Skip to main content

நில அபகரிப்பு தொடர்பாக கவர்னர் மாளிகையில் புகார் தெரிவிக்கலாம் - கிரண்பெடி தகவல்! 

Published on 16/11/2019 | Edited on 16/11/2019

புதுச்சேரியில் நில அபகரிப்பு தொடர்பாக கவர்னர் மாளிகையில் புகார் அளிக்கலாம் என துணை நிலை ஆளுநர்  கிரண்பெடி தெரிவித்துள்ளார்.
 

 Expropriating cases can be complained in governor palace


புதுச்சேரி மாவட்ட ஆட்சியர்  அருண் தனது அலுவலகத்தில் கடந்த 6-ஆம் தேதி நில அபகரிப்பு மற்றும் சொத்து தகராறுகள் குறித்து பொதுமக்கள் புகார் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது, ‘நில அபகரிப்பு மற்றும் சொத்து தகராறு சம்பந்தமாக பொதுமக்கள் அளிக்கும் புகார் மீது துரிதமாக விசாரணை நடத்தி வழக்குகளை முடிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் புதுச்சேரி கவர்னர் மாளிகையில் கவர்னர் கிரண்பெடி, போலீஸ் டி.ஜி.பி பாலாஜி ஸ்ரீவஸ்தவா மற்றும் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் மற்றும் உயர் அதிகாரிகளுடன் நில அபகரிப்பு விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இதில் அவர், போலீஸ் அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

இதுதொடர்பாக கவர்னர் கிரண்பெடி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

"பொதுமக்கள் அளிக்கும் நில அபகரிப்பு தொடர்பாக வரும் புகார்களை போலீசார் முக்கிய வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். புகார்கள் மீது உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று விசாரணை மேற்கொள்ள வேண்டும். அதன் உண்மை தன்மையை குறித்து ஆராய வேண்டும்.


மேலும் புகார்தாரருக்கு மிரட்டல் அல்லது யாராவது துன்புறுத்தினால் போலீஸ் டி.ஜி.பி.யிடம் நேரடியாக புகார் அளிக்கலாம். அதேபோல் ராஜ்நிவாஸ் (கவர்னர் மாளிகை) குறைகேட்கும் நேரத்தில் புகார் தெரிவிக்கலாம். 1031 என்ற இலவச எண்ணுக்கு புகார் அளிக்கலாம். இனி புதுச்சேரியில் நில அபகரிப்பு நடப்பதை தடுப்போம்". இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பிரதமர் மோடி பிறந்தநாள் வேலையின்மை தினம்” - புதுச்சேரி இளைஞர் காங்கிரஸ்  

Published on 17/09/2023 | Edited on 17/09/2023

 

“Prime Minister Modi Birthday Unemployment Day” - Puducherry Youth Congress

 

பிரதமர் மோடி பிறந்தநாளை வேலையின்மை தினமாக கடைப்பிடித்து புதுச்சேரி இளைஞர் காங்கிரஸார் நூதன கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

 

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் இன்று (செப்.17ம் தேதி) பாஜகவினரால் கொண்டாடப்பட்டது. இவருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட ஏராளமானோர் தங்களது வாழ்த்தை தெரிவித்தனர். 

 

இந்நிலையில், புதுச்சேரி இந்திரா காந்தி சிலை முன்பு திரண்ட புதுச்சேரி இளைஞர் காங்கிரஸார், கோஷங்களை எழுப்பினர். மேலும், டீ, பக்கோடா, சமோசா ஆகியவற்றை விற்று தங்களது கண்டனங்களை தெரிவித்தனர். 

 

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, “பா.ஜ.க. அரசு ஜி20 மாநாட்டுக்கு ரூ. 4000 கோடி, புதிய நாடாளுமன்ற கட்ட ரூ. 20,000 கோடி என செலவு செய்துவிட்டு, நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்காமல்; தனது நண்பர் அதானிக்கு சலுகை வழங்குகிறது” என்று பேசினார். 

 

 

Next Story

73 பவுன் நகையை திருடி மோசடி செய்த கூட்டுறவுச் சங்க பொறுப்பாளர்

Published on 20/05/2023 | Edited on 20/05/2023

 

Cooperative society manager who stole 73 pounds of jewelry and cheated

 

புதுச்சேரி கொம்பாக்கத்தில் உள்ளது தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம். இந்தச் சங்கத்தில் கொம்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் பலர் தங்கள் தங்க நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றுள்ளனர். 

 

இதனிடையே கூட்டுறவு கடன் சங்கத்தில் வருடாந்திர தணிக்கை முறையாக மேற்கொள்ளப்படவில்லை எனவும், முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் பல்வேறு புகார்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து சங்க தலைவர் எம்பெருமாள் கடந்த 16ஆம் தேதி தணிக்கையாளர் இந்திரமோகனுடன் சங்க நிர்வாக பொறுப்பாளரும், முதுநிலை எழுத்தருமான பாப்பான்சாவடியை சேர்ந்த கதிரவன்(48) என்பவரிடம் சங்க கணக்கு வழக்குகளை தணிக்கை செய்யக் கூறினர்.

 

இதற்கு கதிரவன் சரியான பதில் அளிக்காததுடன் மறுநாள் 17ஆம் தேதி பணிக்கு வராமல் விடுப்பு எடுத்துக் கொண்டார். இதனால் சந்தேகமடைந்த எம்பெருமாள், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரை சந்தித்து சங்க கணக்குகளை ஆய்வு செய்ய வலியுறுத்தினார். அதனைத் தொடர்ந்து துணைப் பதிவாளர் தலைமையில் தணிக்கையாளர்கள் இந்திராமோகன், குப்புராமன், சிவசங்கர், திருநாவுக்கரசு, சந்தோஷ் குமார் அடங்கிய குழுவினர் சங்க பொறுப்பாளர் கதிரவனை சந்தித்து ஆய்வுக்கு அழைத்தனர். ஆனால் கதிரவன் ஆய்வுக்கு வர மறுத்து, நகை பாதுகாப்பு பெட்டகத்தின் சாவியை மட்டும் கொடுத்து அனுப்பினார்.

 

துணைப் பதிவாளர் முன்னிலையில் நகை பெட்டகம் திறந்து தணிக்கை செய்யப்பட்டது. அப்போது நகை கடன் கணக்குகளில் 198 கணக்குகள் மட்டுமே இருந்தன. அதிலும் 18 நகை கணக்கில் நகைகள் இல்லாமல் வெறும் பைகள் மட்டுமே இருந்தன. அவற்றில் இருந்த ரூபாய் 33 லட்சம் மதிப்புள்ள 588.50 கிராம் தங்க நகைகள் மாயமாகி இருந்தன. இதுகுறித்து சங்க நிர்வாக பொறுப்பாளர் கதிரவன் மீது சங்க தலைவர் எம்பெருமாள் முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

 

போலீசார் மோசடி பிரிவில் வழக்கு பதிவு செய்து கதிரவனிடம் விசாரணை செய்தனர். விசாரணையில் கதிரவன் கடந்த பல ஆண்டுகளாக ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். கொரோனா காலக்கட்டத்தில் ஏலச்சீட்டில் நஷ்டம் ஏற்பட்டதால் கூட்டுறவு சங்கத்தில் வைக்கப்பட்ட நகையை எடுத்து வேறு இடங்களில் அடமானம் வைத்து செலவு செய்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து கதிரவனை கைது செய்த போலீசார் நகைகளை அடமானம் வைக்க கதிரவனுக்கு உதவியவர்களை தேடி வருகின்றனர்.