Skip to main content

போலி நீதிபதி கைது - கோடிக்கணக்கில் சொத்துக்கள் குவிப்பு...

Published on 12/10/2019 | Edited on 12/10/2019

 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த போலி நீதிபதி சந்திரன் தர்மபுரியில் கைது மேட்டுப்பாளையத்தில் உள்ள சந்திரன் வீட்டில் போலி முத்திரைகள் , கட்டுக்கட்டாக போலி ஆவணங்களையும் போலீசார் கைப்பற்றினர்.

 

Fake judge arrested



கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மணிநகர் பகுதியை சேர்ந்தவர் ஏ.ஆர். சந்திரன். சந்திரன் இவர் சமரச தீர்வு மையம் என்ற போலியான அமைப்பை நிறுவி தான் ஒரு நீதிபதி என்று கூறி மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். சில வழக்கறிஞர்களின் உதவியுடன் மோசடியில் சொத்து சம்பந்தமான பிரச்சனைகளை தீர்த்து வைப்பதாகக் கூறி போலி ஆவணங்கள் தயாரித்து பல்வேறு நபர்களிடம் பல லட்சங்களை ஏமாற்றி மோசடி செய்து வந்துள்ளார். 
 

இதேபோல் சேலம் மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபர் ஜெகநாதன் என்பவருடைய நிலத்தை தர்மபுரியில் போலியான ஆவணங்கள் மூலம் விற்பனை செய்துள்ளார். இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெகனாதன் வழக்கு தொடுத்துள்ளார். இது குறித்து விசாரணை செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து தர்மபுரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த சந்திரனையும் அவருடைய போலி பாதுகாவலரையும் கரூர்  அருகே கைது செய்துள்ளனர். 

 

இதனையடுத்து போலி நீதிபதி சந்திரனை மேட்டுப்பாளையம் அழைத்து வந்து அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர், இதில் 50 க்கும் மேற்பட்ட போலி முத்திரைகளையும் கட்டுக்கட்டாக ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளனர். 12-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள மோசடி நபரான  சந்திரன் தன்னை ஒரு நீதிபதி என்று கூறிக் கொண்டும் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலரையும் அமர்த்திக் கொண்டு பல ஆண்டுகளாக வலம் வந்ததுடன் பலரையும் ஏமாற்றிய பணத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள 10க்கும் மேற்பட்ட வீடுகள், மற்றும் சொத்துக்களையும் வாங்கிக் குவித்துள்ளார். z

இவரை உண்மையான நீதிபதி என்று நம்பிய அண்டை வீட்டார்கள் மிகுந்த மரியாதை கொடுத்து வந்துள்ளனர். இந்நிலையில் போலி நீதிபதி கைது செய்யப்பட்டுள்ளது இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 


 

சார்ந்த செய்திகள்

Next Story

வரதராஜ பெருமாள் கோவிலில் நகை திருடிய அரச்சகர்; காப்பு போட்ட காவல்துறை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Archakar arrested for stealing jewels from Varadaraja Perumal Temple in Coimbatore

கோவை மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆண்டுதோறும் நகைகள் சரிபார்க்கும் பணி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் கோவை இந்து சமய அறநிலை துறை நகை சரிபார்ப்பு துணை ஆணையர் விஜயலட்சுமி தலைமையில் நகை சரிபார்ப்பு பணி நடைபெற்றது. இதில் மருதமலை கோவிலின் அறங்காவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டு திருக்கோவிலிலுள்ள அனைத்து நகைகளையும் சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

மருதமலை கோவிலின் உபகோவிலான கரி வரதராஜ பெருமாள் கோவில் ஒன்று உள்ளது. இந்த நிலையில் நகையை சரிபார்க்கும் பணியின் போது கரி வரதராஜ பெருமாள் கோவிலின் தினக்கூலி அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் என்பவர் அம்மனுக்கு அணிவிக்கப்படும் 14 கிராம் எடை உள்ள 7  பொன்தாலி 14 பொன்குண்டு ஊசிகள் மற்றும் 150 கிராம் எடையுள்ள வெள்ளி பூணூல் ஆகியவற்றை சரிபார்ப்பு பணிக்காக கொண்டு வந்து கொடுத்துள்ளார்.

அவற்றை அதிகாரிகள் சரிபார்த்த போது அந்த நகைகள் அனைத்தும் போலியானது என கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரிடம் அறங்காவலர் மற்றும் கோவில் அதிகாரிகள் விசாரணை செய்ததில் திருடியதை கோவில் அர்ச்சகர் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அறங்காவலர்கள் குழு கொடுத்த புகாரின்படி கோவில் அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.