Skip to main content

தொடரும் போலி மது தயாரிப்பு... 5 பேர் கைது...

Published on 22/08/2020 | Edited on 22/08/2020

 

 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகிலுள்ள தென்பாசார் ஓடை பகுதியில் போலி மதுபானம் தயாரிக்கப்பட்டதை கண்டுபிடித்துள்ளனர். காவல் துறையைச் சேர்ந்த ஒரு அதிகாரிக்கு போலி மதுபானம் தயாரிப்பு சம்பந்தமாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அவரது உத்தரவின் பேரில் திண்டிவனம் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் கீதா, குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் ஓடை பகுதிக்கு அதிகாலை 4 மணி அளவில் யாருக்கும் தெரியாமல் ரகசியமான முறையில்  சென்று திடீர் ரைடு நடத்தினார்கள்.

 

அப்போது அந்த பகுதியில் போலி மதுபான ஆலை இயங்கி வந்துள்ளதை கண்டுபிடித்துள்ளனர். இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் திண்டிவனம் அருகிலுள்ள கேணிப்பட்டு கிராமத்தை சேர்ந்த ஏழுமலை, ஆனந்தபாபு, நாராயணன், அன்பு, தென்பாசார் கிராமத்தை சேர்ந்த வீரப்பன் என்பது தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும் காவல் நிலையம் அழைத்து சென்று தொடர் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் போலி மதுபானங்கள் தயாரிக்க பயன்படுத்திய கச்சா பொருட்கள் காலி பாட்டில்கள் அதற்கான பேரல்கள் அட்டைப் பெட்டிகளில் அடைக்கப்பட்டிருந்த ஆயிரத்தி 500 குவாட்டர் பாட்டில்கள் போலி மருந்து தயாரிக்க பயன்படும் தண்ணீர் கேன்கள் அதற்கான இயந்திரங்கள் மது பாட்டில்களில் ஒட்டுவதற்கு பயன்படுத்தப்படும் ஸ்டிக்கர்கள் சரக்குகளை வெளியூர்களுக்கு கொண்டு செல்லும் மினிவேன் இரண்டு பைக்குகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இவற்றின் மொத்த மதிப்பு 7 லட்சம் என்று போலீசார் தெரிவிக்கின்றனர்.

 

இதேபோன்று போலி மது தயாரிக்கும் கும்பலை போலீசார் அவ்வப்போது கைது செய்து வழக்கு பதிவு செய்கிறார்கள். நீதிமன்றத்தின் மூலம் சிறைக்கும் அனுப்புகிறார்கள். ஆனால் போலி மது தயாரிப்பு தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்றுதான் வருகிறது.

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் கள்ளச்சாராய உற்பத்தி செய்வதும் காவல்துறை அவ்வப்போது சென்று அவர்களை கைது செய்வதும் தொடர் சம்பவங்களாக உள்ளன. மேலும் சில மாதங்களுக்கு முன்பு செஞ்சி அருகே போலி மதுபானம் தயாரித்தவர்களை போலீசார் கைது செய்தனர். அதற்கு சில மாதங்கள் கழித்து மயிலம் அருகே போலி மதுபான தயாரிப்பு கண்டுபிடித்து அதில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். பெரம்பலூர் அருகே இதேபோன்று போலி மதுபானம் தயாரித்து தமிழகத்தையே பரபரப்பாகி பெரிய கும்பலை போலீசார் கைது செய்தனர். இப்படி போலி மதுபான தயாரிப்பு தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. அதில் சம்பந்தப்பட்டவர்களை போலீசார் கைது செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். இதற்கு முற்றுப்புள்ளி தான் போலீசாரால் வைக்க முடியவில்லை என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வரதராஜ பெருமாள் கோவிலில் நகை திருடிய அரச்சகர்; காப்பு போட்ட காவல்துறை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Archakar arrested for stealing jewels from Varadaraja Perumal Temple in Coimbatore

கோவை மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆண்டுதோறும் நகைகள் சரிபார்க்கும் பணி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் கோவை இந்து சமய அறநிலை துறை நகை சரிபார்ப்பு துணை ஆணையர் விஜயலட்சுமி தலைமையில் நகை சரிபார்ப்பு பணி நடைபெற்றது. இதில் மருதமலை கோவிலின் அறங்காவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டு திருக்கோவிலிலுள்ள அனைத்து நகைகளையும் சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

மருதமலை கோவிலின் உபகோவிலான கரி வரதராஜ பெருமாள் கோவில் ஒன்று உள்ளது. இந்த நிலையில் நகையை சரிபார்க்கும் பணியின் போது கரி வரதராஜ பெருமாள் கோவிலின் தினக்கூலி அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் என்பவர் அம்மனுக்கு அணிவிக்கப்படும் 14 கிராம் எடை உள்ள 7  பொன்தாலி 14 பொன்குண்டு ஊசிகள் மற்றும் 150 கிராம் எடையுள்ள வெள்ளி பூணூல் ஆகியவற்றை சரிபார்ப்பு பணிக்காக கொண்டு வந்து கொடுத்துள்ளார்.

அவற்றை அதிகாரிகள் சரிபார்த்த போது அந்த நகைகள் அனைத்தும் போலியானது என கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரிடம் அறங்காவலர் மற்றும் கோவில் அதிகாரிகள் விசாரணை செய்ததில் திருடியதை கோவில் அர்ச்சகர் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அறங்காவலர்கள் குழு கொடுத்த புகாரின்படி கோவில் அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Next Story

மாமியாரை துடிதுடிக்க கொன்ற மருமகன்; சென்னையில் பயங்கரம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Son-in-law incident mother-in-law in Chennai

சென்னை மாதவரம் கண்ணன் நகரில் வசித்து வருபவர்கள் புஷ்பராஜ் - ஜான்சி தம்பதியினர் புஷ்பராஜ் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். மனைவி ஜான்சி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர்களுடன் ஜான்சியின் தாய் வசந்தியும் வசித்து வந்துள்ளார். புஷ்பராஜ் தினமும் மது அருந்திவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்ததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு புஷ்பராஜ் மீண்டும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால் மனைவி ஜான்சியுடன் வாக்குவாம் ஏற்பட்டுள்ளது. மாமியார் வசந்தி தங்களுடன் வசித்து வருத்து வருவதால்தான் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதாக கருதிய புஷ்பராஜ் மனைவி வெளியே சென்ற போது மாமியார் வசந்தியிடம் இதுகுறித்து தகராறு செய்துள்ளார்.

இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த புஷ்பராஜ் மாமியார் வசந்தியை கட்டையால் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த வசந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார். இதையடுத்து புஷ்பராஜ் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வசந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த  புஷ்பராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.