Advertisment

தொடர்ந்து மக்களின் பசியை போக்கி வரும் ஃபெயிரா அமைப்பினர்.!! (படங்கள்)

இன்று (08-06-2021) சென்னையில் 23வது நாளாக கடற்கரை பகுதியில் உள்ள மக்களுக்கு ஃபெயிரா அமைப்பினர் மதிய உணவை வழங்கினர். இந்தக் கொடிய கரோனா காலத்தில், சென்னையில் சாலையோரங்களில் ஆதரவற்ற நிலையில் இருக்கும் ஏழை, எளிய மக்களின் பசிப்பிணியைப் போக்கும் வகையில் பல தொண்டு நிறுவனங்களும் உதவி செய்துவருகின்றனர்.

Advertisment

அந்த வகையில் ஃபெயிரா அமைப்பினர் கடற்கரை பகுதியில் உள்ள தூய்மைப் பணியாளர்கள், மாநகராட்சிப் பணியாளர்கள், ஆதரவற்றோர் மற்றும் ஏழை, எளிய மக்கள் என 500க்கும் மேற்பட்ட நபர்களுக்கு சிக்கன் பிரியாணி, முட்டை மற்றும் தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்டவற்றை வழங்கினார்கள்.

Advertisment

food CORONAVIRUS LOCKDOWN chennai marina beach
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe