Skip to main content

எழுத்தாளர் இளவேனில் மறைவு- நக்கீரன் ஆசிரியர் அஞ்சலி! (படங்கள்)

Published on 03/01/2021 | Edited on 03/01/2021

மறைந்த எழுத்தாளர் இளவேனில் உடலுக்கு நக்கீரன் ஆசிரியர் நேரில் அஞ்சலி செலுத்தினார். 

 

சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்த எழுத்தாளர் இளவேனில் மாரடைப்பு காரணமாக நேற்று (02/01/2021) காலமானார். அதைத் தொடர்ந்து, பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் உடல் வைக்கப்பட்டது. பொதுமக்கள், திரையுலகினர், அரசியல் கட்சித் தலைவர் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி வருகின்றனர். அஞ்சலிக்கு பிறகு இளவேனில் உடல் ஏ.வி.எம். மயானத்தில் இன்று (03/01/2021) நல்லடக்கம் செய்யப்படும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 

 

இடதுசாரி சிந்தனையாளரான எழுத்தாளர் இளவேனில், 'வாளோடும் தேன் சிந்தும் மலர்களோடும்', புரட்சியும், எதிர்ப்பு புரட்சியும்' உள்ளிட்ட 10- க்கும் மேற்பட்ட நூல்களையும், கவிதை தொகுப்புகளையும் எழுதியுள்ளார். முன்னாள் முதல்வர் கலைஞரின் கதை, வசனத்தில் உருவான உளியின் ஓசை திரைப்படத்தில், இளவேனில் இயக்குனராக பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

எழுத்தாளர் இளவேனில் மறைவுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக, நக்கீரன் ஆசிரியர் சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள எழுத்தாளர் இளவேனில் உடலுக்கு மாலை வைத்து மரியாதை செலுத்தினார். மேலும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். 

 

பின்னர் பேட்டியளித்த நக்கீரன் ஆசிரியர், "இளவேனில் ஒரு போராளி.  எங்கள மாதிரி சக கலைஞரா ஓவியர் வேற. கொஞ்சம் பிடிவாதக்காரர், கலைஞருடன் அவ்வளவு நட்பாக இருந்தும், கலைஞரை பயன்படுத்தாதவர். உளியின் ஓசையை அவர் டைரக்ட் பன்றாரு. கலைஞரை பயன்படுத்தி உளியின் ஓசையின் புரொடியூசர் இன்று பெரும்பணக்காரராகியுள்ளார். அப்ப டைரக்கடராக இருந்தவர் கலைஞர் கிட்ட எந்த உதவியையும் கேட்காமல் இன்று வரை நட்பு பாராட்டியிருந்த ஒருத்தரை நீங்கள் எங்கியாவது பார்த்திருக்க முடியாது. அவர் இளவேனில் மட்டுமே. 1990- களில் கலைஞர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு 'அங்குசம்'னு ஒரு பத்திரிகை நல்ல பத்திரிகை நீங்க பப்ளிஷ் பண்ணுங்க, அதுக்கு இளவேனில் ஆசிரியராக இருக்கட்டும் என்று என்கிட்ட சொன்னார்.

 

கலைஞர் ரெகமண்ட் பண்ணி இளவேனில் ட அனுப்பனாரு,அப்ப இளவேனில் 'அங்குசம்' எப்படி பண்ண போறனா, நக்கீரன் மாதிரியே இருக்கும்னாரு, நக்கீரன் மாதிரியே 'அங்குசம்' கொண்டு வருவதற்கு என்னையே கூப்பிட்டு பப்ளிஷ் பண்ண சொன்னவரு. அப்ப பாத்துக்கோங்க எவ்வளவு தைரியம் இருக்கும்னு. நினைச்சத நினைச்ச இடத்துல பட்டுனு பேசற ஒரு மனிதர்.கடைசி வரைக்கும் யாருக்கும் தலைவணங்காமல், அவர் நம்மை விட்டு போனது சாதாரண இழப்பல்ல, ஒரு பேரிழப்பு. தி.மு.க. உறுப்பினருன்னு சொல்லுவாரு. ஆனா தி.மு.க.ல இருக்கிற கம்யூனிஸ்ட் ஆக நாங்க பாத்தோம். அவரின் இழப்பு பேரிழப்பு" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

வெறுப்பு பிரச்சாரம்; மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டி போராட்டம் (படங்கள்)

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, வெறுப்பு பிரச்சாரம் செய்துவரும்  பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவும், வழக்கு பதிவு செய்திடவும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் மத்திய சென்னை மாவட்டம் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை கண்டனம் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. பிறகு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க, பேரணியாக சென்றனர்.