ADVERTISEMENT

இரண்டாவது நாளாக ரஜினி வீட்டு முன்பு குவிந்த ரசிகர்கள்.. (படங்கள்)

04:23 PM Dec 30, 2020 | tarivazhagan

ADVERTISEMENT

நடிகர் ரஜினிகாந்த, "டிசம்பர் மாத இறுதியில், கட்சி தொடங்கும் தேதியையும், கட்சியின் பெயரையும் அறிவிப்பேன்" என்று தெரிவித்திருந்தார். அதன்பின் 'அண்ணாத்த' படப்பிடிப்புக்காக ஐதராபாத் கிளம்பிச் சென்றார். சில நாட்கள் படப்பிடிப்பு நடந்துவந்த நிலையில், அங்கு 4 பேருக்கு கரோனா தொற்று ஊறுதியானது. அதனைத் தொடர்ந்து அப்படபிடிப்பு நிறத்தப்பட்டது.

ADVERTISEMENT

மேலும், ரஜினிக்கு இரத்த அழுத்த அளவில் மாறுபாடு ஏற்பட்டு, மூன்று நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்னை திரும்பினார். அதன்பின், டிசம்பர் 29ஆம் தேதியான நேற்று, கட்சி தொடங்கவில்லை என அறிவித்தார். இதனால், ரஜினியின் ரசிகர்கள் நேற்று அவரது வீட்டிற்கு முன்பு, 'அவர் அரசியலுக்கு வரவேண்டும்' என்பதை வலியுறுத்த குவிந்தனர். அதேபோல் இன்றும் 'அவர் அரசியலுக்கு வரவேண்டும்' என்பதை வலியுறுத்த குவிந்திருந்தனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT