Skip to main content

20 வருடங்களாக மண்ணெண்ணெய் வெளிச்சத்தில் படிக்கும் மாணவிகள்! ஆட்சியரிடம் மனு!

Published on 20/12/2021 | Edited on 20/12/2021

 

‘Families living without basic amenities for 20 years’-Petition to the District Collector

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் தொகுதியில் இருக்கும் குஜிலியம்பாறை தாலுகா கோட்ட நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு காளீஸ்வரி என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர். கடந்த 20 வருடங்களுக்கு முன்பு முனியப்பனுக்கு தமிழக அரசின் சார்பில் தொகுப்பு வீடு வழங்கப்பட்டது முதல் தற்போது வரை வீட்டிற்கு தேவையான குடிநீர் வசதி, மின்சார வசதி செய்து தரப்படவில்லை.

 

‘Families living without basic amenities for 20 years’-Petition to the District Collector
ஆட்சியர்

 

இதுகுறித்து முனியப்பன் பலமுறை  மாவட்ட கலெக்டர் மற்றும் மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் இவர்களது மூன்று குழந்தைகளும் மண்ணெண்ணெய் விளக்கில் தான் வீட்டில் படித்து வருகின்றனர். மேலும் தம்பதியின் மூத்த மகள் இந்திராணி பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

‘Families living without basic amenities for 20 years’-Petition to the District Collector

 

இந்த நிலையில் தான் மாவட்ட கலெக்டர் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பாதிக்கப்பட்ட முனியப்பன், அவருடைய மனைவி மற்றும்  3 பள்ளி மாணவிகள் குடும்பத்தினர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மாவட்ட கலெக்டர் விசாகனிடம்  புகார் மனு கொடுத்தனர். அந்த புகார் மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக  உறுதி கூறியிருக்கிறார்.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தலை சீர்குலைக்க விஷமிகள் பொய் பிரச்சாரம்! சிபிஎம் வேட்பாளர் புகார்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
CPM candidate complains that poisoners are spreading lies to disrupt elections!

தேர்தலை சீர்குலைக்க சமூக வலைத்தளங்களில் விஷமிகளால் சில வீடியோவை வைத்து பொய் பிரச்சாரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிபிஎம் வேட்பாளர்  சச்சிதானந்தம் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.                              

இந்தநிலையில் இந்த தேர்தலை சீர்குலைக்க சில விஷமிகள் வாட்ச் அப் போன்ற வலைத் தளங்களில் பொய்யான வீடியோவை பரப்பி வருகிறார்கள். இது தொடர்பாக சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் திண்டுக்கல் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடமும் தேர்தல் ஆணையத்திடமும் புகார் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மீது அவதூறு பரப்பும் வகையில் வெட்டி ஒட்டப்பட்ட வீடியோ ஒன்றை வாட்ச் அப் சமூக வலைதளங்களில் விஷமிகள் பரப்பி வருகிறார்கள். உடனடியாக தேர்தல் நடத்தும் அலுவலர் இதில் தலையிட்டு இந்த அவதூறு பரப்பும் ஒளிபரப்பை தடை செய்ய வேண்டும். அவ்வாறு அவதூறு பரப்பியவர்கள் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஆர்.சச்சிதானந்தம் தனது புகார் மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Next Story

‘பகல் 12 முதல் 3 வரை வெளியே வர வேண்டாம்’ - மதுரை மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Advice to Madurai people Don't come out between 12 noon and 3 am

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. 

இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மதுரை மாவட்ட மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “வெயில் அதிகரிப்பு காரணமாக மதுரையில் பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம். வெயில் தாக்கம் மற்றும் அனல்காற்று அதிகமாக வீசுவதால் மக்கள் முன்னெச்சரிக்கயாக இருக்க வேண்டும்.

அதாவது, வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் கால்நடைகளை அனுமதிக்கக் கூடாது. தாகம் எடுக்காவிட்டாலும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். பழச்சாறுகள் அருந்த வேண்டும். அவசர கால தேவைகளுக்கு 1077 மற்றும் 1070 ஆகிய இலவச அழைப்பு எண்களை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்தார்.