Skip to main content

போலியாக அரசு வேலை... சிக்கிய நபர்!

Published on 21/09/2020 | Edited on 21/09/2020

 

Fake government job ... person arrested


அரசு வேலை வேண்டுமா? பத்து லட்சம், எட்டு லட்சம், ஏழு லட்சம்... என போலிகள் நடமாட்டம் ஊருக்கு ஊர் இருக்கத்தான் செய்கிறது. அப்படித்தான் ஈரோட்டிலும்.

 

ஈரோடு கொல்லம்பாளையத்தில் ரயில்வே காலனி அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியையிடம் சென்ற 1ஆம் தேதி ஈரோடு மாநகராட்சி பகுதியைச் சேர்ந்த 29 வயது ஆண் ஒருவர் அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு, தன்னை ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி நியமித்துள்ளதாகக் கூறி, ஒரு பணி ஆணையைக் கொடுத்துள்ளார். அந்தப் பணி ஆணையில் அச்சு அசலாக அரசு துறைகளில் வழங்குவதைப் போலவே ஊதியக் குழு பரிந்துரையின் படி ஊதிய விவரம், முகவரி, முதன்மைக் கல்வி அலுவலர் கையெழுத்து, கண்காணிப்பாளர் கையெழுத்து, சீல் போன்றவை இருந்துள்ளது. 

 

ஆனால், முதன்மைக் கல்வி அலுவலரின் கையெழுத்து மட்டும் சிறிய மாற்றம் இருந்ததால், எச்சரிக்கையான அந்தத் தலைமையாசிரியை உடனடியாக ஈரோடு முதன்மைக் கல்வி அலுவலக அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, இந்தப் பணி ஆணை குறித்து விவரம் கூறியுள்ளார். ஆனால், அதிகாரிகள் அதுபோன்ற பணி ஆணை இந்த ஆண்டில் நாங்கள் யாருக்கும் வழங்கவில்லை எனக் கூறியிருக்கிறார்கள். இதனால் தலைமையாசிரியை அதிர்ச்சி அடைந்து, அந்த நபரை அழைத்துச் சென்று முதன்மைக் கல்வி அலுவலரிடம் ஒப்படைத்தார். 

 

இதைத் தொடா்ந்து, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் அந்தப் பணி ஆணையை வாங்கி ஆய்வு செய்தபோது, அது போலியான பணி நியமன ஆணை என்பதனை உறுதி செய்தனர். தொடர்ந்து, அந்த நபரிடம் நடத்திய விசாரணையில், ஈரோட்டைச் சேர்ந்த ஒருவர், ரயில்வே காலனி அரசுப் பள்ளியில் அலுவலக உதவியாளர் பணி காலியாக உள்ளதாகவும், அதற்கு ரூபாய் பத்து லட்சம் பணம் கொடுத்தால் பணி ஆணை வழங்குவதாகவும் அந்த நபர் கூறினார். பிறகு பேச்சுவார்த்தையில் ரூ.7 லட்சம் தருவதாகக் கூறினேன். அதற்கு, அவர் முன்பணமாக ரூபாய் 3 லட்சம் கொடுக்க வேண்டும் எனவும் மீதமுள்ள பணத்தை வேலை கிடைத்ததும் கொடுத்தால் போதும் எனவும் கூறினார். நானும் எனது பெற்றோர் மூலம் அந்த நபருக்கு ரூபாய் 3 லட்சம் பணம் கொடுத்தேன். இதன்பேரில், அந்த நபர் எனக்குப் பணி ஆணை கொடுத்தார் எனக் கூறியிருக்கிறார்.

 

Ad

 

இதுகுறித்து, ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி, ஈரோடு மாவட்ட எஸ்.பி, தங்கதுரையிடம் புகார் கொடுத்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவின்பேரில் துணைக் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் போலி நியமன ஆணையை அச்சிட்டு வழங்கியது அவல்பூந்துறை என்ற பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் என்ற வாலிபர் எனக் கண்டுபிடித்து போலீசார் அந்தப் போலி ஆசாமியைக் கைது செய்தனர். மேலும் இந்தப் போலி நியமன பணி ஆணை அவராகவே தயாரித்தாரா? இதற்கு அரசியல்வாதிகள் யாரேனும் உடந்தையா என அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

மாமியாரை துடிதுடிக்க கொன்ற மருமகன்; சென்னையில் பயங்கரம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Son-in-law incident mother-in-law in Chennai

சென்னை மாதவரம் கண்ணன் நகரில் வசித்து வருபவர்கள் புஷ்பராஜ் - ஜான்சி தம்பதியினர் புஷ்பராஜ் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். மனைவி ஜான்சி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர்களுடன் ஜான்சியின் தாய் வசந்தியும் வசித்து வந்துள்ளார். புஷ்பராஜ் தினமும் மது அருந்திவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்ததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு புஷ்பராஜ் மீண்டும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால் மனைவி ஜான்சியுடன் வாக்குவாம் ஏற்பட்டுள்ளது. மாமியார் வசந்தி தங்களுடன் வசித்து வருத்து வருவதால்தான் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதாக கருதிய புஷ்பராஜ் மனைவி வெளியே சென்ற போது மாமியார் வசந்தியிடம் இதுகுறித்து தகராறு செய்துள்ளார்.

இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த புஷ்பராஜ் மாமியார் வசந்தியை கட்டையால் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த வசந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார். இதையடுத்து புஷ்பராஜ் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வசந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த  புஷ்பராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

ஆட்டோ ஓட்டுநரால் 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
Auto driver arrested under POCSO Act for misbehaving with girl

சேந்தமங்கலம் அருகே உள்ள துத்திக்குளம் தொட்டிப்பெட்டியைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய  மகன் ஆட்டோ ஓட்டுநர் ரஞ்சித் (27).  இவர் அதே பகுதியைச் சேர்ந்த 7ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது  சிறுமியை ஆசை வார்த்தை கூறி, வீட்டுக்கு அழைத்து வந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.   

இதுகுறித்து, பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம்  தெரிவித்துள்ளார். சிறுமியின் பெற்றோர்கள்  கொடுத்த புகாரின் பேரில், காவல் ஆய்வாளர் கோவிந்தராஜன் ஆட்டோ ஓட்டுநர் ரஞ்சித்தை போக்சோ  சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரித்து வருகிறார்.