Skip to main content

போலி ஏடிஎம் கார்ட் வழக்கில் தேடப்பட்டு வந்த அ. தி.மு.க. பிரமுகர் சந்துருஜீ கைது

Published on 11/06/2018 | Edited on 11/06/2018

புதுச்சேரி மட்டுமல்லாது தென் இந்தியா முழுவதும் போலி ஏ.டி.எம் கார்ட் கொள்ளையில் ஈடுபட்டு வந்த கொள்ளை கும்பல் ஒன்று அண்மையில் புதுச்சேரியில் கைதானது. பிடிபட்ட கொள்ளையர்களிடம் போலீசார் விசாரித்ததில் இந்த குற்ற செயலுக்கு பின்னால் மூளையாக இருந்து செயல்பட்டதே அ.தி.மு.க பிரமுகர் சந்துருஜீ தான் என்ற தகவல்களை அவர்கள் தெரிவித்ததால். சந்துருஜீயை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கியது புதுச்சேரி போலீஸ் பிரிவு. 400 கோடி ரூபாய் கொள்ளை குறித்த இந்த தகவலை கடந்த சில தினங்களுக்கு முன்னர் நக்கீரன் இணையத்தில் பதிவிட்டிருந்தோம். 
 

fake ATM card case - AIADMK leader arrested in Mumbai


 

 

இருப்பினும் கடந்த ஐம்பது நாட்களுக்கு மேலாக சந்துருஜீயை பிடிக்க முடியாமல் தவித்து வந்த புதுச்சேரி சிபி.சி.ஐடி போலீசார் ‘நாங்கள் சந்துருஜீயை பிடிக்க அவர் தலைமறைவாக தங்கியுள்ள இடங்களுக்கு சென்றால் எங்களுக்கு அங்கு ஏமாற்றம் தான் கிடைக்கிறது. இந்த ஐம்பது நாட்களில் இந்தியா முழுவதும் சந்துருஜீயை பிடிக்க நாங்கள் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்துமே தோல்வியில் தான் முடிந்தது’ என  கடந்த சனிக்கிழமை வரை சொல்லி வந்த போலீசார். இந்த வழக்கோடு தொடர்புடைய முக்கிய குற்றவாளியான சத்யாவை கடந்த சில தினங்களுக்கு முன்னர் கைது செய்து நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் சந்துருஜீ மறைந்திருந்த இடத்தை சொல்லியதாக போலீஸ் தரப்பில் நம்மிடம் சொல்லப்பட்டது. சத்யா கைதான சில மணி நேரங்களில் தேடப்படும் முக்கிய குற்றவாளியான சந்துருஜீயின் தம்பி மணி சந்தரையும் கைது புதுச்சேரி சிறையில் அடைத்து விசாரித்தனர் சிபி.சி.ஐடி. போலீசார்.
 

அவர் கொடுத்த முக்கிய தகவலை கொண்டு சந்துருஜீ தங்கியிருந்த மறைவிடத்தை அறிந்து கொண்டு மும்பைக்கு விரைந்த போலீசார் இன்று அதிகாலை சந்துருஜீயை கைது செய்து கடந்த 13 மணி நேரமாக மும்பையிலேயே ஒரு ரகசிய இடத்தில் விசாரித்து வருகிறது. போலீஸ் விசாரணையில் சந்துருஜீ கொடுக்கும் தகவலின் அடிப்படியில் இந்த வழக்கில் யார் யாருக்கு தொடர்பு இருக்கிறது என்ற விவரம் இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்து விடும். கைதான சந்துருஜீ புதுச்சேரி அ.தி.மு.க -வில் முக்கிய பதவியில் இருப்பதால் இந்த வழக்கில் புதுச்சேரியை சேர்ந்த எம்.எல்.ஏக்களுக்கும், அரசியல் பிரமுகர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் எனவும் தெரிகிறது. அது அனைத்தும் சந்துருஜீ சொல்லும் தகவலை பொறுத்து தான் உள்ளது என போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. சந்துருஜீ கைது செய்யப்பட்டுள்ள நிலையில் புதுச்சேரி மற்றும் தமிழகத்தை அரசியல் பிரமுகர்கள் கலக்கத்தில் உள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன. சந்துருஜியின் கைது சம்மந்தமான போட்டோவை இதுவரை காவல்துறை வெளியிடவில்லை.

சிவரஞ்சனி

சார்ந்த செய்திகள்

Next Story

அ.தி.மு.க தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Edappadi Palaniswami appeals to ADMK volunteers

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24)தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இந்த நிலையில், கட்சி வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வேட்பாளர்களின் தனி முகவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக 1972-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் கண்ட முதல் வெற்றியே நாடாளுமன்ற மக்களவையின் திண்டுக்கல் தொகுதிக்கு 1973-ல் நடைபெற்ற இடைத் தேர்தல் வெற்றி தான் என்பது நமக்கெல்லாம் நன்கு நினைவில் இருக்கிறது.

இந்த இயக்கத்தின் நாடாளுமன்ற வரலாற்றில் மிக அதிகபட்சமாக, மக்களவை, மாநிலங்களவை உட்பட 49 உறுப்பினர்களை, ஜெயலலிதா காலத்தில் பெற்றிருந்தது. இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தோடு நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்கள் அவையிலும் சிறப்புடன் பணியாற்றியதோடு ஜெயலலிதாவை தொடர்ந்து, தமிழக மக்களின் நலனுக்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் இயக்கம் அ.தி.மு.க.

ஒற்றை உறுப்பினராக இருந்த ஆரம்ப காலத்திலும், மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த நேரத்திலும், அதனைத் தொடர்ந்தும், இந்திய தேசத்தின் ஒற்றுமைக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழ் நாட்டின் உரிமைகளைப் பாதுகாத்திடவும், ஏழை, எளிய, உழைக்கும் மக்கள் மற்றும் நடுத்தர வருவாய் ஈட்டும் மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வரும் அதிமுக அந்த சிறப்பான பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்றிட வேண்டும் என்ற உன்னத குறிக்கோளோடு; அராஜகத்திலும், வன்முறையிலும் கைதேர்ந்த திமுக மற்றும் பா.ஜ.கவின் பல்வேறு முறைகேடுகளையும், தில்லுமுல்லுகளையும் தாண்டி, 19.4.2024 அன்று தமிழகத்தில் சுமூகமான வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கி தேர்தல் பணியாற்றிய தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

வாக்குப் பதிவு நிறைவு பெற்று, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், வருகின்ற 4.6.2024 அன்று வாக்கு எண்ணி முடிவுகள் அறிவிக்கும் வரையிலும் கழக வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களும், கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், முகவர்களும் கவனக்குறைவாக இருந்திடாமல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.