Skip to main content

பைக் திருட்டுக்குப் பின்னால் இருந்த பகிர் உண்மைகள்; பலே கில்லாடி சிக்கிய கதை!

Published on 11/03/2023 | Edited on 11/03/2023

 

Facts Behind Bike Theft; The story of theaf trapped!

 

விருத்தாசலத்தில் தொடர் நகை, பணம் கொள்ளையில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார். பறிமுதல் செய்யப்பட்ட நகைகளின் அளவை குறைவாகக் காட்டியதாக குற்றச்சாட்டு எழுந்ததால் நகைகளின் உரிமையாளர்கள் அச்சத்தில் உள்ளனர். 

 

விருத்தாசலம் நகர பகுதியில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக தொடர் கொள்ளை சம்பவங்கள் நடந்து வந்தன. விருத்தாச்சலம் பெரியார் நகர் சிவா என்பவர் வீட்டில் 40 பவுன் நகை, என்.எல்.சி அதிகாரி ஒருவர் வீட்டில் 50 பவுன் நகை, பெரியார் நகர் தனியார் பஸ் உரிமையாளர் வீட்டில் 100 பவுன் நகை மற்றும் லட்சக்கணக்கான ரூபாய் பணம் உள்ளிட்ட பல்வேறு கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வந்தன. கடந்த 5 ஆம் தேதி இரவு விருத்தாசலம் பெரியார் நகர் சம்பங்கி வீதியில் ஒரு வீட்டினை உடைக்கும் சத்தம் கேட்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு புகார் தெரிவித்தனர். உடன் போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனையிட்டனர். அப்போது அங்கு ஒரு மோட்டார் சைக்கிளும் வீட்டை உடைக்க தேவையான சுத்தியல் உள்ளிட்ட பொருட்களும் அங்கு கிடந்தது. போலீசார் வருவதை பார்த்ததும் அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி சென்றார். தொடர் கொள்ளை தொடர்பாக தனிப்படை அமைத்து தேடினர்.

 

அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா காட்சி பதிவுகளை எடுத்த போலீசார் அவற்றைக் கொண்டு குற்றவாளியை அடையாளம் கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனிடையே தன்னுடைய மோட்டார் சைக்கிளை காணவில்லை எனக் கூறி ஒருவர் விருத்தாசலம் காவல் நிலையத்திற்கு புகார் தெரிவிக்க வந்தார். அப்போது சந்தேகத்தின் பேரில் அந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.  அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாகப் பேசியதால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் தொடர் விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில் அவர் கம்மாபுரம் அடுத்த விளக்கப்பாடி கிராமத்தை சேர்ந்த கணேசன் மகன் குணா (வயது 31) என்பது தெரிய வந்தது. மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக விருத்தாசலம் பெரியார் நகரில் பூட்டியிருந்த வீடுகளை கண்காணித்து இரவு நேரத்தில் அந்த வீட்டிற்கு தனியாகச் சென்று அந்த வீடுகளை உடைத்து வீடுகளில் இருந்த நகை, பணம் ஆகியவற்றை கொள்ளை அடித்ததாகவும், விருத்தாசலம் பகுதியில் உள்ள ஒரு சில நகைக்கடை, வட்டிக்கடையில் பாதி விலைக்கு நகைகளை விற்பனை செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்தது. மேலும் தான் திருடிய நகை பணத்தை கொண்டு விருத்தாசலம் பூதாமூரில் புதிய மெத்தை வீடு கட்டி உள்ளதாகவும், கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த வீட்டிற்கு கிரஹப்பிரவேசம் நடத்தியதாகவும், சின்னசேலத்தில் மோட்டார் சைக்கிள் ஷோரூம் வைத்திருப்பதாகவும் ஒப்புக் கொண்டார்.

 

Facts Behind Bike Theft; The story of theaf trapped!

 

இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்து அவரிடமிருந்த 45 பவுன் நகைகளை மீட்டனர். மேலும் கொள்ளை அடித்த பணத்தில் கட்டப்பட்ட வீடு மற்றும் மோட்டார் சைக்கிள் ஷோரூம் ஆகிய இரண்டு சொத்துக்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாகவும், குணா கொள்ளையடித்த நகைகளை விற்ற விருத்தாசலம் கடைவீதியில் உள்ள சரஸ்வதி வட்டிக் கடையின் உரிமையாளர் கண்ணாரம் அவரது மனைவி சுகன்யா அவரது உறவினர் மனோகர் மற்றும் செந்தில் ஜுவல்லரி உரிமையாளர் செந்தில் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர். மேலும் விசாரணை நடத்தி மீதமுள்ள நகைகளை பறிமுதல் செய்து உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், விருத்தாசலம் பெரியார் நகர் பகுதியில் உள்ள வீடுகளில் கொள்ளை போன 7 சம்பவங்களில் தொடர்புடையவர் குணா என்பதும் மேலும் அவர் மீது நெய்வேலி, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் பல்வேறு கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது எனவும் போலீஸ் தரப்பில் தெரிவித்தனர்.

