jh

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. ஆறுலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

Advertisment

உலகின் பல நாடுகளில்கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத்தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. மராட்டியத்திற்கு அடுத்ததாக தமிழகத்தில் கரோனா தொற்று அதிகளவு இருந்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை இரண்டுலட்சத்தை கடந்துள்ளது. மூன்றாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளார்கள். அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட ஆட்சியர்கள்என அனைவருக்கும் கரோனா பாதிப்பு தற்போது உறுதி செய்யப்பட்டு வருகின்றது. இதன் காரணமாகவருகின்ற ஆகஸ்ட் 31ம் தேதி தமிழகத்தில் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் ஆகஸ்ட் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படுவதாக காவல் ஆணையர் மகேஷ் குமார் தெரிவித்துள்ளார்.