இந்த நிலையில், கரோனா பாதிப்பை எதிர்கொள்ள நான் ஒரு கோடி ரூபாய் உதவி செய்கிறேன், ரஜினி செய்வாரா என்று தொழிலதிபர் வருண் மணியன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "இந்த பெருந் தொற்று சமயத்தில் மக்களுக்கு உதவும் வகையில் கொரோனா வைரஸ் கிருமி பாதிக்கப்பட்டவரை விரைவாகக் கண்டறியும் கருவியை ரூ.1 கோடிக்குச் சீனாவில் இருந்து வாங்கி வருகிறேன். மக்கள் நலனில் அக்கறை கொண்டவராக இருந்தால் ரஜினிகாந்த் ரூ.1 கோடி தரத் தயாரா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு ரஜினி ரசிகர்கள் தொழிலதிபர் வருண் மணியனுக்கு எதிராகக் கருத்து பதிவிட்டு வருகின்றனர். மேலும் கரோனா காரணமாக சினிமா படப்பிடிப்புகள் ரத்தால் சினிமா தொழிலாளர்களுக்கு உதவ கோரியிருந்தார் ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி. அதனையடுத்து சினிமா தொழிலாளர்களுக்கு உதவ ஃபெப்சி அமைப்புக்கு ரூபாய் 50 லட்சம் நிதியுதவி அளித்தார் நடிகர் ரஜினிகாந்த் என்பது குறிப்படத்தக்கது.