Skip to main content

ஆன்லைனில் குக்கர் ஆர்டர் செய்த குடும்பப் பெண்... நூதன மோசடியில் ஈடுபட்ட கம்பெனி!!

Published on 14/06/2021 | Edited on 14/06/2021

 

Family woman who ordered cooker online ... company involved in innovative scam

 

ஆன்லைன் வர்த்தக மோசடியில் ஏமாந்த குடும்பப் பெண் குறித்த சம்பவம் சமீபகாலங்களாக அதிகரித்துள்ளதால், ஆன்லைன் வர்த்தகத்தில் பொருட்கள் வாங்குவது குறைந்துவருகிறது. படித்தவர்கள், இளைஞர்கள், கல்லூரி - பள்ளி மாணவிகள், படித்த குடும்பப் பெண்கள் என இப்படிப்பட்டவர்கள் மத்தியில் ஆன்லைன் வர்த்தகம் அமோகமாகப் பரவியிருக்கிறது. ஆன்லைன் வர்த்தகம் மூலமே தங்களுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் வாங்கிக் குவிக்கிறார்கள். வீட்டு உபயோக பொருட்கள், துணிகள், ஆடம்பரப் பொருட்கள், வாசனைப் பொருட்கள், செல்ஃபோன்கள் என அனைத்துவிதமான பொருட்களும் ஆன்லைன் மூலம் ஆர்டர் கொடுத்து வாங்குகிறார்கள்.

 

நகரம் முதல் கிராமங்கள்வரை, முதுகிலே விமானத்திலிருந்து பாராசூட்டை கட்டிக்கொண்டு குதித்து சாகசம் செய்யும் ராணுவ வீரர்களைப் போல ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யும் பொருட்களை சம்பந்தப்பட்டவர்களிடம் கொண்டு சேர்க்கும் இளைஞர்கள் டூவீலர்களில் அவற்றை சுமந்துகொண்டு பார்க்கும் இடங்களிலெல்லாம் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். இப்படி ஆன்லைன் வர்த்தகம் மூலம் தன் வங்கியிலிருந்து பணத்தைப் பறிகொடுத்துவிட்டு தவிக்கிறார் ஒரு பெண்மணி. ஆம், கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ளது முருகன்குடி கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் ஞானவேல். இவரது மனைவி 25 வயது ஆதிரை. இவர் எல்லோரையும் போல ஆன்லைன் வர்த்தகத்தில் ஆர்வம்கொண்டு தன் வீட்டுக்குத் தேவையான குக்கர் ஒன்றை அனுப்பிவைக்குமாறு சம்பந்தப்பட்ட கம்பெனிக்கு தனது செல்ஃபோன் மூலம் ஆர்டர் கொடுத்துள்ளார். 

 

அதற்கான விலை 762 ரூபாய் பணத்தை அவர்கள் வங்கிக் கணக்கிற்கு தன் வங்கி கணக்கில் இருந்து ஆதிரை பணப்பரிமாற்றம் செய்துள்ளார். ஆனால், அவர் கேட்ட குக்கர் மட்டும் வரவில்லை. ஒருவாரம் கடந்ததும் சம்பந்தப்பட்ட கம்பெனிக்கு ஃபோன் செய்து “பணம் செலுத்தியுள்ளேன் ஆனால், குக்கர் வரவில்லை” என்று கேட்டுள்ளார் ஆதிரை. அவர்கள் “இதோ இன்னும் சில நாட்களில் அனுப்பி வைக்கப்படும்” என்று பதில் கூறியுள்ளனர். அந்த சில நாட்கள் கடந்தும் அவருக்கு குக்கர் வந்து சேரவில்லை. இதையடுத்து மீண்டும் அந்தக் கம்பெனிக்கு ஃபோன் செய்த ஆதிரை, “எனக்கு குக்கர் வந்து சேரவில்லை. நீங்கள் குக்கர் அனுப்ப வேண்டாம். நான் தங்கள் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி எனது பணம் 762 ரூபாய் பணத்தை எனக்கு அனுப்பிவிடுங்கள்” என்று கூறியுள்ளார். “பணத்தைத் திருப்பி அனுப்பி விடுகிறோம்” என்று கம்பெனி நிர்வாகத்தினர் தரப்பில் பேசியவர்கள் ஆதிரையின் வங்கிக் கணக்கு எண் மற்றும் மொபைல் எண்ணை கேட்டுள்ளனர். 

