இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக, மக்கள் பொது இடங்களுக்கு செல்லும்போது கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என அரசு அறிவுறுத்தியது. எனினும், பலர் அலட்சியமாக மாஸ்கை தவிர்த்துவிட்டு வெளியே வருகின்றனர்.

Advertisment

எனவே, காவல்துறையினர் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை, ராமாபுரம் அரசமரப் பகுதியில் ஒரு தத்ரூபமான டம்மி யானையை வடிவமைத்து அதற்கு மாஸ்க் அணிவித்து காட்சிப்படுத்தினர்.