Skip to main content

வேலையை விட்டு நீக்கியதை கண்டித்து தொழிற்சாலை முன்பு தொழிலாளர்கள் போராட்டம்!

Published on 11/07/2018 | Edited on 11/07/2018

காஞ்சிபுரம்  - நீர்வள்ளூர் -  எட்டு வருடமாக பணியிலிருந்த 22 தொழிலாளர்களை பணி நீக்கியதை கண்டித்து நீர்வள்ளூர் எஸ்எச்சி எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலை முன்பு வாயிற்கதவை அடைத்து குடும்பத்துடன் முற்றுகை போராட்டம்.
 

 

 

காஞ்சிபுரம் மாவட்டம் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம். இம்மாவட்டத்தில்  தமிழ்நாடு மட்டுமல்லாது பிற மாநில தொழிலாளர்கள் பல்லாயிரக்கணக்கானோர் பணிபுரிந்து வருகின்றனர். இம்மாவட்டத்தில் மூன்று சிப்காட் தொழிற் பூங்கா உள்ளது. காஞ்சிபுரம் அருகே வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்தில் நீர்வள்ளூர் ஆரியம்பாக்கம் கிராமத்தில் எஸ்.எச்.சி. என்ற எலக்ட்ரானிக் தொழிற் நிறுவனம் இயங்கி வருகின்றது . இதில் ஐநூறுக்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். இந்த நிறுவனம் சாம்சங் நிறுவனத்திற்கு உதிரிபாகங்கள் தயாரித்து அளித்து வருகிறது .
 

இந்நிலையில் இதில் கடந்த எட்டு வருடங்களாக பணிபுரிந்து வந்த 22 தொழிலாளர்களை திடீரென்று இந்த நிறுவனம் பணி நீக்கம் செய்தது .இதனால் அவர்கள் தங்களது வாழ்வாதாரம் தடைபடவே செய்வதறியாமல் அதிர்ச்சியுற்றனர். இந்த நிலையில் இன்று பாதிக்கபட்ட 22 தொழிலாளர்களும் தமது குடும்பத்தினருடன் இந்த நிறுவன வாயிலை அடைத்து முற்றுகையிட்டு தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் எனவும், வேலை வாய்ப்பில் தமது கிராமத்தினருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வாலாஜாபாத் ஒன்றிய செயலாளர் ஆட்டுபுத்தூர் தை கோபி தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். 
 

 

 

இதனால்  அந்த நிறுவனத்திற்குள் பணிபுரியும் நூற்றுக்கணக்கானோர் யாரும் உள்ளே செல்ல முடியாத சூழ்நிலை உருவானதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.  இந்நிலையில் காஞ்சிபுரம் தாலுக்கா மற்றும் சுங்குவார்சத்திரம் காவல் துறையினர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் நிறுவன நிர்வாகிகளிடமும், தொழிலாளர் துணை ஆய்வாளரிடம் பேசி இதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல் ஆய்வாளர் வெற்றி செல்வன் பேச்சு வார்த்தை நடத்தியதையடுத்து தொழிலாளர்களும் அவர்தம் குடும்பத்தினரும் கலைந்து சென்றனர்.
 

இந்த போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் பு.பெ.கலைவடிவன், மாநில வழக்கறிஞர் அணி நிர்வாகி தாடி .கார்த்திக், காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி செயலாளர் டேவிட், மாவட்ட துணை செயலாளர் திருமாதாசன், ஊர் மக்கள் சார்பாக கந்தன், காண்டீபன், சாந்தி, ஈஸ்வரி, மேகலா உட்பட பல்வேறு அமைப்புகளை சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியாவின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்கிய நாள்” - தொல்.திருமாவளவன்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
today India redemption started writing from Tamil Nadu says Thirumavalavan

சிதம்பரம் நடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்குட்பட்ட அவரது சொந்த ஊரான அங்கனூர்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனது தாயாருடன் வாக்களித்தார்.

இதனைதொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே வந்து பேசுகையில், இந்த தேர்தல் இரண்டு கட்சிகளுக்கு எதிரான தேர்தல் அல்ல. சங்‌பரிவார் மற்றும் இந்திய மக்களுக்கு இடையேயான தர்ம யுத்தம்.  நாட்டு மக்கள் வெற்றிபெற வேண்டுமென்பதற்காக இந்தியா கூட்டணி மக்கள் பக்கம் நிற்கிறது.‌ இந்திய அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும்.‌ நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.‌தமிழ்நாட்டில் 40க்கும் 40 இடங்களிலும் வெற்றி பெறும்.

கூட்டணி பலம், திமுக அரசின் மூன்றாண்டுகள் நலத்திட்டங்கள், இந்தியா கூட்டணியின் நோக்கங்களால் எங்கள் அணி மாபெரும் வெற்றி பெறும். இந்த தேசத்தின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்குகிறோம் என்பதை அறிவிக்கும் நாள் இன்று. தமிழ்நாட்டுப் பெண்கள் திமுக அரசின் மீது நன்மதிப்பை கொண்டுள்ளனர். டெல்லியில் பாஜக வென்றால் மாநில அரசுகளை கலைக்கும் நிலை வரலாம், அப்படி நடந்தால் மகளிர் உரிமைத் தொகைக்கு ஆபத்து வரலாம்.‌ தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட வேண்டும். ஆந்திரா, தெலுங்கானா கர்நாடகா மற்றும் கேரளாவில் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன். சிதம்பரம் தொகுதியில் பானை சின்னம் அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்” என்றார்.

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.