ADVERTISEMENT

ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் இலவச மாஸ்க்!

02:12 PM Jul 27, 2020 | suthakar@nakkh…

ADVERTISEMENT

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. ஆறு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

ADVERTISEMENT

உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. மராட்டியத்திற்கு அடுத்ததாக தமிழகத்தில் கரோனா தொற்று அதிக அளவு இருந்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை கடந்துள்ளது. மூன்றாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளார்கள். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட ஆட்சியர் என அனைவருக்கும் கரோனா பாதிப்பு தற்போது உறுதி செய்யப்பட்டு வருகின்றது. பொதுமக்கள் அனைவரும் முக கவசங்களை பயன்படுத்த வேண்டுமென மருத்துவர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் இலவசமாக முகக்கவசம் விநியோகம் செய்யும் திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிலையில், ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் இலவச மாஸ்க் பெற்றுக்கொள்ளலாம் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT