Skip to main content

போலி டீத்தூள், சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல்...

Published on 15/08/2020 | Edited on 15/08/2020
pennadam

 

 

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகில் உள்ளது இறையூர். இங்குள்ள ஒரு வீட்டில் போலி டீத்தூள் சிகரெட் பாக்கெட்டுகள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் கிருபா லட்சுமி, சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் சக போலீசார் முருகேசன் நகரில் உள்ள ஷாஜஹான் என்பவரது வீட்டிற்க்கு சென்று திடீர் சோதனை செய்தனர்.

 

அப்போது ராயல்ஸ் என்ற பெயரில் கேரளா டெஸ்ட் டீகோல்டுகப் டீ அசாம் டீசன் டீ இரட்டை கிளி டீ இப்படி பலவகையான கலப்பட அரை கிலோ கொண்ட 14 போலி டீத்தூள் பாக்கெட் மூட்டைகளும் பாரிஸ் என்ற பெயரில் ரூபாய் 450 மதிப்புள்ள 125 போலி சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்தனர். போலீஸார் சம்பவத்தின்போது விருத்தாச்சலம் டிஎஸ்பி இளங்கோவன் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து போலி டீத்தூள் சிகரெட் பெட்டிகள் பதுக்கி வைத்திருந்த ஷாஜகான் என்பவரிடம் நேரில் விசாரணை நடத்தினார்.

 

இதனையடுத்து நல்லூர் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் மாரிமுத்து அவர்களிடம் பறிமுதல் செய்த போலி டீ தூள் சிகரெட் பாக்கெட்டுகளை போலீசார் ஒப்படைத்தனர். மேலும் இதுகுறித்து போலீஸார் ஷாஜகானிடம் போலி டீத்தூள் சிகரெட் பாக்கெட்டுகள் எங்கிருந்து வரவழைக்கப்பட்டன. அதை கொடுத்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி அவரை கைது செய்துள்ளனர். கலப்பட டீத்தூள் சிகரெட் பாக்கெட்டுகள் மொத்த மதிப்பு ஒரு லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் என்று உணவு பாதுகாப்பு அலுவலர் தெரிவித்துள்ளார். போலி டீத்தூள் சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்துள்ள சம்பவம் பெண்ணாடம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; ஆண் நண்பருடன் சேர்ந்து வாலிபரை கொலை செய்த பெண்

Published on 26/05/2023 | Edited on 26/05/2023

 

cuddalore pennadam murugankudi village incident 

 

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ள முருகன்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பழகன் இவரது மனைவி கவிதா (வயது 28). இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் விருத்தாசலம் பாலக்கரை பகுதியில் பட்டாணி கடை வைத்திருப்பவர் ஆறுமுகம். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்து வந்து பாலக்கரை பகுதியில் பட்டாணி கடை வைத்து நடத்தி வருகிறார்.

 

ஆறுமுகத்தின் கடைக்கு கவிதா பட்டாணி வாங்கச் சென்ற போது இருவருக்கும் இடையில் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் நாடைவில் திருமணத்தை மீறிய உறவாக  மாறியது. இருவரும் விருத்தாசலம் பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பு.கிள்ளனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வைத்தி (வயது 55). இவர் ஆறுமுகத்தின் நண்பர். ஆறுமுகத்தை பார்க்க அடிக்கடி விருத்தாசலம் சென்ற வைத்திக்கும் ஆறுமுகத்துடன் வசித்து வந்த கவிதாவிற்கும் இடையே திருமணத்தை தாண்டிய உறவு ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஆறுமுகத்திற்கு தெரிய வரவே கவிதாவை கண்டித்துள்ளார்.

 

இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை கவிதா ஆறுமுகத்திடம் தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு மறுநாள் வருவதாக கூறிவிட்டு புறப்பட்டு சென்றுள்ளார். இதில் சந்தேகம் அடைந்த ஆறுமுகம் கையில் பெட்ரோல் வாங்கிக் கொண்டு கவிதாவுக்கு தெரியாமல் அவரை பின் தொடர்ந்துள்ளார். கிள்ளனூரில் உள்ள வைத்தி வீட்டிற்கு சென்று பார்த்த போது அங்கு வைத்தியம் கவிதாவும் தனிமையில் இருந்துள்ளனர். இதை கண்டு கோபமடைந்த ஆறுமுகம் தன்னுடன் வருமாறு கவிதாவை அழைத்துள்ளார். இதனால் கவிதா, ஆறுமுகம், வைத்தி மூவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆறுமுகம் தான் எடுத்து வந்திருந்த பெட்ரோலை கவிதா மேல் ஊற்றுவதற்கு முயல கவிதாவும் வைத்தியும் ஆறுமுகம் மீது அந்த பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளனர்.

 

இதில் ஆறுமுகம் பலத்த காயமடைந்துள்ளார். அவரின் அலறல் சத்தத்தை கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் உயிரிழந்தார். இது குறித்து உளுந்தூர்பேட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கவிதா மற்றும் அவரது ஆண் நண்பர் வைத்தி இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் படி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

 

 

Next Story

தூய்மைப் பணியாளர் உயிரிழப்பு; சக ஊழியர்கள் மறியல்

Published on 26/05/2023 | Edited on 26/05/2023

 

cuddalore pennadam town panchayat  worker related incident 

 

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளராக வேலை செய்து வருகிறார் சோழன் நகர் பகுதியைச் சேர்ந்த பாபு (வயது 40). இவர் கடந்த 19 ஆம் தேதி பேரூராட்சி பகுதியில் உள்ள சிலுப்பனூர் சாலையில் கழிவுநீர் கால்வாய் அடைப்பை சரி செய்து கொண்டிருந்தபோது மயங்கி கீழே விழுந்துள்ளார். அவரை மீட்ட சக தொழிலாளர்கள் திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்க்கப்பட்டார். அங்கு பாபுவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

 

இந்நிலையில் பாபு இறந்தது குறித்த தகவல் அறிந்த தூய்மைப் பணியாளர்கள், பெண்ணாடம் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், இறந்த பாபுவின் குடும்பத்திற்கு பேரூராட்சி நிர்வாகம் நிவாரணம் வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும் என்று கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இதுகுறித்து தகவல் அறிந்த பெண்ணாடம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர் பிரகஸ்பதி, வட்டாட்சியர் ரவிச்சந்திரன் ஆகியோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் முடிவில் இறந்து போன பாபுவின் மனைவி தீபாவுக்கு பேரூராட்சியில் வேலை வழங்குவது குறித்து அதிகாரிகளிடம் பேசி முடிவு செய்யப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். அதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். தூய்மைப் பணியாளர் திடீர் மரணம் அவரது குடும்பத்தினர் மற்றும் சக ஊழியர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.