Skip to main content

ஓசூரில் வேன் ஓட்டுநர் கத்தியால் குத்திக் கொலை! மனைவியைக் கண்டித்ததால் தம்பி வெறிச்செயல்!

Published on 11/01/2023 | Edited on 11/01/2023

 

family issue one passed away police investigation in Hosur

 

ஓசூரில், மனைவியைக் கண்டித்ததால் அண்ணன் என்றும் பாராமல் கத்தியால் சரமாரியாகக் குத்திக்கொலை செய்த தம்பி உள்ளிட்ட இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பேகேப்பள்ளியைச் சேர்ந்தவர் அன்னையப்பா. இவருடைய மகன் சென்னப்பா என்கிற சேகர் (37). வேன் ஓட்டுநர். அன்னையப்பாவின் தம்பி கிருஷ்ணப்பா. இவருடைய மகன் முனிராஜ் என்கிற விஜய் (25). அந்த வகையில் சென்னப்பாவும், முனிராஜும் அண்ணன், தம்பி ஆகின்றனர். இவர்கள் இருவரின் வீடுகளும் அருகருகில்தான் இருக்கின்றன. இந்நிலையில், ஜன. 8ம் தேதி இரவு முனிராஜ் மனைவி மதுவுக்கும், சென்னப்பாவின் தந்தைக்கும் இடையே ஏதோ வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் சென்னப்பா, முனிராஜின் மனைவி மதுவைக் கண்டித்துள்ளார்.

 

இந்நிலையில் வீட்டிற்கு வந்த முனிராஜிடம், நடந்த சம்பவத்தைக் கண்ணீருடன் மது கூறியுள்ளார். இதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த முனிராஜ், தான் வீட்டில் இல்லாத நேரத்தில் தன் மனைவியைக் கண்டித்தது தவறு எனக்கூறி, சென்னப்பாவிடம் தகராறு செய்தார். பக்கத்து வீட்டில் வசிக்கும் முனிராஜின் நண்பரான பசவராஜ் மகன் ரேணுகா ஆரத்யா (20) மற்றும் பேகேப்பள்ளியைச் சேர்ந்த சக்தி (22) ஆகியோரும் அவருக்கு ஆதரவாக சென்னப்பாவிடம் தகராற்றில் ஈடுபட்டனர்.

 

இதனால் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. முனிராஜும் அவருடைய நண்பர்களும் சென்னப்பாவை சரமாரியாகத் தாக்கினர். இந்நிலையில் வீட்டில் இருந்து கத்தியை எடுத்து வந்த முனிராஜ், சென்னப்பாவை சரமாரியாகக் குத்தினார். பலத்த காயம் அடைந்த அவர் அங்கேயே மயங்கி விழுந்தார். சென்னப்பாவின் குடும்பத்தினர் அவரை மீட்டு, ஓசூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி சென்னப்பா இறந்தார்.

 

இதுகுறித்து தகவல் அறிந்த ஓசூர் சிப்காட் காவல் ஆய்வாளர் சாவித்திரி மற்றும் காவலர்கள் சடலத்தை மீட்டு, உடற்கூராய்வுக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முனிராஜ் மீது காவல்துறையினர் கொலை வழக்குப் பதிவு செய்தனர். இந்தக் கொலை தொடர்பாக முனிராஜ், அவருடைய கூட்டாளி ரேணுகா ஆரத்யா ஆகிய இருவரையும் கைது செய்தனர். மற்றொருவரைத் தேடி வருகின்றனர்.

 

இது ஒருபுறம் இருக்க, உடற்கூராய்வு முடிந்த பிறகு சென்னப்பாவின் உடல் அவருடைய வீட்டுக்குக் கொண்டு வரப்பட்டது. வீட்டில் உட்கார்ந்திருந்த அவருடைய தந்தை அன்னையப்பாவை அஞ்சலி செலுத்த அழைத்தனர். அப்போது அவர் சரிந்து கீழே விழுந்தார். அவர் அமர்ந்திருந்த நிலையிலேயே மாரடைப்பில் இறந்துவிட்டது தெரிய வந்தது. மகன் கொலையுண்ட அதிர்ச்சியில் தந்தையும் மாரடைப்பில் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Next Story

தவறி விழுந்த தச்சு தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Tragedy of the fallen carpenter

தஞ்சை சிங்கபெருமாள்குளம் மெயின் ரோடு ரெட்டி பாளையத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகன் ராஜேந்திரன் (வயது 49). தச்சு தொழிலாளி. இவரது மனைவி ஹேமா (வயது 44). திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. ராஜேந்திரன் திருவரங்கம் மாம்பழ சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் தங்கி இருந்து தச்சு வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் வேலையின் போது தவறி கீழே விழுந்தார். இதில் காயப்பட்ட அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் ஆனால் சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருவரங்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.