 

தனிப்படை போலீசார் குணாவை கடந்த 5 நாட்களுக்கு மேலாக காவலில் எடுத்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் அவர் தான் கொள்ளையடித்து விற்பனை செய்ததாக கூறப்பட்ட பல்வேறு நகைக்கடைகள், வட்டிக்கடைகளுக்கு சென்று சுமார் 100 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் சில வட்டிக்கடை, நகைக் கடை உரிமையாளர்கள் தாங்கள் குணாவிடம் இருந்து வாங்கிய நகைகளை திருப்பிக் கொடுத்து விடுவதாக கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் கொடுக்காததால் போலீசார் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப் போவதாக தெரிகிறது. அதேபோல் பெரியார் நகர் பகுதியில் திருடு போன நகைகளின் அளவு 100 சவரனுக்கு மேல் இருக்கும். ஆனால் 100 சவரன் நகைகளை குணாவிடம் இருந்து பறிமுதல் செய்த போலீசார் வெறும் 45 பவுன் மட்டுமே அவரிடமிருந்து பறிமுதல் செய்ததாக காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  பெரியார் நகர் பகுதியில் தங்கள் நகை பணத்தை பறிகொடுத்த மக்கள் எப்படியாவது தங்களுக்கு நகை மற்றும் பணம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்து வந்த நிலையில் குறைவான அளவு நகைகளையே குணாவிடம் இருந்து பறிமுதல் செய்திருப்பதாக போலீசார் கூறுவதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட குணாவை மீண்டும் காவலில் எடுத்து விசாரித்து அவர் கொள்ளையடித்து விற்பனை செய்த அனைத்து நகைகளையும் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வரிடம் மனு கொடுக்க முயன்ற பாஜக நிர்வாகியால் பரபரப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A BJP executive who tried to petition the Chief Minister stalin

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி உள்ளது. இதன் ஒரு பகுதியாக முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கிடையே தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் 22 ஆம் தேதி திருச்சியில் ஆரம்பித்த தேர்தல் பிரச்சாரத்தை ஏப்ரல் 17 ஆம் தேதி சென்னை நிறைவு செய்திருந்தார்.

இத்தகைய சூழலில் கோடைக்காலத்தையொட்டி ஓய்வெடுப்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (29.04.2024) கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்றார். அதன் பின்னர் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்கிறார். கொடைக்கானலில் உள்ள தனியார் ஓட்டலில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது குடும்பத்துடன் 5 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கவுள்ளார். அதன்பின்னர் கொடைக்கானலில் இருந்து மே 4 ஆம் தேதி சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

A BJP executive who tried to petition the Chief Minister stalin

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் கஞ்சாவுடன் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மனு கொடுக்க வந்த பாஜக ஓபிசி அணியின் செயற்குழு உறுப்பினர் சங்கர பாண்டி என்பவர் வந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட மதுரை காவல் மாநகர காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி கஞ்சாவுடன் மனு கொடுக்க வந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதே சமயம் கொடைக்கானலில் இருந்தே தனது அலுவல் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் மேற்கொள்வார் எனவும் அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடைக்கானல் வருகையையொட்டி சுற்றுலா பயணிகள், சுற்றுலாத்தலங்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி இன்று முதல் மே 4 ஆம் தேதி வரை கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது; சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Next Story

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்; சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Rs. 4 crore confiscation issue; CBCID case registration

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் கடந்த 23 ஆம் தேதி (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தமமும் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரையும் அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

Rs. 4 crore confiscation issue; CBCID case registration

இது குறித்து நயினார் நாகேந்திரன் சென்னை தியாகராயர் நகரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்தப் பணத்திற்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார்.

இத்தகைய சூழலில் தாம்பரம் போலீசார் இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு நேற்று (28.04.2024) கொண்டு சென்று ஒப்படைத்தனர். அதாவது பணம் எடுத்துச் சென்ற சூட்கேஸ்கள், 7 பைகள், 3 செல்போன்கள், 15 பேரிடம் பெற வாக்குமூலம் தகவல் அடங்கிய ஆவணங்கள், நயினார் ஹோட்டல் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள், ரயில் டிக்கெட் பெற நயினார் கையொப்பமிட்ட அவசர கோட்டாவிற்கான படிவம் ஆகியவற்றை தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

Rs. 4 crore confiscation issue; CBCID case registration

இந்நிலையில் இந்த வழக்கு குறித்து சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன்னதாக இந்த வழக்கில் சதீஷ், நவீன், பெருமாள் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. விரைவில் சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.