கடந்த2018 ஆம்ஆண்டு தூத்துக்குடியில் நடைபெற்றஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக பல பேரிடம்விசாரணை நடத்தப்பட்டது. நாம் தமிழர் கட்சிதலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மற்றும் நடிகர்ரஜினிகாந்த் ஆகியோரும் நேரில் ஆஜராகதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை விசாரிக்கும்அருணா ஜெகதீசன் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. சீமான்கடந்தமாதம் ஆஜரான நிலையில்தற்போது நடிகர்ரஜினிகாந்த் நேரில் ஆஜராவர் எனஎதிர்பாக்கப்பட்டது. இந்நிலையில் அவர் நேரில் ஆஜராகாமல் நடிகர்ரஜினிகாந்தின் வழக்கறிஞர்கள் தற்போது ஆணையத்தில் ஆஜராகியுள்ளனர்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடுசம்பவத்தின் இறுதியில்காயமடைந்தமக்களைநேரில் பார்க்க சென்றரஜினிகாந்த் தூத்துக்குடி விமானநிலைத்தில் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதாகபேசியிருந்த கருத்துசர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில்அவரிடம்இதுதொடர்பாக நேரில் விசாரணை ஆணையம்விசாரிக்கும் எனஎதிர்பார்க்கப்பட்ட நிலையில்,தற்போது அவரதுவழக்கறிஞர் இளம்பாரதி உட்பட 3வழக்கறிஞர்கள் ஆணையத்தில் ஆஜராகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆணையத்தில் நேரில் ஆஜராவதில் இருந்துவிலக்கு வேண்டும் என்ற ரஜினியின் கோரிக்கையை விசாரணை ஆணையம் ஏற்றுகொண்டது.அதேபோல்ரஜினியிடம் கேட்கவேண்டிய கேள்விகள் சீலிடப்பட்ட கவரில் அவரதுவழக்கறிஞர்களிடம் கொடுக்கப்பட்டது.