Skip to main content

பழனியில் போலி ஐஏஎஸ் அதிகாரி கைது!!

Published on 26/10/2021 | Edited on 26/10/2021

 

Fake IAS officer arrested in Palani

 

நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் குமார், இவர் எட்டாம் வகுப்புவரை படித்துள்ளார். பழனி மலையடிவாரத்தில் உள்ள தேவஸ்தான தங்கும் விடுதிக்கு சைரன் பொருத்திய காரில் வந்த குமார், தன்னை ஐஏஎஸ் அதிகாரி என்று கூறிக்கொண்டு தங்கும் விடுதியில் இலவசமாக தங்க அனுமதிக்குமாறு கேட்டுள்ளார். அப்போது தங்கும் விடுதியில் இருந்த மேலாளர் அடையாள அட்டையைக் கேட்டும், பழனியில் உள்ள வருவாய்த்துறை அதிகாரி ஒருவரை பரிந்துரை செய்யவும் கேட்டுள்ளார். அப்போது முன்னுக்குப் பின் முரணாக குமார் பதில் அளித்ததைத் தொடர்ந்து சந்தேகமடைந்த கோயில் ஊழியர்கள், போலீசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

 

போலீசார் வருவதை அறிந்த குமார் காரை விட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளார். துரத்திச் சென்ற கோயில் ஊழியர்கள், குமாரை பிடித்துவந்து பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், மயிலாடுதுறையில் வசித்துவரும்  குமார், காரில் சைரன், தமிழ்நாடு அரசு என்று பதாகையை மாட்டிக்கொண்டு வலம்வந்ததும், பல இடங்களில் தன்னை ஐபிஎஸ் அதிகாரி என்று சொல்லி சலுகைகளைப் பெற்று அனுபவித்ததும் தெரியவந்துள்ளது.

 

கடைசியாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குச் சென்ற குமார், ஐஏஎஸ் அதிகாரி என கூறி  சிறப்பு தரிசனம் செய்துவிட்டு பழனிக்கு காரில் வந்ததும், ஐஏஎஸ் அதிகாரி எனக் கூறி சலுகைகளைப் பெற முயற்சி செய்தபோது பிடிபட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், எலக்ட்ரிக்கல் வேலை செய்யும் குமார், இரண்டு வருடங்களாக இந்தக் காரைப் பயன்படுத்தி பல இடங்களுக்குச் சென்றுவந்தது தெரியவந்துள்ளது. குமார் மீது அரசு முத்திரையைத் தவறாக பயன்படுத்தியது, அரச முத்திரையைப் பயன்படுத்தி ஏமாற்றியது உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவுசெய்த பழனி அடிவாரம் போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பழனி மலை அடிவாரத்தில் போலி ஐஏஎஸ் அதிகாரி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாமியாரை துடிதுடிக்க கொன்ற மருமகன்; சென்னையில் பயங்கரம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Son-in-law incident mother-in-law in Chennai

சென்னை மாதவரம் கண்ணன் நகரில் வசித்து வருபவர்கள் புஷ்பராஜ் - ஜான்சி தம்பதியினர் புஷ்பராஜ் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். மனைவி ஜான்சி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர்களுடன் ஜான்சியின் தாய் வசந்தியும் வசித்து வந்துள்ளார். புஷ்பராஜ் தினமும் மது அருந்திவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்ததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு புஷ்பராஜ் மீண்டும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால் மனைவி ஜான்சியுடன் வாக்குவாம் ஏற்பட்டுள்ளது. மாமியார் வசந்தி தங்களுடன் வசித்து வருத்து வருவதால்தான் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதாக கருதிய புஷ்பராஜ் மனைவி வெளியே சென்ற போது மாமியார் வசந்தியிடம் இதுகுறித்து தகராறு செய்துள்ளார்.

இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த புஷ்பராஜ் மாமியார் வசந்தியை கட்டையால் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த வசந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார். இதையடுத்து புஷ்பராஜ் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வசந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த  புஷ்பராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

ஆட்டோ ஓட்டுநரால் 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
Auto driver arrested under POCSO Act for misbehaving with girl

சேந்தமங்கலம் அருகே உள்ள துத்திக்குளம் தொட்டிப்பெட்டியைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய  மகன் ஆட்டோ ஓட்டுநர் ரஞ்சித் (27).  இவர் அதே பகுதியைச் சேர்ந்த 7ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது  சிறுமியை ஆசை வார்த்தை கூறி, வீட்டுக்கு அழைத்து வந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.   

இதுகுறித்து, பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம்  தெரிவித்துள்ளார். சிறுமியின் பெற்றோர்கள்  கொடுத்த புகாரின் பேரில், காவல் ஆய்வாளர் கோவிந்தராஜன் ஆட்டோ ஓட்டுநர் ரஞ்சித்தை போக்சோ  சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரித்து வருகிறார்.