Skip to main content

சிதம்பரத்தில் போலி மதுபான தொழிற்சாலை கண்டுபிடிப்பு: ஒருவர் கைது!!

Published on 15/06/2019 | Edited on 15/06/2019

  சிதம்பரத்தில்  போலி மதுபான தொழிற்சாலையை கண்டுபிடித்த  காவல்துறை ஒருவரை கைது செய்துள்ளார்.

 

சிதம்பரம் அருகே உள்ள சேத்தியாதோப்பில் விழுப்புரம் மத்திய பபுலனாய்வு கூழு இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ், சப்-இன்ஸ்பெக்டர் அழகிரி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தது. அந்த மோட்டார் சைக்கிளை போலீசார் வழிமறித்து சோதனை மேற்கொண்டனர்.மோட்டார் சைக்கிளில் ஓட்டிவந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

 

 Fake liquor factory discovery in Chidambaram: one arrested



அப்போது சிதம்பரம் அருகே உள்ள  கருநாகரநல்லூர் மேற்கு தெருவை சேர்ந்த அன்பழகன் மகன் சுந்தர் (26).என்பது தெரியவந்தது. இவர் சாராய வியாபாரி இவர் மீது சாராய கடத்திய வழக்கு உள்ளது. மேலும் போலீசார் விசாரித்தபோது. அவர் சிதம்பரம் பழைய புவனகிரி சாலை அருகே காமாட்சி அம்மன் நகரில்  ஒரு மாடி வீட்டில் போலி மதுபான தொழிற்சாலை நடத்தி வந்ததாக விசாரணை யில் தெரியவந்தது.

 

 Fake liquor factory discovery in Chidambaram: one arrested



பின்னர் அவரை அழைத்துக்கொண்டு சிதம்பரம் காமாட்சி அம்மன் நகருக்கு சென்றனர். உடனே போலீசார்  மாடி வீட்டில்  முன்பக்கம் கேட்டை உடைத்து உள்ளே சென்று அறை முழுவதும் சோதனை செய்தனர். அப்போது, 3ஆயிரத்து 550 காலி மது பாட்டில்,மதுவுடன் 2 ஆயிரத்து 710 மது பாட்டில், கேன் 48,  போலி மதுபாட்டில்களும் இருந்தன. இதுதவிர காலி மதுபாட்டில்கள், அதற்குரிய மூடிகள், புதுச்சேரி மதுபான வகை லேபிள்கள், அசல் மதுபான பாட்டில் போல் ‘சீல்’ வைக்க கையால் இயக்கப்படும் இயந்திரம் ஆகியவை இருந்தன. போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். 

 

இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிதம்பரம் மதுவிலக்குப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து சுந்தரை கைது செய்தனர். இதன் மதிப்பு  ரூ.5 லட்சம் மதிப்பில் பொருட்கள் பறிமுதல் செய்து உள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.