Skip to main content

ஆதரவேற்றோர்க்கு உதவ பழைய துணி வாங்குவதாக வீட்டில் 11 லட்சம் அபேஸ்...!! சென்னையில் நடுத்தர வீடுகளை குறிவைத்த போலி அறக்கட்டளை!

Published on 18/06/2019 | Edited on 18/06/2019

சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த சுசீலா என்பவர் வீட்டு வேலை செய்து வருகிறார். கடந்த 13ம் தேதி தேனாம்பேட்டைக்கு ஆட்டோவில் வந்த சிலர் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே அம்மா அறக்கட்டளை என்ற பெயரில் ஆதரவற்றோர் மற்றும் முதியோருக்கு இலவசமாக சேவை செய்து வருவதாக கூறி தங்களால் ஆன உதவியை செய்யுமாறு துண்டு பிரசுரங்களை கொடுத்து வீடுவீடாகச் சென்று பழைய துணிகள் மற்றும் சிறு தொகையை பெற்றுச் சென்றுள்ளனர்.

 

Fake Foundation 11 lakhs theft in chennai


இந்த நிலையில் சுசீலா வேலைக்கு சென்றிருந்த நேரத்தில் அவரது மகன் வீட்டில் இருந்த பழைய துணி மூட்டையை துணி சேகரிக்க வந்த பெண்ணிடம் கொடுத்துள்ளார். வீட்டிற்கு வந்த சுசீலா பழைய துணி மூட்டை குறித்து கேட்டதற்கு அவரது மகன் நடந்ததை கூறியதும் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதுள்ளார். வீடு வாங்குவதற்காக சிறுக சிறுக சேமித்த 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை திருட்டு பயம் காரணமாக பழைய துணி மூட்டையில் கட்டி வைத்துள்ளார் சுசீலா. இதனை அறியாத சுசீலாவின் மகன் அந்தப் பெண்ணிடம் மூட்டையை கொடுத்துள்ளார். துண்டு பிரசுரத்தில் இருந்த முகவரிக்கு தனது கணவருடன் விசாரிக்கச் சென்றபோது அந்த இடம் பாழடைந்த ஓட்டு கோட்டையாக இருந்தது கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தார்.

 

Fake Foundation 11 lakhs theft in chennai


தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் சுசீலா அளித்த புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் ரமேஷ் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை அடிப்படையிலும் விசாரணை நடைபெற்றது. பதிவு எண்ணை வைத்து  ஆட்டோ உரிமையாளரை விசாரித்தபோது, மகாலட்சுமி என்பவர் தனது ஆட்டோவை வாடகைக்கு எடுத்ததாக கூறியுள்ளார். இதனையடுத்து செங்குன்றம் பகுதியில் இருந்த மகாலட்சுமியை பிடித்து விசாரணை நடத்தியதில் பணத்தை திருடியதை ஒத்துக் கொண்டார். அவரது வீட்டிலிருந்து 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.

 

Fake Foundation 11 lakhs theft in chennai


மகாலட்சுமியிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் பணம், காசோலை மற்றும் பழைய துணிகளை பெற்று பணம் சம்பாதிக்க சென்னையில் பெரிய கும்பலே செயல்படுவது தெரிய வந்துள்ளது,. பணத்தை வாரத்திற்கு ஒரு முறை தங்களுக்குள் பங்கு போட்டுக் கொள்ளவும் பழைய துணிகளை மொத்த ஏஜெண்டுகளிடம் விற்று பணம் சம்பாதிப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கும்பல் ஏழை பெண்களை வேலைக்கு அமர்த்தி தாங்கள் கொடுக்கும் துண்டுப்பிரசுரங்களை வீடுவீடாகச் சென்று கொடுத்து பணம் மற்றும் துணிகளை பெற்றுவரும் பெற்றுவர பயிற்சி அளிக்கின்றனர். சென்னையில் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் உள்ள பகுதிகளில் குறிவைத்து இந்த மோசடி செய்து வந்ததும் தெரியவந்தது.

