Skip to main content

நிஜத்தை மிஞ்சும் போலி பேஸ்புக் ஐடி... பிரபலத்தின் பெயரை சொல்லி பெண்களை ஏமாற்றிய இளைஞர் கைது!

Published on 30/05/2019 | Edited on 30/05/2019

இந்தி திரைப்படத் துறையில் பிரபல பின்னணிப் பாடகராக இருப்பவர் அர்மான் மாலிக். அவரது பெயரில்  போலி என்றே யூகிக்க முடியாத அளவுக்கு உண்மைபோல் முகநூல் மற்றும் டுவிட்டர் கணக்குகள் துவங்கி அந்த போலி கணக்குகளை பயன்படுத்தி பெண்களை வலையில் வீழ்த்தி பணம் பறித்த உளுந்தூர்பேட்டையை சேர்ந்த 30 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். 

 

fake

 

இந்தி திரைப்படத் துறையில் பிரபல பின்னணிப் பாடகர் மற்றும் நடிகருமான அர்மான் மாலிக் பெயரில் போலியாக முகநூல் மற்றும் டுவிட்டரில் கணக்கு தொடங்கிய  உளுந்தூர்பேட்டையை சேர்ந்த மகேந்திரவர்மன் என்ற 30 வயது இளைஞர் அவரின் உண்மையான இணையதளத்தில் இருந்து அவருடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்து அவற்றை தான் துவங்கிய போலி கணக்கில் பதிவிட்டு நிஜத்தையே மிஞ்சும் அளவிற்கு பேக் ஐடியை உருவாக்கி தன்னை அர்மான் மாலிக் என்று அனைவரையும் நம்பவைத்துள்ளான். 

 

fake

 

அதனைத் தொடர்ந்து இளம் பெண்களை குறிவைத்து அவர்களுக்கு ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட் அனுப்பி உள்ளார் பேக் ஐடி மகேந்திரவர்மன். பிரபல பாடகரின் நட்பு அழைப்பு என்று நம்பி பல இளம் பெண்கள் அவரது வலையில் விழவே மெதுவாக அந்த பெண்களிடம் பழகி அவர்களின் அந்தரங்க புகைப்படங்களை மகேந்திரவர்மன் வாங்கியுள்ளான். ஆனால் ஒருகட்டத்தை தாண்டிய பிறகு அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யாமல் இருக்க வேண்டும் என்றால் தனக்கு அவ்வப்போது பணம் தர வேண்டும் என்று மகேந்திரவர்மன் மிரட்டவே பல பெண்கள் தங்களால் இயன்ற அளவிற்கு பணத்தை அவனிடம் கொடுத்துள்ளனர். 

 

fake

 

இதன் மூலம் பல லட்சம் ரூபாயை மிரட்டி சம்பாரித்துள்ளான். இந்த நிலையில் மகேந்திரவர்மனின் வலையில் சிக்கிய கோவையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் அவன் போலி என்பதை அறிந்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் துணிச்சலாக புகார் அளித்தார். இதையடுத்து ஆய்வாளர் யமுனாதேவி உதவி ஆய்வாளர் அருண் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் அந்த இளம்பெண் மூலம் மகேந்திரவர்மனிடம் நைசாக பேசி கோவைக்கு வரவழைத்துள்ளனர். பணம் தருவதாக கூறியதால் ஆவலுடன் கோவைக்கு காலையில் வந்தவனை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

fake


பட்டதாரியான மகேந்திரவர்மன் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்த மோசடியில் ஈடுபட்டு வந்ததும், யாருக்கும் சந்தேகம் வராதபடி செல்போன் மற்றும் பேஸ்புக் மூலமாக பெண்கள் தொடர்பு கொண்டு இணையம் மூலமாகவே பணம் பெற்றுள்ளான் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

 



அவனது செல்போன் மற்றும் டேப்பை பறிமுதல் செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சந்தேகத்தின் பேரில் ஓட ஓட விரட்டி ஒருவர் வெட்டிக் கொலை!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Suspect chased away a person  incident

