Skip to main content

ஆத்தூர் அ.தி.மு.க.ஒன்றியத்தில் கோஷ்டி பூசல் உச்சகட்டம்;ஒன்றிய செயலாளர் படத்தை போடாமல் விளம்பரம் செய்த நிர்வாகிகள்!!

Published on 17/10/2018 | Edited on 17/10/2018

டி.டி.வி. அணிக்கு மாற திட்டமிடும் அ.தி.மு.க.புள்ளிகளால் திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஒன்றியம் அ.தி.மு.க. கோஷ்டி பூசல் உச்சகட்டம் அடைந்துள்ளது. அ.தி.மு.க.வின் 47-வது ஆண்டு தொடக்கவிழா பொதுக்கூட்டத்தில் அம்பலமானது. 

 

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளராக இருப்பவர் பி.கே.டி.நடராஜன் இவர் ஒன்றிய செயலாளர் பதவியுடன் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவராகவும் கடந்த முறை பதவி வகித்தார். ஜனதா கட்சியிலிருந்து விலகி இரு வருடங்களுக்கு முன்பு அ.தி.மு.க.வில் இணைந்த அவர் படிப்படியாக வளர்ச்சி கண்டு சட்டமன்ற உறுப்பினராகவும் ஆனார். இவர் தற்போது கட்சி தொண்டர்களை மதிக்காமல் தனக்கு கீழ் செயல்படும் நால்வர் அணியை வைத்துக்கொண்டு கட்சியை நடத்தி வந்ததால் கடந்த ஐந்து வருடங்களாக ஆத்தூர் ஒன்றிய அ.தி.மு.க.வில் பலத்த கோஷ்டி பூசல் இருந்து வந்தது. ஜெயலலிதா மறைவிற்கு முன்வரை அமைதிகாத்த அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் தற்போது தங்கள் கோபத்தை வெளிக்காட்ட தொடங்கிவிட்டார்கள். ஒன்றிய துணைச் செயலாளர் மணலூர் சின்னச்சாமி, ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆத்தூர் தேவராஜன், ஒன்றிய பொருளாளர் எம்.ஆர்.எஸ்.முனியப்பன், ஒன்றிய பாசறை தலைவர் சேடபட்டி ராஜேந்திரன், மணலூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ரத்தினகுமார் உட்பட பலர் தங்களது எதிர்ப்பை பகிரங்கமாக காட்ட தொடங்கிவிட்டனர். 

 

Factional conflict

 

அ.தி.மு.க.வின் 47-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் சின்னாளபட்டியில் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள வரும் முன்னாள் அமைச்சர் நத்தம் ஆர்.விசுவநாதனை வரவேற்று விசுவநாதனின் விசுவாசிகளான மேற்கண்ட புள்ளிகள் தங்களது எதிர்ப்பை பிளக்ஸ் போர்டிலும், தினசரி நாளிதழ் விளம்பரத்திலும் காட்ட தொடங்கினார்கள். இதில் அனைத்து விளம்பரங்களிலும் ஒன்றிய செயலாளரான பி.கே.டி.நடராஜன் படம் இல்லாமல் வெளிவந்துள்ளது அ.தி.மு.க.வினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதுகுறித்து மணலூர் சின்னச்சாமியின் ஆதரவாளர்கள் கூறுகையில், பி.கே.டி. நடராஜன் ஒன்றிய செயலாளராக இருந்து கொண்டு கட்சி நிர்வாகிகளை மதிப்பதில்லை. ஆத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் குடியிருக்காமல் திண்டுக்கல்லைத் தாண்டி சௌந்திரராஜா ஏர்போர்ட் நகரில் குடியிருப்பதால் மலையில் உள்ள தொண்டர்கள் இவரை சந்திக்க முடியாமல் திரும்பி விடுகின்றனர். தொண்டர்களோ, கட்சி நிர்வாகிகளோ செல்போனில் தொடர்பு கொண்டால் எடுப்பதில்லை என்று குற்றம் சாட்டினார்கள். 

 

Factional conflict

 

பி.கே.டி. நடராஜன் ஆதரவாளர்கள் இதுகுறித்து கூறும்போது... மணலூர் சின்னச்சாமி கோஷ்டி எப்போதுமே கட்சியை பிளவுபடுத்தும் நோக்கில்தான் செயல்படும். கடந்த முறை அ.தி.மு.க. ஆட்சியின் போது நத்தம் விசுவநாதன் ஆதரவாளர்கள் என்று காட்டிக்கொண்டு மணலூர் சின்னச்சாமி, அவருடைய மகன் ரத்தினகுமார், மற்றொரு மகன் தமிழ், மனைவி, மருமகள் என அனைவருக்கும் கட்சி பதவிகளை பகிர்ந்து கொடுத்துவிட்டு தொண்டர்களை ஏமாற்றிவிட்டார். இதனால் இவரோ, இவருடைய மகனோ மணலூர் ஊராட்சியில் போட்டியிட்டால் டெபாசிட் கூட வாங்க முடியாது என்றனர்.

 

Factional conflict

 

ஒன்றிய செயலாளர் படத்தை போடாமல் நத்தம் விசுவநாதனின் மருமகனான ஆர்.வி.என்.கண்ணனின் படத்தை போட்டு  பிளக்ஸ் வைத்திருப்பதால் அ.தி.மு.க. தொண்டர்கள் இவர் பின்னால் செல்லமாட்டார்கள் என்றனர். ஏற்கனவே டி.டி.வி. தினகரன் கோஷ்டி வளைத்து வளைத்து தங்கள் கட்சிக்கு ஆட்களை சேர்த்து வரும் இந்த நேரத்தில் ஆத்தூர் ஒன்றிய அ.தி.மு.க.கோஷ்டி பூசல் அவர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. மொத்தத்தில் அ.தி.முக. ஆத்தூர் ஒன்றியத்தில் அம்போவாவது உறுதியாகிவிட்டது. ஆறுதலான விசயம் என்னவென்றால் சின்னாளபட்டி நகர செயலாளர் கணேஷ்பிரபு வைத்த பிளக்ஸ் போர்டில் மட்டும் அதிசயமாய் பி.கே.டி.நடராஜன் படம் இருந்தது!

சார்ந்த செய்திகள்

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.