Skip to main content

“எடப்பாடி பழனிசாமியே பிரதமராக வரக்கூடிய அளவுக்கு...” - ராஜேந்திர பாலாஜி ரண்டக்க ரண்டக்க

Published on 25/10/2023 | Edited on 25/10/2023

 

"To the extent that Edappadi Palaniswami can become the Prime Minister.." -Rajendra Balaji Randakka Randakka..

 

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ராஜேந்திர பாலாஜி பேசிய பேச்சுக்கு திமுக, பா.ஜ.க. ஆகிய இரண்டு கட்சிகளும்  ‘ரியாக்ட்’ செய்துள்ளன. “ராஜேந்திர பாலாஜி பேசியிருப்பது இந்த ஆண்டினுடைய மிகப்பெரிய ஜோக்” என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதியும், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கருத்து சொல்லாமல் சிரித்திருப்பதும் அரசியல் வட்டாரத்தை சுவாரஸ்யமாக்கி உள்ளது.

 

விருதுநகரில் நடைபெற்ற அதிமுக துவக்க விழா பொதுக்கூட்டத்தில் அப்படி என்னதான் பேசினார் ராஜேந்திர பாலாஜி? 

 

“அதிமுகவுக்கு வயசு 52. இது ஒரு பக்குவப்பட்ட வயது. எதையும் சிந்தித்துச் செயல்படக்கூடிய வயது. 20 வயதென்றால் பயமறியாமல் ஏதாவது செய்து எதிலாவது சிக்கிவிடுவார்கள். 70 வயதில் தடுமாற்றம் வந்துவிடும். பக்குவப்பட்ட 52 வயது என்பதால், எதையும் தீர யோசித்து கம்பீரமாகச் செயல்படுகிறது அதிமுக. அதனால், எதையும் நிதானித்து செயல்படக்கூடிய, பக்குவமானவராக இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. திமுக தலைமை, இன்றைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சொன்னது எல்லாம் பொய். ஏதாவது ஒரு பொய் சொல்லியிருந்தால் ஒன்றிரண்டு பொய் சொல்லியிருக்கிறார் என்று சொல்லலாம். இவர் சொன்னது எல்லாமே பொய். எடப்பாடி பழனிசாமி சொன்னது எல்லாம் நிஜம். ரேஷன் கார்டு வைத்திருக்கும், அரிசி வாங்கக்கூடிய அத்தனை குடும்பத் தலைவிகளுக்கும் ரூ.1000 வழங்கப்படும் என்றார்கள்.

 

நீட் தேர்வு ரத்து என்றார்கள். சொன்னதற்கு மாறாக நடந்து கொண்டார்கள்.  இரண்டே முக்கால் ஆண்டு கழித்து நீட் தேர்வை ரத்து செய்ய கையெழுத்து இயக்கம் நடத்துகிறார்கள். இதெல்லாம் ஏமாற்று வேலை. எல்லாம் நாடகம்; எல்லாம் நடிப்பு. எடப்பாடி பழனிசாமி கரத்தை வலுப்படுத்துங்கள். இரட்டை இலைக்கு வாக்களித்து, அவர் சொல்லுகின்ற பிரதமர், ஏன் சூழ்நிலை வந்தால் எடப்பாடி பழனிசாமியே பிரமராக வரக்கூடிய அளவுக்கு ஒரு அற்புதமான தீர்ப்பை 40 தொகுதிகளிலும் தமிழ்நாட்டு மக்கள் வழங்கினால், இந்தப் பகுதி மக்கள் வழங்கினால், எடப்பாடி பழனிசாமி கரம் ஓங்கினால், டெல்லியில் எடப்பாடி பழனிசாமி சொல்வது நடக்கும். வெள்ளந்தித்தனமாக உண்மை மட்டுமே பேசக்கூடிய, வெகுளித்தனமாக பேசக்கூடிய உண்மை உழைப்பாளி, ஒரு விவசாயி, பச்சைத் தமிழன், புரட்சித் தமிழன் எடப்பாடி பழனிசாமி அடுத்து வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலிலே முதலமைச்சராக வேண்டும்” எனப் பேசியிருக்கிறார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

தடுமாறிய ஹெலிகாப்டர்; உயிர் தப்பிய அமித்ஷா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகள் களை கட்டியிருக்கும் நிலையில் பீகாரில் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில நிமிடங்கள் தடுமாறியது பரபரப்பை ஏற்படுத்தியது. சில நிமிடங்கள் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி அலைந்த ஹெலிகாப்டர் பின்னர் சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் அங்கிருந்து புறப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.