flood

தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் பெரம்பலூர் அருகே உள்ள கொட்டகரை மருதையாற்றில் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மருதையாறு நீர்தேக்கத்திலிருந்து உபரி நீர் திறந்து விடப்படுவதால் ஆற்றைக் கடக்க வேண்டாம் என பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.