Advertisment

போலி கரோனா தடுப்பூசி சான்றிதழ் - நடவடிக்கை பாயும் என சுகாதாரத்துறை அறிவிப்பு!

fhg

Advertisment

தடுப்பூசி செலுத்தாமல் போலி சான்றிதழ் வழங்கினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடுசுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கரோனா தொற்றுகடந்த சில வாரங்களாக குறைந்துவந்த நிலையில், சென்னை உள்ளிட்ட சில இடங்களில் இயல்புக்கு அதிகமாக சிறிய அளவில் தொற்று எண்ணிக்கை உயர்ந்துவருகிறது. இதனால் தமிழ்நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணிகள் துரித கதியில் நடைபெற்றுவருகிறது. மேலும், தடுப்பூசி போடுவதை துரிதப்படுத்தும் வகையில் பல மாவட்டங்களில் தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தடுப்பூசி போட்டதாக போலி சான்றிதழ் தரும் பணியாளர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். மேலும், போலியாக சான்றிதழ் பெறுவதற்காக மக்கள் புரோக்கர்கள், ஏஜெண்டுகளை அணுகுவதை ஊக்குவிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe