Skip to main content

பத்திரிகையாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய பிரபல நிறுவனம்...

Published on 27/05/2020 | Edited on 27/05/2020
erode



கரோனா என்கிற கொடிய காலம் நீண்டு கொண்டே வருகிறது. தினக்கூலி உழைப்பாளர்கள் முதல் பத்திரிகையாளர்கள் வரை அனைவரின் வாழ்வையும் ஊடரங்கு மூலம் முடமாக்கி விட்டது இந்த கரானா வைரஸ்.


யானை பசிக்கு சோளப்பொறி போல ஒரு சிறு உதவியை கொடுத்து ஒதுங்கிக் கொண்டது ஆளும் அரசுகள். அன்றாட உணவுத் தேவைக்கே அவதிப்படும் பரிதாப நிலைக்கு கோடிக்கணக்கான மக்கள் தள்ளப்பட்டனர். தமிழகத்தில் பிரதான எதிர்கட்சியான தி.மு.க., அதே போல் சில இயக்கங்களும், தனியார் அமைப்புகள், நிறுவனங்களும் மக்களுக்கு உதவியது.

மக்களை போல தமிழகத்தில் பத்திரிகையாளர்களின் நிலமையும் பரிதாபகரமாகத் தான் இந்த இரு மாதங்களும் கடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தை தலைநகராக கொண்டு இயங்கி வரும் பிரபல நிறுவனம் "சக்தி மசாலா" நிறுவனத்தின் உரிமையாளர்களான பி.சி.துரைசாமி, சாந்தி துரைசாமி ஆகியோர் பத்திரிகையாளர்களுக்கு உதவ முன்வந்தனர். 

 

 


அதன் அடிப்படையில் ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் நலச்சங்க செயலாளர் ஜீவாதங்கவேல், தலைவர் ரமேஷ், பொருளாளர் ரவிச்சந்திரன் மேலும் அவ்வமைப்பின் நிர்வாகிகள் இணைந்து, சக்தி மசாலா நிறுவனம் ஒவ்வொருவருக்கும் வழங்கிய தலா 25 கிலோ அரிசி மற்றும் மசாலா பொருட்களை ஈரோடு மாவட்டத்தில் பணியாற்றும் அனைத்து நிறுவன பணியாளர்கள் சுமார் 200 க்கும் மேற்பட்டோருக்கு அவர்கள் இருப்பிடம் சென்றே நேரில் வழங்கினார்கள்.

தொழில் செய்வது மட்டுமல்ல அந்த தொழிலின் மூலம் கிடைக்கும் வருவாயை மிகவும் வாழ்வியல் நெருக்கடிக்குள்ளான இக்கால கட்டத்தில் மனமுவந்து தானம் செய்வது மிகவும் பாராட்டத்தக்கது என ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் சக்தி மசாலா நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இறந்து கிடந்த ஆண் யானை; வனத்துறையினர் விசாரணை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Forest department investigation


                                கோப்புப்படம் 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் விவசாய தோட்டத்தில் புகுவதும்,  உணவுக்காக சாலையில் உலா வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கும்டாபுரம் அருகே ஆண் யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டனர். இதுபற்றி தாளவாடி வனச்சரக அலுவலர் சதீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற அதிகாரிகள் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையில் மருத்துவக் குழுவினர் இறந்த யானையின் உடலை அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்தனர்.

இதில் இறந்த யானைக்கு சுமார் 18 வயது இருக்கும் எனத் தெரிவித்தனர். ஆண் யானையின் தந்தங்கள் இல்லாததால் யானை சுட்டுக் கொல்லப்பட்டதா? அல்லது விஷம் வைத்து கொல்லபட்டதா?  அல்லது இறந்த கிடந்த யானையின் தந்தங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றார்களா? என வனத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் பிரேதப் பரிசோதனை மாதிரிகளையும் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறந்த யானை உடலை மற்ற வனவிலங்குகளுக்காக வனப்பகுதியில் விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.