Skip to main content

ஒரு தீப்பெட்டிக்கு 500 ரூபாய் பரிசளித்த பிரபல நடிகை! ஏர்போட்டில் பரபரப்பு! 

Published on 12/12/2021 | Edited on 12/12/2021

 

 

Famous actress who gifted 500 rupees for a match! Excitement at the airport!

 

பாலிவுட் திரைப்படங்களின் பிரபல நடிகை சன்னிலியோன். கனடா நாட்டின் இந்திய வம்சாவளி பெண். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இவரது குடும்பம் பல ஆண்டுகளுக்கு முன்பு கனடாவில் செட்டிலாகிவிட்டது. கனடா நாட்டின் குடியுரிமையைப் பெற்ற சன்னிலியோன், மாடலிங்கில் பிரபலமானார். பிறகு ஹாலிவுட்டின் பாலியல் கிளர்ச்சியைத் தூண்டும் ஆபாச நடிகையாக அறிமுகமானார். 

 

50- க்கும் மேற்பட்ட ஆபாச படங்களை நடித்திருக்கும் சன்னிலியோன், அதே எண்ணிக்கையிலான ஆபாச படங்களை இயக்கியுமிருக்கிறார். ஆபாச பட நடிகைகளில் சர்வதேச அளவில் முதலிடத்திலும் இருந்திருக்கிறார் சன்னி லியோன். 

 

மிகவும் புகழ்ப்பெற்றிருந்த இவரை 2012-ல் இந்தியாவுக்கு அழைத்து வந்தது பாலிவுட் உலகம். ஹிந்தி திரைப்படங்களில் நடிக்கத் துவங்கினார். அதன்பிறகு, ஆபாச படங்களில் நடிப்பதையும் இயக்குவதையும் நிறுத்திக் கொண்டார் சன்னி லியோன். 

 

பாலிவுட் படங்களின் முன்னணி நடிகையாக மாறிவிட்ட இவர், ஹிந்தி படங்களை தயாரிக்குமளவுக்கு முன்னேறினார். தவிர, பிரபல ஹிந்தி ஹீரோக்களின் படங்களில் குத்தாட்டம் போடுவதிலும் ஆர்வம் காட்டினார் சன்னி. சில தமிழ்ப் படங்களிலும் ஒற்றை பாடலுக்கு நடனம் ஆடியிருக்கிறார். 

 

இந்த நிலையில், தமிழ் படம் ஒன்றில் நடிப்பதற்காக நேற்று (11/12/2021) மும்பையில் இருந்து சென்னை வந்தார் சன்னி லியோன். சென்னை விமான நிலையத்தில் அவரைக் கண்டதும், விமான நிலைய அலுவலர்களிடமும், பயணிகளிடமும் திடீர் பரபரப்பு உருவானது. அவருக்கு அருகில் சென்று பலரும் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். ஏர்போர்ட் ஊழியர்கள் பலரும் அவருடன் படம் எடுத்துக் கொள்வதில் தீவிரம் காட்டினார்கள்.

 

விமான நிலைய வரவேற்பாளர் கேம்ப் குமாரும், படக்குழுவின் நண்பரான பாலுவும்  சன்னிலியோனை பாதுகாப்பாக அழைத்துச் சென்று காரில் அமர வைத்தனர். காரில் உட்கார்ந்ததும், கேம்ப் குமாரிடம், ‘’லைட்டர் அல்லது தீப்பெட்டி இருக்குமா? ’’ என்று கேட்டார் சன்னி லியோன். ஆனால், குமாரிடமும் தீப்பெட்டி இல்லை ; பாலுவிடமும் தீப்பெட்டி இல்லை. 

 

இருவரிடமும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸ்காரர்களிடம் ஓடோடிச் சென்றார் கேம்ப் குமார். ஒரு போலீஸ்காரரிடமிருந்து தீப்பெட்டியை வாங்கி கொண்டு வந்து சன்னி லியோனிடம் கொடுக்க, தீப்பெட்டியை வாங்கி சிகரெட்டை பற்ற வைத்தார் சன்னி லியோன். அத்துடன், தீப்பெட்டி வாங்கிக் கொடுத்த கேம்ப் குமாரிடம் 500 ரூபாய்கொடுத்து விட்டு காரில் பறந்தார் சன்னி.