 

அதன்படி இவர் தனது வங்கிக் கணக்கு எண் மற்றும் மொபைல் எண்ணை அவர்களிடம் தெரிவித்துள்ளார். இதன் பிறகு சுமார் அரை மணி நேரத்தில் ஆதிரை வங்கிக் கணக்கில் இருந்து 22 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் செல்ஃபோன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் பதற்றத்துடன் அவர் கணக்கு வைத்துள்ள வங்கிக்குச் சென்று கேட்டுள்ளார். ஆதிரை அங்கிருந்த ஊழியர்களிடம் “என் கணக்கில் இருந்து 22 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார். பின்னர் ஆன்லைன் வர்த்தகம் சம்பந்தமாக செல்ஃபோன் எண், வங்கிக் கணக்கு எண் கேட்ட அந்த மர்ம நபர்கள்தான் பணத்தை நூதன முறையில் மோசடி செய்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து ஆதிரை பெண்ணாடம் காவல் நிலையத்தில் இது சம்பந்தமாக புகார் கொடுத்துள்ளார். காவல் நிலைய இன்ஸ்பெக்டர் குமார் உள்ளிட்ட போலீசார் ஆதிரையின் புகார் மீது வழக்குப் பதிவுசெய்து ஆன்லைன் வர்த்தகம் மோசடி மூலம் பணம் பறித்தது குறித்து விசாரணை நடத்திவருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தமிழகத்தில் நீடித்த வளர்ச்சியை தி.மு.க அரசால் மட்டுமே வழங்க முடியும்” - மல்லிகார்ஜுன் கார்கே பேச்சு

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
“ Mallikarjun Kharge speech Only a DMK government can deliver sustainable development in Tamil Nadu

கடலூர் மாவட்டம் நெய்வேலியில், கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.கே. விஷ்ணு பிரசாத் கை சினத்தில் போட்டியிடுகிறார். அதேபோல் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டு கடலூர் தொகுதியில் கை சின்னத்தில் போட்டியிடும் விஷ்ணு பிரசாதத்தையும், சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிடும் தொல். திருமாவளவனையும் இரு கரம் கோர்த்து பானை மற்றும் கை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து அவர் மக்கள் மத்தியில் பேசுகையில், “இந்திய கூட்டணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தந்தை பெரியார், காமராஜர், கலைஞர் ஆகியோரின் நினைவுகளை இத்தருணத்தில் நினைவு கூற கடமைப்பட்டுள்ளோம். பாரதிய ஜனதா அரசு பல்வேறு வரிவிதிப்புகள் மூலம் ஏழை எளிய மக்களை வதைத்து வருகிறது. அதிலும் குறிப்பாக, தாழ்த்தப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்ட விவசாய பெருங்குடிகள் ஆகியோரின் நிலை மிகுந்த மோசமான நிலையில் உள்ளது. அவர் பிரதமர் ஆவதற்கு முன்பும், பிரதமர் ஆனதற்கு பின்பும் அடிக்கடி கூறி வருவது 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்பதையும் ஒவ்வொரு குடும்பத்தாரின் வங்கி கணக்கில் 15 லட்சம் கருப்பு பணத்தை மாற்றி தருவேன் எனவும் வாக்குறுதி தந்தார். அதில் ஏதாவது ஒன்றை செய்துள்ளாரா?

காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சி அமைத்தவுடன் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும். இந்தப் பிரச்சாரக் கூட்டத்தில் நான் திடமாக கூறிக் கொள்வது என்னவென்றால் இரண்டு விஷயங்களை மட்டும் மக்கள் மன்றத்தில் கூற விரும்புகிறேன். ஒன்று இந்திய ஜனநாயகம் பாதுகாக்கப்படும், மற்றொன்று அரசியலமைப்பு சட்டம் பாதுகாக்கப்படும். நான் 53 ஆண்டு காலம் சட்டமன்ற உறுப்பினர், எம்.பி ராஜ்யசபா உறுப்பினர் எனப் பல்வேறு பதவிகளில் இருந்து வருகிறேன். ஆனால், இந்த ஆட்சியின் போதுதான் கவர்னர் என்ற பதவியின் செயல்பாடுகள் மிகுந்த கேள்விக்குரியதாக உருவாகியுள்ளது. அவர் பட்ஜெட் கூட்டத்தொடர், பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் போன்றவைகளில் எல்லை மீறுவதைக் காண முடிந்தது. 

