Advertisment

ரேஷன் கடைகளில் இன்று முதல் முகக்கவசம்...

jh

Advertisment

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. ஆறுலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. மராட்டியத்திற்கு அடுத்ததாக தமிழகத்தில் கரோனா தொற்று அதிகளவு இருந்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை இரண்டுலட்சத்தை கடந்துள்ளது,மூன்றாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளார்கள். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட ஆட்சியர் என அனைவருக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகின்றது. பொதுமக்கள் அனைவரும் முக கவசங்களை பயன்படுத்த வேண்டும் எனமருத்துவர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளில் இலவசமாக முகக்கவசம் விநியோகம் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இன்று காலை முதல்வர் பழனிசாமி இந்த திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார்.

Mask
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe