மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு; புதிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்

Extension more month link Aadhaar number with electricity connection number

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கவேண்டும் என தமிழக அரசின் மின்சாரத் துறை தெரிவித்திருந்த நிலையில், இதற்கானசிறப்பு முகாம் கடந்த நவம்பர் மாதம் 28 ஆம் தேதிதொடங்கி டிசம்பர் 31 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கடைசி நாளான இன்று மின்இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, "மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கானகாலநீட்டிப்பு வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டதைத்தொடர்ந்து, மேலும்ஒரு மாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது ஜனவரி 31 வரையில்நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்காக கூடுதல் முகாம்கள் நடத்தப்படவுள்ளன." எனத்தெரிவித்துள்ளார்.

Aadhaar TANGEDCO
இதையும் படியுங்கள்
Subscribe