Skip to main content

பாத்ரூமில் ஏட்டு மர்ம மரணம்! குடும்பப் பிரச்சனையா? பணிச்சுமை காரணமா? போலீஸ் விசாரணை

Published on 02/06/2020 | Edited on 02/06/2020


நெல்லை மாவட்டத்தின் வி.கே.புரத்தை சேர்ந்த பிச்சையா என்பவரின் மகன் அய்யப்பன் (38) 2003 பேட்ஸை சேர்ந்த போலீஸ் காவலர். தற்போது தென்காசி மாவட்டத்தின் ஆழ்வார்குறிச்சிக் காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கீதா. தம்பதியருக்கு அஜய், விஜய் என இரு மகன்கள். கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே ஆழ்வார்குறிச்சியில் வசித்து வருகிறார். 


நேற்று காலை அய்யப்பன் வீட்டிலுள்ள பாத்ரூமிற்கு சென்றார். வெகு நேரமாகியும் திரும்பி வராததால் பதை, பதைத்த குடும்பத்தினர் பாத்ரூம் கதவை உடைத்து உள்ளே சென்றபோது அய்யப்பன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

தகவல் போய் ஸ்பாட்டுக்கு வந்த கடையம் இன்ஸ்பெக்டர் ஆதிலட்சுமி, அய்யப்பனின் உடலை கைப்பற்றி தென்காசி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தவர், அய்யப்பனின் மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகிறார்.

 

ஆழ்வார்குறிச்சி காவல் நிலையத்தில் போதிய காவலர்கள் இன்றிக் குறைவான காவலர்களுடன் இயங்கிவருவதால், 12 பேர் மட்டுமே மொத்த பணியை கவனிக்க வேண்டிய நிலை. 60 கிராமங்களை இவர்களால் சமாளிக்க முடியவில்லை. எனவே கரோனா ஊரடங்கு காரணமாக அய்யப்பன் உட்பட அனைத்து போலீசாரும் பணிச்சுமை காரணமாக மன அழுத்தத்தில் உள்ளனர் என்றும் சொல்கின்றனர். மேலும் அய்யப்பனுக்கு இந்தப் பிரச்சனையோடு அவருக்கு குறைந்த அளவு ரத்த அழுத்தப் பிரச்சனையுமிருந்திருக்கிறது. இதுதவிர அவருக்கு ஓய்வும் அவ்வளவாகக் கிடையாதாம். எனவே மரணத்திற்கான காரணம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்கிறார்கள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.