Skip to main content

ஒரு ஆசிரியைக்காக போலி ஆவணங்களை தயாரித்த அதிகாரிகள்...சிக்கலில் கல்வித்துறை !

Published on 28/09/2019 | Edited on 28/09/2019

வேலூர் மாவட்டம், ஆம்பூரில் பாரம்பரியம்மிக்கது அரசு உதவிபெறும் இந்து மேல்நிலைப் பள்ளி. இந்த பள்ளியில் ஆங்கில பாட ஆசிரியராக சில ஆண்டுகளுக்கு முன்பு பணியில் சேர்ந்துள்ளார் ஹேமமாலினி  என்பவர்.  இவர் கல்லூரியில் படித்தது பி.காம் என்கிற வணிகவியல் பாடம் மற்றும் அதே பிரிவில் பி.எட் படித்து முடித்துள்ளார். அண்ணாமலை பல்கலைகழகத்தில் டபுள் டிகிரி என ஆங்கிலப்பாடப்பிரிவு படித்துள்ளார்.

fake documents



2010 முதல் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டும்மே ஆசிரியராக தொடர முடியும் என்கிற நிலை. இந்நிலையில் டெட் தேர்வில் அதுவும் ஆங்கிலப்பாடத்துக்கு கலந்துக்கொண்டு தேர்ச்சி பெற்றதாக சொல்லி பணியில் தொடர்ந்துள்ளார்.

இது தொடர்பாக சுரேந்திரன் என்பவர் நீதிமன்றத்தில் வழக்காக தாக்கல் செய்து, பின்னர் வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு உத்தரவு வாங்கி விசாரணை நடத்த உத்தரவிட்டபின் வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலிஸார் நடத்திய விசாரணையில், போலியான ஆவணங்களை தயார் செய்து, அதனை சுரேஷ்பாபு – இந்து கல்வி சங்கத்தின் உதவி தலைவர், ராஜமாணிக்கம், முன்னாள் மாவட்ட கல்வி அலுவலர் திருப்பத்தூர் சாம்பசிவம், மாவட்ட கல்வி அலுவலர் திருவள்ளுவர் மாவட்டம் பரமேஸ்வரி, பிரிவு எழுத்தர் மாவட்ட கல்வி அலுவலகம் திருப்பத்தூர் சிவக்குமார், மாவட்ட கல்வி அலுவலக கண்காணிப்பாளர் திருப்பத்தூர் கிரீணிவாசன், இடைநிலை இயக்குநரின் நேர்முக உதவியாளர், இடைநிலை இயக்குநர் அலுவலகம், சென்னை என அதிகாரிகள் துணையுடன் அந்த போலி ஆவணங்களை அங்கீகரித்து ஆசிரியராக பணியாற்ற உதவி செய்துள்ளார்கள்.

ஹேமமாலிணி பல ஆண்டுகளாக ஆசிரியராக பணியாற்றி மாதம் சுமார் 80 ஆயிரத்துக்கு மேல் சம்பளம் பெற்று வந்துள்ளார். அரசாங்கத்தை ஏமாற்றி வேலை வாங்கி, சம்பளம் பெற்று நட்டத்தை ஏற்படுத்தியுள்ளார்கள் என இந்த 7 பேர் மீது வழக்கு பதிவு செய்கிறேன் என 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது குற்றப்புலனாய்வுத்துறை.

இது தற்போது ஆசிரியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரிகள் துணையுடன் இதுப்போல் இன்னும் எத்தனை எத்தனை ஆசிரியர்கள் போலியான ஆவணங்களை தந்து பணியில் சேர்ந்து கல்வி கூடங்களில் உள்ளார்களோ என தெரியவில்லை என வேதனைப்படுகிறார்கள் கல்வியாளர்கள் பலரும். 

சார்ந்த செய்திகள்

Next Story

போலீசுக்கே விபூதி; ரா அதிகாரி என மிரட்டிய போலி அதிகாரி கைது 

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
Vibhuti to the police; Fake officer who threatened to be RAW officer arrested

கடலூர் மாவட்ட  காவல்துறையினர் மற்றும் சில பொதுமக்களுக்கு செவ்வாய்க்கிழமை தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. இந்த அழைப்பில் பேசியவர் ரா உளவுத் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி என்றும் டெல்லியில் இருந்து வந்திருப்பதாகவும், சிதம்பரத்தில் உள்ள முக்கிய அரசியல் பிரமுகரின் மகனை கைது செய்ய வந்துள்ளதாகவும், இதற்கு தேவையான நடவடிக்கையை  எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பல கேள்விகளை காவல் அதிகாரிகள் கேட்டுள்ளனர். அதற்கு அவர் தெளிவாக பதிலை கூறியுள்ளார். இந்த தகவல் உண்மை என நம்பிய காவல்துறை  அதிகாரிகள். கைது நடவடிக்கைக்கு தேவையான காவலர்களை சிதம்பரம் நகர காவல் நிலையத்தில்  செவ்வாய்க்கிழமை இரவு 9 மணி வரை இருக்க உத்தரவிட்டனர்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் சிதம்பரம் நகர காவல்துறையினர் சிதம்பரம் பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்குரிய முறையில் திரிந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை செய்துள்ளனர். அப்போது அவர் ரா அதிகாரி என்று கூறி மிரட்டியுள்ளார். காவலர்கள் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் அவர் பரங்கிப்பேட்டை ஆற்றங்கரையை தெருவைச் சேர்ந்த நீல ஒளி மகன் சிவசுப்பிரமணியன் ( 35)  எனவும் இவர் கடல் வாழ் உயிரினங்கள் குறித்து பட்டய படிப்பு முடித்துள்ளதாகவும், இவர் மும்பை பகுதியில் பணியில் இருந்த போது போதை பொருட்களுக்கு அடிமையாகி செங்கல்பட்டு போதை  மறுவாழ்வு மையத்தில் சிகிச்சையில் இருந்ததாகவும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை பகுதியில் உள்ள எம்எல்ஏ ஒருவரை தொலைபேசியில் மிரட்டியதற்காக சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு பிணையில் விடுதலையானவர் என்றும் தெரியவந்தது.

புதன்கிழமை இரவு சிதம்பரம் நகர போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதனால் மாவட்ட காவல்துறை மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story

போராட்டம் நடத்திய ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் கைது!

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
Jacto jio organizations issue

சென்னை டிபிஐ வளாகம் முன்பு போராட்டம் நடத்திய ஜாக்டோ - ஜியோ அமைப்பினரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்தக்கோரியும், அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் சென்னை டிபிஐ வளாகம் முன்பு போராட்டம் நடத்த முடிவு செய்து இன்று காலை 10 மணி முதல் அங்கு குவியத் தொடங்கினர். இருப்பினும் காவல்துறை சார்பில் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது.

இருப்பினும் காவல்துறையின் அறிவிப்பையும் மீறி ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் பேருந்து மூலம் அழைத்துச் செல்லப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால் டிபிஐ வளாகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பாகக் காணப்பட்டது.