Advertisment

பொய் வழக்குகளால் அதிமுகவினரை அசைக்க கூட முடியாது - நத்தம் விஸ்வநாதன்

jkl

முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சில தினங்களுக்கு முன்பு சோதனை செய்தனர். இது அதிமுக தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், வரும் 28ஆம் தேதி (நாளை) திமுக அரசை எதிர்த்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், "பொய் வழக்குகளால் அதிமுகவை அசைக்க கூட முடியாது. எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுகவை ஆலமரம் போல் ஜெயலலிதா உருவாக்கி வைத்துள்ளார். அதிமுக என்பது விஸ்வாசமிக்க தொண்டர்களைக் கொண்ட இயக்கம். இன்னும் நூறு ஆண்டுகள் அதை யாரும் அசைத்துக் கூட பார்க்க முடியாது" என்றார்.

Advertisment

admk natham viswanathan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe