Skip to main content

மாந்திரீகம் செய்வதாக ஏமாற்றி வந்த போலி சாமியார் கற்பழிப்பு வழக்கில் கைது

Published on 30/05/2019 | Edited on 30/05/2019

 

திண்டிவனத்தில் மாந்திரீகம் செய்வதாக ஏமாற்றி வந்த போலி சாமியார் கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த பெண்ணும் கைதானார்.
 

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ஓங்கூரில் வசித்து வருபவர் மணி என்கின்ற செல்வமணி (40). இவரது சொந்த ஊர் காஞ்சிபுரம் மாவட்டம் சூணாம்பேடு கிராமம் ஆகும். இவருக்கு திருமணமாகியுள்ள நிலையில் இவருடன் மனைவி சேர்ந்து வாழவில்லை என கூறப்படுகிறது.


  Tindivanam police Arrested


 


 இந்நிலையில் இவர் மாந்திரீகம், பில்லி சூனியம் நீக்குவதாக கூறி விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களான பாதிரிராயநல்லூர், காட்ராம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சென்று பல்வேறு நபர்களிடம் மாந்திரீகம் செய்வதாகவும், பில்லி சூனியம் வைப்பதாகவும் கூறி கடந்த சில ஆண்டுகளாக ஏமாற்றி வந்துள்ளதாக தெரிகிறது.

 

இவர் மாந்திரீகம், பில்லி சூனியம் எடுப்பது போன்று பலரின் வீடுகளுக்குசென்று பலரது வீட்டு பெண்களை கவர்ந்து தன்னுடன் வைத்து அவ்வவப்போது சில காலம் குடும்பம் நடத்தி வந்துள்ளார். அதன் பின்னர் அடுத்த குடும்பத்தை கணவரிடம் இருந்து மனைவியை பிரித்து தன்வசமாக்கி சிறிதுகாலம்  குடும்பம் நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார்.


 

இதே போன்று மாந்திரீகம் செய்வதாக கூறி  போலி சாமியாராக பல பேரை ஏமாற்றி வந்த செல்வமணி கடந்த ஒரு  வருடத்திற்கு முன்னர் காஞ்சிபுரம் மாவட்டம், வடமலைப்பாக்கம் கிராமத்திற்கு இதே போன்று மாந்திரீகம் செய்வதற்குவந்த அழைப்பின் பேரில் சென்ற அவர் அங்கிருந்த கருணாகரன் என்பவரின் மகளுக்கு ஏற்பட்ட காதலை பிரித்து தருமாறு அவர்களின் பெற்றோர் வைத்த கோரிக்கையை நிறைவேற்றுவதாக கூறியுள்ளார். இந்த ஊரில் கோயில் கட்டுவதினால் இங்கிருந்தால் உங்க பெண்ணுக்கு ஆகாது என்று கூறி தனது வீட்டுக்கு மைனர் பெண்ணாண வடமலைப்பாக்கம் கருணாகரனின் மகளை அழைத்து வந்துள்ளார். கடந்த ஒரு வருடங்களாக தன்னுடன் வைத்து படிக்க வைத்து வந்துள்ளார். 


 

இந்நிலையில் தன்னுடன் இருந்த பெண்ணுக்கு 19 வயதான பிறகு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பலமுறை வற்புறுத்தி உள்ளார். இந்நிலையில் அப்பெண் ஒத்துழைக்காத நிலையில் தன்னுடன் தற்போது வாழ்ந்து வரும் மற்றொருவரின் மனைவியான ஹேமாவின்(40) உதவியோடு கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஓங்கூரில் உள்ள தனது வீட்டில் 19 வயதான  கருணாகரனின் மகளை பாலியல் அத்துமீறல் செய்துள்ளார்.
 

இந்நிலையில் அப்பெண் போலி சாமியார் தன்னை சீரழித்தது குறித்து தனது தந்தையிடம் தெரிவித்ததை அடுத்து அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார்  மாந்திரீகம் செய்வதாக கூறி ஏமாற்றி இளம்பெண்ணை  கற்பழித்த செல்வமணி என்கின்ற மணியையும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட ஹேமா என்பவரையும் கைது செய்தனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.