அரியலூர் மாவட்டம் குருந்தங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன்(45). இவருக்கு புஷ்பவள்ளி என்ற மனைவியும், பிள்ளைகளும் உள்ளனர். விவசாயியான மனோகரன் விவசாய பணிகளுக்காக டிராக்டர் மற்றும் நெல் அறுவடை மெஷின் போன்றவற்றை விலைக்கு வாங்கி வைத்துள்ளார். தனது சொந்த வேலைகள் போக அப்பகுதியில் உள்ள கிராம விவசாயிகளுக்கும் தனது ட்ராக்டர் மற்றும் நெல் அறுவடை மெஷின்களை வாடகைக்கு கொடுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில், தனது விவசாய ட்ராக்டரை ஓட்டுவதற்காக அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரை பணிக்கு அமர்த்தியுள்ளார். ரமேஷ்க்கு குடும்ப உறுப்பினர்கள் யாரும் இல்லாததால் தனது வீட்டிலேயே தங்க வைத்துள்ளார் மனோகரன். ரமேஷும் வீட்டில் இருந்தபடியே மனோகரனுக்கு உதவியாக அவரது விவசாய வாகனங்களை ஓட்டி வந்துள்ளார். இந்த நிலையில், தனது வீட்டில் தங்கியிருக்கும் ரமேஷுக்கும், தனது மனைவி புஷ்பவள்ளிக்கும் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக சந்தேகம் அடைந்துள்ளார். நாளடைவில் மனோகரனுக்கு இருக்கும் சந்தேகம் அதிகமான நிலையில் நேற்று விவசாய வேலைகளை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது கையில் அரிவாளுடன் காத்திருந்த மனோகரன் ரமேஷை ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து அரிவாளுடன் வெங்கனூர் காவல் நிலையத்தில் மனோகரன் சரணடைந்துள்ளார். இதனிடையே ரமேஷின் உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Next Story

திருமணத்தை மீறிய உறவு; அதிமுக நகர செயலாளர் கொலை!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
 AIADMK official who cheated by promising to get a job was passed away
வெங்கடேசன்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அதிமுக நகர  செயலாளராக  வெங்கடேசன் என்பவர் கட்சி பதவி வகித்து வருகிறார். இவரிடம் செஞ்சி திருவண்ணாமலை சாலையில் எஸ்.பி.ஐ வங்கி எதிரில் டீக்கடை நடத்திவரும் ராஜேந்திரன் என்பவர் தனது மனைவி கல்பனாவுக்கு சத்துணவு அமைப்பாளர் வேலை கேட்டு கடந்த அதிமுக ஆட்சியில் 3 லட்சம் பணம் தந்துள்ளார். வேலை வாங்கித்தரவில்லை, பணத்தையும் திருப்பித் தரவில்லை என்று கூறப்படுகிறது.

ராஜேந்திரன், கல்பனா இருவரும் பலமுறை அவர் வீட்டுக்குச் சென்று பணம் கேட்டுள்ளனர். ஆனால் பணம் தராமல் இழுத்தடித்துள்ளார். இதற்கிடையே கல்பனா வெங்கடேசன் இடையே திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. இது ராஜேந்திரன் குடும்பத்தில் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வெங்கடேசன் - ராஜேந்திரன் இடையே முன்விரோதம் அதிகமாகியுள்ளது.

இந்நிலையில் மார்ச் 16 ஆம் தேதி இரவு வெங்கடேசன் வங்கியில் ஏ.டி.ம். மையத்திற்கு பணம் எடுக்கச் சென்றதாக தெரிகிறது. அப்போது அங்கு வந்த ராஜேந்திரன் மற்றும் அவரது மனைவி கல்பனா ஆகியோர் வெங்கடேசனிடம் பிரச்சனை செய்துள்ளனர். அப்போது ராஜேந்திரன் கல்லை எடுத்து வெங்கடேசன் தலையில் பலமாக தாக்கியதில் தலையில் ரத்தம் சொட்ட சொட்ட வெங்கடேசன் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார்.

பின்னர் கல்லால் தலையில்  தாக்கியதில் பலத்த ரத்த காயம் அடைந்த வெங்கடேசனை மீட்ட பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் செஞ்சி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக  புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் மார்ச் 17 ஆம் தேதி உயிரிழந்தார்.

இது குறித்த தகவலின் பெயரில் செஞ்சி காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ராஜேந்திரனை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து  வழக்கு பதிவு செய்த செஞ்சி போலீசார் ராஜேந்திரன்  மற்றும் அவரது மனைவி கல்பனா ஆகியோர் மீது கொலை  வழக்கு பதிவு செய்துள்ளனர்.  ராஜேந்திரன் கைது செய்யப்பட்ட நிலையில் அவரது மனைவி கல்பனாவை செஞ்சி போலீசார் தனிப்படை அமைத்து  தேடி வருகின்றனர்.அதிமுக செஞ்சி நகர கழக செயலாளர் கொலையால் செஞ்சி பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. அதிமுக நிர்வாகிகளிடையே இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.