Skip to main content

போலி பாஸ்போர்ட் – கரோனா பாதிக்கப்பட்டவரா... திகிலில் போலீஸ்!

Published on 13/04/2020 | Edited on 13/04/2020

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் புதுக்கோட்டையை தவிர மற்ற மாவட்டங்களில், கரோனா பாதித்தவர்கள் மொத்தம் 115 பேர் உள்ளனர். இதில் டெல்லி நிகழ்ச்சி மற்றும் வெளிநாடு சென்று திரும்பியவர்களை சுகாதாரத்துறை கண்டறிந்து அவர்களை சிகிச்சைக்காக அழைத்து வருகின்றனர்.

  Fake passport - Corona... police investigation


வெளிநாட்டிற்கு செல்லாத ஒருவரை வெளிநாட்டுக்கு சென்றதாக கட்டாயப்படுத்தி அழைத்து, சோதனைக்கு உட்படுத்தி அரசு மருத்துமனையில் சிகிச்சை அளித்து வருகின்ற சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், வாலவந்தி பகுதியை சேர்ந்த இவர் அந்த பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். இவர்கள் குடும்பத்தினர் தொடர்ந்து தலைமுறை, தலைமுறையாக மளிகைக்கடை நடத்தி வருபவர்கள். இந்த நிலையில் திடீர் என சுகாதாரதுறையினர் தாசில்தார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவரின் வீட்டிற்கு சென்று வெளிநாட்டில் இருந்து வந்தும், ஏன் இவ்வளவு நாளாக பரிசோதனைக்கு வரவில்லை என குண்டுக்கட்டாக தூக்கி 108 ஆம்புலன்சில் ஏற்றினர்.

nakkheeran app



ஆம்புலன்சில் ஏறும் போது கூட ஐயோ.. என் வாழ்க்கையில் நான் வெளிநாட்டுக்கு சென்றதே இல்ல..நீங்க நினைக்கிற ஆள் இல்ல என எவ்வளவோ கதறியும், விடாமல் அவரை காட்டாயப்படுத்தி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அவருடைய அபாயக்குரலை கேட்டு, அக்கம்பக்கத்து வீட்டினர் ஓடிவந்து இவர் இதுவரைக்கும் எந்த வெளிநாட்டுக்கும் சென்றதில்லையே நாங்க தினமும் இங்க தானே பார்க்கிறோம் இவர் எப்படி போயிருக்க முடியும் என்று வாக்குவாதம் செய்தும் அதிகாரிகள் எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளிக்க ஆரம்பித்தனர்.

இது குறித்து போலீசிடம் விசாரித்தபோது, போலி பாஸ்போர்ட் தயாரித்த மர்ம ஆசாமி இவரின் முகவரியை, பயன்படுத்தி வெளிநாடு சென்று வந்திருக்கிறார். தற்போது வெளிநாடு சென்று திரும்பியவர்கள் பட்டியலை நாங்கள் எடுத்தபோது இவரின்  பெயரும், வீட்டு முகவரியும் வந்தால் இவர் தான் அவர் என்று நினைத்து அழைத்து சென்று விட்டோம். அப்போது உண்மையில் அவர் பெயரை பயன்படுத்தி வெளிநாட்டுக்கு சென்ற அந்த மர்ம ஆசாமி யார்? அவருக்கு கரோனா நோய் தொற்று அவருக்கு இருக்கிறதா என அந்த மர்ம ஆசாமியை கண்டுபிடிக்க வேண்டிய நெருக்கடி, திருச்சி போலீஸுக்கு பெரிய தலைவலியை கொடுத்திருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.