“ Mallikarjun Kharge speech Only a DMK government can deliver sustainable development in Tamil Nadu

பாஜக அரசை எதிர்ப்பதில் தமிழக முதல்வர் மிக முக்கிய இடமாக உள்ளார். அதிலும் குறிப்பாக நீட் தேர்வு போன்றவற்ற எதிர்ப்பதில் மிக உறுதியாக உள்ளார். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் தற்போதைய உள்ள சிஸ்டத்தை நிச்சயம் மாற்றுவோம். விவசாயிகள் தற்போது மிகுந்த மோசமான நிலையில் உள்ளனர். அவர்களிடம் வாழ்வாதாரம் சிறக்க, சிறப்பு நடவடிக்கை காங்கிரஸ் அரசு நிச்சயம் மேற்கொள்ளும். தமிழகத்தில் நீடித்த வளர்ச்சியை, தி.மு.க அரசால் மட்டுமே தர முடியும். பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டிருக்கிறது .ஏன் விலை உயர்வு என்று கேட்டால் , மோடி அரசு குருடாயில் விலை உயர்வு என்கிறது. ஆனால், உலக அளவில் குரூடாயில் விலை குறைந்த போது பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவில்லை. இதனால் ஏழை எளிய மக்கள் விலைவாசி உயர்வால் அவதி அடைந்து வருகின்றனர்.

ஆயிரம் மோடி வந்தாலும் இந்திய ஜனநாயகத்தையும், அரசியல் சட்டத்தையும் ஒன்றும் அசைக்க முடியாது. இந்தியாவில் உள்ள பல்வேறு துறைகளில் உள்ள எஸ்.சி, எஸ்.டி பிற்பட்டோர் பிரிவினருக்கான காலியிடங்களை நிச்சயம் நிரப்புவோம். இதனால் சுமார் 30 லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்புப் பெறுவர் எனவே அனைவரும் கை சின்னத்திற்கும் பானை சின்னத்திற்கும் வாக்களித்து ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும்” என்று பேசினார்.  

இந்தப் பொதுக்கூட்டத்தில் தமிழக தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, நெய்வேலி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சபா. ராஜேந்திரன், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி, மாநில செயலாளர் சந்திரசேகர், கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கோ.மாதவன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர்.

Next Story

'தேர்தலை புறக்கணிக்கிறோம்'-போராட்டத்தில் இறங்கிய கிராம மக்கள்

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
'We are boycotting the election'-Village people on strike

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில்  சிதம்பரம் அருகே தேர்தலைப் புறக்கணிப்பதாக கிராம மக்கள் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம், தீர்த்தாம்பாளையம் கிராமத்தில் 6500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். தீர்த்தாம்பாளையத்தில் இருந்து பு.முட்லூர் வந்து சேர 3 கிலோ மீட்டர் தொலைவு தூரம் உள்ளது. இதனால் விழுப்புரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலை பணி நடைபெற்று வருகிறது. இதனால் சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வந்த பொதுமக்களின் சாலையை மறித்து, மாற்றி அமைத்து மேலும் 1.6 கிலோ மீட்டர் அதிகரித்து 4.6 கிலோ மீட்டர் தூரத்தில் மாற்றுப் பாதையை அமைத்து தருவதால் ஊர் பொதுமக்கள் அடைகிறார்கள். எனவே தீர்த்தாம் பாளையம் பகுதியில் சுரங்க பாதை (சப்வே) அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து பேராடி வருகின்றனர்.

இந்நிலையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்தும், செவிமடுக்காத அரசியல்வாதிகளையும், அவர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தலையும் முற்றிலும் புறக்கணிப்பதாக அறிவித்து பதாகைகள் வைத்துள்ளனர். மேலும் ஞாயிற்றுக்கிழமை அன்று கிராம மக்கள் பதாகை மற்றும் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.