Skip to main content

இரண்டாம் திருமணத்திற்கு பெண் பார்த்தபோது சிக்கிய போலி வழக்கறிஞர்..! 

Published on 17/07/2021 | Edited on 17/07/2021

 

Fake Advocate Imayil caught in trichy

 

திருச்சி மாவட்டம், பீமநகர் பகுதியைச் சேர்ந்தவர் இஸ்மாயில். இவர், தனது கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் வழக்கறிஞர் என்ற ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு அந்தப் பகுதியில் சுற்றியிருந்திருக்கிறார். இவர், இரண்டாவது திருமணம் செய்துகொள்வதற்காக பெண் பார்த்துக்கொண்டிருந்தார். இந்நிலையில், இவருக்குப் பெண் தருவதாக ஒரு குடும்பத்தினர் முடிவுசெய்து, அவரைப் பற்றி விசாரிக்கச் சொல்லி அவர்களது குடும்ப நண்பரான வழக்கறிஞர் கங்காதரனை அணுகியுள்ளனர். 

 

அதனைத் தொடர்ந்து வழக்கறிஞர் கங்காதரன், இஸ்மாயில் குறித்து விசாரித்துள்ளார். அதில், இஸ்மாயில் மீது 18 லட்ச ரூபாய் மோசடி வழக்கு ஒன்று இருப்பதும், அவர் வழக்கறிஞர் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. 

 

இதனால் வழக்கறிஞர் கங்காதரன், திருச்சி செஷன்ஸ் கோர்ட் நீதிமன்றக் காவல்துறையில் இஸ்மாயில் மீது புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர், இஸ்மாயிலிடம் விசாரணை நடத்தினார்கள்.

 

அந்த விசாரணையில், குளித்தலை தொகுதியில் இஸ்மாயில் என்ற பெயரில் ஒரு வழக்கறிஞர் முன்பு பணியாற்றியிருந்தார். அதே வழக்கறிஞர் கும்பகோணம் பகுதியிலும் பணியாற்றிவந்த நிலையில், அவருடைய பெயரை முகமது இஸ்மாயில் பயன்படுத்தி மோசடி செய்துள்ளது தெரியவந்தது. மேலும், அவரிடம் முறையான எந்த ஒரு உரிமமும் இல்லாததால் காவல்துறையினர் அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.