Skip to main content

முதியவருக்கு சிகிச்சை அளித்த போலி மருத்துவர்... தீவிர விசாரணையில் காவல்துறையினர்! 

Published on 12/07/2021 | Edited on 12/07/2021

 

The fake doctor who treated the elderly; Police in serious investigation

 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகில் உள்ளது விட்டலாபுரம். இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் தங்கமணி என்பவரது மகன் மணிகண்டன் (44), பி.எஸ்.சி படித்துள்ளார். இவர் திண்டிவனத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உதவியாளராக சில ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். அந்த அனுபவத்தின் அடிப்படையில் தற்போது விட்டலாபுரம் சாலையில் உள்ள தனது சொந்த வீட்டிலேயே இவர் மருத்துவர் போன்று பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்துவந்துள்ளார்.

 

இந்த நிலையில், திண்டிவனம் அருகிலுள்ள கருணாவூர் கிராமத்தைச் சேர்ந்த வேலு (எ) ஆறுமுகம் (70) என்ற முதியவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அதனால் அவரது உறவினர்கள் போலி மருத்துவர் மணிகண்டனிடம் அழைத்துச் சென்று மருத்துவம் பார்த்துள்ளனர். இந்த நிலையில் இரண்டாவது முறையாக நேற்று (11.07.2021) மதியம் மணிகண்டனிடம் மருத்துவம் பார்த்துவிட்டு நடந்துசென்றுள்ளார் முதியவர் ஆறுமுகம். சிறிது தூரம் சென்றவுடன் சாலை ஓரத்திலேயே ரத்த வாந்தி எடுத்து மயங்கி கீழே விழுந்தவர், அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலி மருத்துவர் மணிகண்டன் தலைமறைவாகியுள்ளார். தகவல் அறிந்த திண்டிவனம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆறுமுகத்தின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

 

மேலும் விசாரணையில், போலி மருத்துவர் மணிகண்டன் தவறான சிகிச்சை அளித்ததால் ஆறுமுகம் ரத்த வாந்தி எடுத்து இறந்துள்ளதாக ஆறுமுகத்தின் உறவினர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து போலி மருத்துவர் மணிகண்டன் மருத்துவம் பார்த்த அறையைப் பூட்டி போலீசார் சீல் வைத்துள்ளனர். இதுகுறித்த சுகாதாரத்துறையினரின் புகாரின் பேரில் வழக்குப் பதிவுசெய்து போலி மருத்துவர் மணிகண்டனை தேடிவருகின்றனர். மணிகண்டன் போலியாக மருத்துவம் பார்த்ததாக ஏற்கனவே இரண்டுமுறை போலீசாரால் கைது செய்யப்பட்டவர் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். உண்மையான மருத்துவர்கள் கிராமங்களுக்குச் சென்று மக்களுக்கு சிகிச்சை அளித்தால் இதுபோன்ற போலி மருத்துவர்கள் அதிகரிக்க மாட்டார்கள். போலி மருத்துவர்கள் அதிகரிப்பதற்கு காரணம், முறையாக மருத்துவம் படித்த மருத்துவர்கள்தான்; அவர்கள் கிராமப்புறங்களுக்குச் சென்று மக்களுக்கு சிகிச்சை அளிக்க தயங்குவதுதான். அரசு மருத்துவர்கள் கிராமப்புற சுகாதார நிலையங்களுக்குப் பணிமாறுதல் பெற்றுச் சென்றாலும், சென்ற சில மாதங்களிலேயே மீண்டும் நகரப் பகுதிகளுக்குப் பணிமாறுதல் பெற்று திரும்பிவிடுகிறார்கள். இப்படி அரசு மருத்துவர்கள் கிராமப்புற மக்களைப் புறக்கணிப்பதால்தான் போலி மருத்துவர்கள் அதிகரிக்கின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பா.ம.க. வேட்பாளரை ஆதரித்து ராமதாஸ் பிரச்சாரம்!

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
PMK Ramdas campaign supporting the candidate

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக தமிழக முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று முன்தினம் (22.03.2024) திருச்சி சிறுகனூரில் நடைபெற்ற பிரச்சார பொது கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு திருச்சி தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோவையும், பெரம்பலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அருண் நேருவையும் ஆதரித்து வாக்கு சேகரித்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார். இத்தகைய சூழலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (24.03.2024) மாலை திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டு வண்ணாங்கோயில் என்ற இடத்தில் இந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க.வின் முதல் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தை தொடங்கியுள்ளார்.

இதற்கிடையே பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பட்டாளி மக்கள் கட்சிக்கு காஞ்சிபுரம், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து பா.ம.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதன்படி அரக்கோணம் - பாலு, கடலூர் - தங்கர்பச்சான், திண்டுக்கல் - திலகபாமா, தர்மபுரி - செளமியா அன்புமணி, விழுப்புரம் - முரளி சங்கர், ஆரணி - கணேஷ் குமார், மயிலாடுதுறை - ம.க. ஸ்டாலின், சேலம் - அண்ணாதுரை, கள்ளக்குறிச்சி - தேவதாஸ்  காஞ்சிபுரம் - ஜோதி வெங்கடேஷ் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் விழுப்புரம் மக்களவைத் தொகுதி பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கரை ஆதரித்து கோவடி கிராமத்தில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்கு ஒரு நல்ல வேட்பாளரான முரளி சங்கர் நிறைய படித்துள்ளார். 6 மொழிகளில் சரளமாக பேசுவார். மக்களை பற்றி சிந்திக்க கூடியவர். மக்களுக்காக பாடுபடக்கூடியவர். சிறந்த விளையாட்டு வீரரும் ஆவார்” எனத் தெரிவித்தார். 

Next Story

திரௌபதி அம்மன் கோவில் இன்று திறப்பு; போலீசார் குவிப்பு

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Draupadi Amman temple opens today; Police build up

விழுப்புரம் திரௌபதி அம்மன் கோவில் இன்று திறக்கப்படுகிறது.

விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதி கிராமத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த திரௌபதி அம்மன் தீமிதி திருவிழாவில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் கோவிலுக்கு சீல் வைத்தது. கோவிலில் இதுவரை யாரும் அனுமதிக்கப்படவில்லை. எட்டு கட்டமாக சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் இரு தரப்பும் நீதிமன்றத்தை நாடி இருந்தது.

இந்நிலையில் 22 ஆம் தேதியான இன்று கோவிலைத் திறந்து பூஜை நடத்துவதற்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படாத நிலையில், ஒரு கால பூஜை மற்றும் பூசாரியால் செய்யப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று அதிகாலை முதலே கோவிலை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்ற நிலையில், தற்போது கட்டிங் மெஷின் மூலம் கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கோவிலைத் திறக்கும் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், பாதுகாப்புப் பணிக்காக அதிகப்படியான போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.