக்குதல்; ஒருதலை காதலால் வெறிச்செயல்!

Published on 13/06/2022 | Edited on 13/06/2022

 

farmer and women incident at thalaivasal police investigation

 

தலைவாசல் அருகே, ஒருதலையாக காதலித்து வந்த இளம்பெண்ணுடன் விவசாயி ஒருவர் குடும்பம் நடத்தி வருவதால் ஆத்திரம் அடைந்த வாலிபர்,  கூட்டாளியுடன் சேர்ந்து அவர்களை இரும்பு கம்பி, அரிவாளால் சரமாரியாக தாக்கிய சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

 

சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள வரகூரைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 35). விவசாயி. ரமேஷூக்கும், அவரின் மனைவிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். 

 

ரமேஷூன் தோட்டத்தில் கல்வராயன் மலை மொரப்பங்காடு பகுதியைச் சேர்ந்த கவிதா (வயது 28) என்பவர் வேலை செய்து வருகிறார். இதில் ஏற்பட்ட நட்பு, அவர்களுக்குள் காதலாக மலர்ந்துள்ளது. 

 

இதையடுத்து ரமேஷ், கவிதாவை தன் வீட்டுக்கே அழைத்துச்சென்று தாலி கட்டாமல் குடும்பம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 12) வீட்டில் அவர்கள்¢ இருவரும் இருந்தபோது, இரண்டு வாலிபர்கள் அரிவாள், இரும்பு கம்பி ஆகிய ஆயுதங்களுடன் அங்கு வந்தனர். 

 

அவர்கள் இருவரும் ரமேஷையும், கவிதாவையும் சரமாரியாக தாக்கினர். அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் வாலிபர்கள் இருவரும் தப்பி ஓடிவிட்டனர். 

 

ஆபத்தான நிலையில் இருந்த அவர்கள் இருவரையும் மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து தலைவாசல் காவல்நிலைய காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். 

 

தாக்குதலுக்கு உள்ளான கவிதாவை, ஏற்கனவே ஒரு வாலிபர் ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் ரமேஷ், தான் காதலித்த பெண்ணுடன் குடும்பம் நடத்தி வருவதை சகித்துக் கொள்ள முடியாமல் தனது கூட்டாளியுடன் சேர்ந்து அந்த வாலிபர் ரமேஷையும், கவிதாவையும் கொலை செய்யும் நோக்குடன் தாக்குதல் நடத்தியிருப்பது தெரிய வந்துள்ளது. 

 

இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.