Skip to main content

வாரிசு சான்றிதழ் கொடுத்ததில் மோசடி!! தாசில்தார், வி.ஏ.ஓ., ஆர்.ஐ. ஆகியோர் மீது வழக்கு... 

Published on 13/08/2020 | Edited on 13/08/2020
villupuram

 

 

விழுப்புரம் மாவட்டம் தொடர்ந்த நூரை சேர்ந்த ராமலிங்கம் மனைவி பொன்னம்மாள், வயது 86. இவர் கடந்த பத்தாம் தேதி மாவட்ட கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் அவர்களிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். 

 

அந்த புகாரில் தனது கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். எங்களுக்கு பிறந்த பெண் குழந்தையும் இளம் வயதில் இறந்து விட்டது. இதனால் எங்களின் உறவினர் மகன் தனசேகரன் என்பவரை எங்கள் குல வழக்கப்படியும் சட்டத்தின்படியும் எங்கள் மகனாகதத்தெடுத்து சார் பதிவாளர் அலுவலகத்தில்  முறைப்படி பதிவு செய்து அவரை வளர்த்து வருகிறேன்.

 

எனது குடும்ப சொத்தானது பாணம் பட்டு கிராமத்தில் ஐந்து சென்ட் இடம் உள்ளது. அந்த இடத்தை நாங்கள் அனுபவித்து வருகிறோம். என் கணவரின் இறப்புக்கு பின் எனது மகன் தனசேகரன் பெயருக்கு அடிப்படையில் பட்டாவை மாற்றி ஆவணப்படுத்தி அந்த இடத்திற்கு தீர்வை செலுத்தி வந்துள்ளோம். எனது மகன் வெளியூரில் வேலை செய்து வருகிறார். தனசேகரன் இதனால் எங்களூரில் வசித்து வரும் சுந்தர்ராஜன் என்பவர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார். எனக்கு சிறு சிறு உடல் உபாதைகள் ஏற்படும் போதெல்லாம் சுந்தரராஜன் மருந்து மாத்திரைகள் வாங்கி கொடுப்பார். அவர் அவ்வப்போது சிறு சிறு உதவிகள் செய்வார். அவர் ஒரு அரசு ஊழியர் என்பதால் அரசு விவசாய காப்பீட்டுத் திட்டங்களில் சேரச் சொல்லி என்னையும் சேர்த்து விட்டார். இப்படி எங்கள் குடும்ப நண்பராக பழகிய சுந்தரராஜன் 2016 ஆம் ஆண்டு விழுப்புரம் பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு என்னை அழைத்து சென்று பாணம் பட்டு இடத்து  சொத்தை போலியாக வாரிசு சான்றிதழ் பெற்று பத்திரப்பதிவு அலுவலகத்தில் என்னை ஏமாற்றிக்  கையெழுத்து வாங்கி  அந்த இடத்தை அவரது பெயரில் மாற்றி கொண்டுவிட்டார்.

 

வெளியூரில் வேலை செய்து கொண்டிருந்தேன். ஒரு மாதம் ஊருக்கு வந்த பிறகுதான் இந்த விவரம் எனக்கு தெரிய வந்தது. எனக்கு என் மகன் தனசேகரன் தவிர வேறு வாரிசுகள் யாரும் இல்லை. சுந்தர்ராஜன் பொய்யாக ஒரு வாரிசு சான்றிதழை பெற்றுள்ளார். இதற்கு அப்போதைய விழுப்புரம் தாசில்தார் மூலம் வாரிசு சான்று பெற்று அதை கொண்டு சார்பதிவாளர் அலுவலகத்தில் மோசடியாக என்னை நம்ப வைத்து எனது சொத்தை மாற்றிக் கொண்டுள்ளார். இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளவர்கள் அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொன்னம்மாள் அவரது புகார் மனுவில் கூறியிருந்தார்.

 

இதுகுறித்து விசாரணை நடத்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு எஸ்பி ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டார். அதன்படி நிலமோசடி செய்தது தொடர்பாக  சுந்தரராஜன் அப்போதைய விழுப்புரம் தாசில்தார் வளவனூர் வருவாய் ஆய்வாளர் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் ஆவண எழுத்தர் சம்பத்குமார் சாட்சியாக உடனிருந்து கையெழுத்திட்ட அகரம் கிராமத்தை சேர்ந்த காளிதாஸ் கோலியனூர் கிருஷ்ணமூர்த்தி ஆகிய மீதும் மோசடி உள்ளி ஏழு பேர்கள் மீது 5 சட்டபிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நில மோசடி உடந்தையாக வாரிசு சான்றிதழ் வழங்கிய வட்டாட்சியர் உட்பட வருவாய்த் துறையினர் பெரும் மோசடியில் ஈடுபட்டது விழுப்புரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மறைந்த எம்.எல்.ஏ. புகழேந்தி உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
Late MLA pugazhendhi Tribute to CM MK Stalin

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (வயது 71). இத்தகைய சூழலில் விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் (05.04.2024) இரவு விழுப்புரம் வந்திருந்தார். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த 4 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார்.

அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து நேற்று (06.04.2024) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் ஆவார். எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (06.04.2024) இரவு விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு நேரில் சென்று, உடல்நலக் குறைவால் காலமான விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா. புகழேந்தியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.  அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு, க. பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர். 

Next Story

விழுப்புரத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பரப்புரை!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Cm MK Stalin election campaign In Villupuram 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இதற்கிடையே தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது. அதன்படி, 39 மக்களவை தொகுதிகளில் 1085 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், 135 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. இதன் மூலம் 39 தொகுதிகளில் மொத்தம் 950 பேர் போட்டியிடுகின்றனர். தமிழ்நாட்டில் மொத்தமாக 874 ஆண்களும், 76 பெண்களும் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக, கரூர் மக்களவை தொகுதியில் 54 பேர் களம் காண்கின்றனர். குறைந்தபட்சமாக, நாகப்பட்டினம் தொகுதியில் 9 பேர் மட்டுமே போட்டியிடுகின்றனர். மேலும், தேர்தலையொட்டி தமிழகத்தில் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் தொடர் நடவடிக்கைகள் தேர்தல் ஆணையம் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது.

அதே சமயம் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (05.04.2024) விழுப்புரத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதனையொட்டி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இன்று மாலை நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்திலும் கலந்து கொண்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்ற உள்ளார். அப்போது விழுப்புரம் மக்களவைத் தொகுதி வி.சி.க. வேட்பாளர் ரவிக்குமார் மற்றும் கடலூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து முதல்வர் வாக்கு சேகரிக்க உள்ளார்.