 

Fake Foundation 11 lakhs theft in chennai


அம்மா அறக்கட்டளை அரவிந்தன் என்பவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த நபர் மக்கள் நம்பிக்கை என்ற வார இதழை நடத்தி வருவதையும் போலீசார் கண்டறிந்தனர். காவல் ஆணையர் உள்ளிட்ட பிரபலங்களுடன் நெருக்கமாக இருப்பதுபோல் புகைப்படங்கள் எடுத்து வைத்திருக்கும் அந்த நபர் போலி அறக்கட்டளை பெயரில் பண வசூலில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது. 24 மணி நேரத்தில் மகாலட்சுமியை கைது செய்து 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.  

 

Fake Foundation 11 lakhs theft in chennai


மேலும் முக்கிய குற்றவாளியான அரவிந்தனை தேடி வருகின்றனர். ஆதரவற்றோர் பெயரை பயன்படுத்தி பணம் துணிகளை வாங்கிச் செல்லும் மோசடி கும்பலிடம் ஏமாந்துவிடக்கூடாது. தாங்கள் கொடுக்கும் பணம் ஏழைகளை சென்றடைய அவற்றை வசூலிக்க வரும் நபர்களின் உண்மைத் தன்மையை கண்டறிந்து செயல்பட வேண்டும் என காவல்துறை எச்சரிக்கை விடுக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வேதனையாக இருக்கிறது' - ஏமாற்றத்துடன் வீடியோ வெளியிட்ட நடிகர் சூரி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'It's painful' - Suri who came to vote and returned disappointed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் வாக்களிக்க வந்த நடிகர் சூரியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அவர் வாக்களிக்காமலேயே திரும்பிச் சென்றார். வெளியே வந்த அவர் வாக்குச்சாவடி முன்பு நின்று பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ''கடந்த எல்லா தேர்தலிலும் கரெக்டா என்னோட உரிமையை செலுத்தி கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த தடவை இந்த பூத்தில் என்னுடைய பெயர் விடுபட்டு போய்விட்டது என்கிறார்கள். என்னுடைய மனைவியின் ஓட்டு இருக்கிறது. ஆனால் என்னுடைய ஓட்டு இல்லை. என்னுடைய ஓட்டு விடுபட்டுப் போச்சு என்கிறார்கள். இருந்தாலும் 100% ஜனநாயக உரிமையை ஆற்றுவதற்காக வந்தேன். அது நடக்கவில்லை என்பது மன வேதனையாக இருக்கிறது. நினைக்கும் போது மனசு கஷ்டமாக இருக்கிறது. இது எங்கு யாருடைய தவறு என்று தெரியவில்லை. இருந்தாலும் ஓட்டு போட்டுவிட்டு ஓட்டு போட்டேன் என்று சொல்வதை விட ஓட்டு போடவில்லை என்ற வேதனையை நான் சொல்கிறேன். எல்லாருமே 100% ஓட்டு போட வேண்டும். அது நம்ம நாட்டுக்கு நல்லது. தவறாமல் எல்லாரும் வாக்கை செலுத்தி விடுங்கள். நான் அடுத்த எலெக்ஷனில் என்னுடைய வாக்கை செலுத்துவேன் என்று நம்புகிறேன்'' என்றார்.

Next Story

சென்னையில் வாக்குப்பதிவு மந்தம்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. நாமக்கல் தொகுதியில் பகல் 3 மணி நிலவரப்படி 59.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. நாகையில் 54.07 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மயிலாடுதுறையில் 50.91% வாக்குகள் பதிவாகியுள்ளது. திருச்சி மக்களவைத் தொகுதியில் 49.27% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சேலம் தொகுதியில் 60.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. கரூரில் 59.56 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 53.02 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வேலூர் மக்களவைத் தொகுதியில் 51.19 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் 58.97 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இவை அனைத்தும் பிற்பகல் 3 மணி அளவில் வாக்குப்பதிவு நிலவரங்கள் ஆகும்.

சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளிலும் வாக்குப்பதிவு மந்தமாகவே நடைபெற்று வருகிறது. மத்திய சென்னையில் 37.62% வாக்குகள் பதிவாகியுள்ளது. வடசென்னையில் 39.67 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. தென் சென்னையில் 40.98 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் சராசரியாக  வாக்குப்பதிவு  50 சதவீதத்தை தாண்டிய நிலையில் சென்னையில் சராசரி வாக்குப்பதிவு 40 சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ளது.