 

ஒரு தீப்பெட்டிக்கு 500 ரூபாய் கொடுத்து வரவேற்பாளரை அதிர்ச்சியடைய வைத்தார் நடிகை சன்னி லியோன். அதேபோல, தீப்பெட்டிக்கு 500 ரூபாயா ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியில் உறைந்து போனார்கள் அந்த சம்பவத்தை கவனித்திருந்த விமான நிலைய ஊழியரகள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

விமான கட்டணம் கிடுகிடு உயர்வு; பயணிகள் கடும் அதிர்ச்சி!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Air fares hike Passengers shocked

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மற்றும் வார விடுமுறை காரணமாகப் பெரும்பாலான பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பி வருகின்றனர். இதன் காரணமாகப் பேருந்துகள், ரயில்கள் என அனைத்திலும் மக்கள் கூட்டம் அதிகரித்த வண்ணம் காணப்படுகிறது. இத்தகைய சூழலில் சென்னையிலிருந்து கோயம்புத்தூர் மதுரை, திருச்சி, தூத்துக்குடி மற்றும் சேலம் செல்லும் உள்நாட்டு விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளது. வழக்கமான கட்டணத்தை விட 3 முதல் 5 மடங்கு வரை விமான டிக்கெட் கட்டணங்கள் கிடுகிடுவென உயர்ந்துள்ளன. இதனால் விமான பயணிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அந்த வகையில் சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு செல்ல வழக்கமாக 3 ஆயிரத்து 957 ரூபாயாக இருந்த விமான கட்டணம் தற்போது 12 ஆயிரத்து 716 ரூபாயாக உயர்ந்துள்ளது. சென்னையிலிருந்து மதுரைக்கு செல்ல வழக்கமாக 3 ஆயிரத்து 674 ரூபாயாக இருந்த விமான கட்டணம் 8 ஆயிரத்து 555 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதிகப்பட்சமாக 11 ஆயிரத்து 531 ரூபாயாக உள்ளது. மேலும் சென்னையிலிருந்து சேலம் செல்ல வழக்கமாக 2 ஆயிரத்து 433 ரூபாயாக இருந்த விமான கட்டணம் 5 ஆயிரத்து 572 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து கோவைக்கு செல்ல வழக்கமாக 3 ஆயிரத்து 342 ரூபாயாக இருந்த விமான கட்டணம் 8 ஆயிரத்து 616 ரூபாயாக உயர்ந்துள்ளது. 

Next Story

போலீஸ் தேர்வு எழுத உத்தரப் பிரதேசம் வந்த சன்னி லியோன்?

Published on 18/02/2024 | Edited on 19/02/2024
Sunny Leone picture in police exam hall ticket in uttar pradesh

உத்தரப் பிரதேச மாநில காவல்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காகப் பல்வேறு மாவட்டங்களில் எழுத்துத் தேர்வு நேற்று (17-02-24) நடைபெற்றது. இந்த தேர்வு மாநிலம் முழுவதும் 775 மாவட்டங்களில் 2,385 தேர்வு மையங்களில் நடைபெற்றது. 

இந்த நிலையில், தேர்வர்களுக்கு அளிக்கப்படும் அனுமதிச் சீட்டு ஒன்றில் பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோனின் பெயர் மற்றும் புகைப்படத்துடன் வழங்கப்பட்டிருக்கிறது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தேர்வு அதிகாரிகள் இந்த விவகாரம் குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து தேர்வு வாரியம் கூறியதாவது, ‘கன்னோஜ் பகுதி தேர்வு மையத்தை குறிப்பிட்ட அந்த அனுமதிச் சீட்டில் உள்ள அனைத்து தகவலும் போலியானது. மேலும், இந்த பதிவு எண் கொண்ட அனுமதி சீட்டுடன் தேர்வு எழுத யாரும் வரவில்லை’ என்று தெரிவித்துள்ளது. பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோனின் புகைப்படம் கொண்ட அனுமதிச் சீட்டு தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.