Skip to main content

பிள்ளைகளுக்கு பாலியல் தொல்லை; போலிசாமியாருடன் தாய் போக்சோவில் கைது

Published on 23/11/2022 | Edited on 23/11/2022

 

Fake preacher and young woman both arrested under POCSO Act

 

பெற்ற குழந்தைகளை போலி சாமியாருடன் சேர்ந்து பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய தாய் மற்றும் போலிசாமியார் இருவரும் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள ஓடைக்கால் கிராமத்தைச் சேர்ந்த அர்ஜுனுக்கும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இளம்புளிவயல் கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமாரிக்கும்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 11 வயதில் ஒரு ஆண்குழந்தையும், எட்டு வயதில் ஒரு பெண்குழந்தையும் உள்ளன. உள்ளூரில் சரிவர வேலை கிடைக்காததால் அர்ஜுன் சென்னையில் வேலை செய்து வீட்டுக்கு பணம் அனுப்பி வருகிறார். அந்தப் பணம் போதாது என்றும் இன்னும் அதிகப் பணம் வேண்டும் என்றும் பேராசையில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் செல்வகுமாரியிடம், திருப்பத்தூரில் உள்ள  சொக்கலிங்கம் சுவாமிகள் சித்தர் பீடம் ஒன்று உள்ளது. அங்கு சென்று பரிகாரம் செய்தால் செல்வம் செழிக்கும் என பெண் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.  

 

இதனையடுத்து அந்த சித்தர் பீடத்தில் உள்ள ராமகிருஷ்ணன் என்ற சாமியாரிடம் பரிகாரம் பெறுவதற்காக அவரை அடிக்கடி சந்தித்து வந்துள்ளார். அப்போது சாமியார், செல்வகுமாரியிடம் பரிகார பூஜை செய்யவேண்டும் எனக் கூறி காரைக்குடியில் உள்ள தனது வீட்டிற்கு வரவழைத்து ஆசை வார்த்தை கூறி பலமுறை பாலியல் உறவு கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. அந்த வகையில் ஒருநாள் செல்வகுமாரி சாமியார் ராமகிருஷ்ணன் வீட்டிற்கு தனது குழந்தைகளுடன் வந்துள்ளார். அன்று இரவு மூவரும் சாமியார் ராமகிருஷ்ணன் வீட்டிலேயே தங்கிய நிலையில், சாமியாருடன் சேர்ந்து செல்வகுமாரி தனது குழந்தைகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளார். அத்துடன் தன் பிள்ளைகள் கண்முன்னே சாமியாருடன் செல்வகுமாரி தனிமையில் இருந்துள்ளார். 

 

இதுகுறித்து, தகவல் அறிந்த கணவர் அர்ஜுன் சாமியார் குடியிருந்து வரும் நாச்சியாபுரம் காவல் நிலையத்தில் சாமியார் மற்றும் தனது மனைவி  மீது புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவர்கள் இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

 

சமீபத்தில் கேரளாவில் செல்வம் செழிக்க வேண்டி பெண் ஒருவர் இரு பெண்களை நரபலி கொடுத்ததுடன், சாமியாருடன் தனிமையில் இருந்த சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில் தற்போது பெற்ற குழந்தைகள் கண் முன்னே போலி சாமியாருடன் தனிமையில் இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.