Skip to main content

பிரபல ஆள் கடத்தல் மன்னன் கைது!

Published on 22/10/2023 | Edited on 22/10/2023

 

Famous human incident nia involved

 

தொடர் ஆள் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டு வந்த ஆள் கடத்தல் மன்னன் கைது செய்யபட்டுள்ளார்.

 

இலங்கையில் தொடர் ஆள் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டு வந்தவர் இம்ரான் கான். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு இலங்கையை சேர்ந்த 38 பேரை சட்டவிரோதமாக நாடு கடத்தினார். இது குறித்த வழக்கில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இவரை தீவிரமாக தேடி வந்தனர். மேலும் இவர் இலங்கையில் இருந்து 38 பேரை சட்ட விரோதமாக இந்தியா வழியாக கனடா நாட்டுக்கு அனுப்பி வைத்தது விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கில் ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி இம்ரான் கான், தேனியில் வைத்து என்.ஐ.ஏ. அதிகாரிகளால் கைது செய்யபட்டுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்