Skip to main content

தீபாவளிக்கு வாங்கும் சுவீட் கெட்டுப் போயிருந்தால் நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்... திருச்சி அஸ்வீன் சுவீட் கடையில் அச்சு முறுக்கில் பூசனம் பூத்திருப்பதாகப் புகார்!!! 

Published on 02/11/2018 | Edited on 02/11/2018
experied food

 

தீபாவளி சீசன் நேரத்தில் திருச்சியில் ஒரு ஸ்வீட் கடையில் அச்சுமுறுக்குப் பூசனம் பூத்து இருப்பதைப் பார்த்து வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்து புகார் செய்திருக்கிறார். 
 

சட்டகல்லூரியில் பேராசிரியராக இருப்பர் முருகேஷன் இவர் திருச்சி கே.கே.நகர் பகுதியில் உள்ள அஸ்வீன் ஸ்வீட் கடைக்குச் சென்றிருக்கிறார். அங்குத் தீபாவளியை முன்னிட்டு அச்சு முறுக்குப் பாக்கெட் ஒன்றை வாங்கிச் சென்றிருக்கிறார். 
 

வீட்டிற்குச் சென்று தன்னுடைய குழந்தைக்கு ஆசையாக எடுத்துப் போது அந்தப் பாக்கெட்டில் உள்ள அச்சு முறுக்குப் பூசம் பூத்து போய் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து. திரும்பவும் கே.கே.நகர் கடைக்குக் கொண்டு வந்து திரும்ப இவ்வளவு பெரிய கடையில் நீங்கள் கொடுத்த இந்த முறுக்கு ஏன் இப்படி இருக்கிறது என்று கேட்க கடையின் நிர்வாகமோ இல்ல அது பழைய பாக்கெட்டாக இருக்கும் என்று மறுக்க இல்ல நீங்களே பாருங்க என்று கொடுக்க உற்பத்தி செய்து 1 மாதம் ஆகியிருப்பதாகத் தேதி இருப்பதைப் பார்த்து அஸ்வீன் ஊழியர்கள் சாரி சார் தவறு நடந்திருக்கிறது என்று மன்னிப்புக் கோரியிருக்கிறார்கள். 
 

கோபமான பேராசிரியர் என்ன சார் இவ்வளவு ஈசியா சாரி சொல்றீங்க இந்த அச்சு முறுக்கு உங்க கடை பிரபலமாகக் காரணம் அப்படிப் பட்ட அச்சு முறுக்கை இப்படிக் கவனக்குறைவாகப் பூசம் பூத்து எங்களுக்குக் கொடுத்திருக்கீறீர்கள். அதைக் குழந்தை சாப்பிட்டிருந்தால் என்ன ஆயிருக்கும் என்று அதை நினைத்து பார்த்தீர்களா? என்று சொல்லி உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்குப் புகார் செய்திருக்கிறார். 
 

இது குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரியிடம் இது குறித்துப் பேசிய போது அவர்கள்.. இந்த மாதிரி விழாக்காலங்களில் சுவீட் போன்ற உணவு திண் பண்டங்கள் வாங்கும் போது உணவு பண்டங்களில் கெட்டுப் போன பொருட்கள் இருப்பதைப் பார்த்தால் 9444042322 என்கிற எண்ணிற்குக் கெட்டு போன பொருளையும் அந்தக் கடையை உடனே படம் பிடித்து வாட்ச்ஆப்பில் புகார் செய்யவும் என்று அறிவுறுத்தினார்கள். அஸ்வீன் சுவீட் கடையின் நிர்வாகம் தங்கள் வழங்கிய அச்சு முறுக்கில் பாசனம் பூத்து இருப்பமாக எழுதியும் கொடுத்திருக்கிறார்கள். 
 

பெரம்பலூரை மையமாகக் கொண்டு இயங்கும் இந்த அஸ்வீன் சுவீட் திருச்சி, பெரம்பலூர் பகுதியில் 10 இடங்களுக்கு மேல் கிளை வைத்திருக்கும் கடை பிரபலமடையக் காரணமாக இருந்த அச்சு முறுக்கிலே பிரச்சனை என்பது அதிர்ச்சியளிக்கும் விசயமாக இருக்கிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இன்னைக்கு ஒரு புடி' தாத்தா மருத்துவமனையில் அனுமதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
nn

வில்லேஜ் குக்கிங் சேனல் என்ற யூடியூப் சேனல் மூலம் பிரபலமான தாத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

'வில்லேஜ் குக்கிங் சேனல்' என்ற யூடியூப் சேனல் சமையலுக்கு மிகவும் பிரபலமானது. ஒரு குழுவாகச் சேர்ந்து உணவை சுவாரசியமாக சமைத்து சாப்பிடும் இந்த யூடியூப் சேனல் இந்திய அளவில் அதிக சப்ஸ்கிரைபர்களைக் கொண்ட சேனல்களில் ஒன்றாகும்.

அண்மையில் ராகுல்காந்தி உள்ளிட்ட பலர் இந்த சேனலில் உணவு சமைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலப்படுத்தி இருந்தனர். இந்த யூடியூப் சேனலில் அனைவரும் இளைஞர்கள் என்ற நிலையில், மிகவும் குறிப்பிடத்தகுந்த முதியவர் பெரியதம்பி தாத்தா. 'இன்னைக்கு ஒரு புடி' என்ற வசனம் மற்றும் உடல் மொழியால் பலர் மனதில் இடம் பிடித்தவர்.

இந்நிலையில், முதியவர் பெரியதம்பி தாத்தா தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புகைப்படங்கள் ஒன்று இணையத்தில் வெளியாகி இருந்தது. சேனலை நடத்தும் சுப்பிரமணியன் வேலுசாமி இது குறித்து வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் 'தாத்தா இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நல்ல நிலையில் உள்ளார். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி' எனத் தெரிவித்துள்ளார்.

Next Story

13வது நோன்பு நாளில் சுடச்சுட ஆவி பறக்க தயாரான பிரியாணி

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
Ready-to-eat Biryani to bake on the 13th day of Lent

ஏப்ரல் மாதம் ரம்ஜான் பண்டிகை வருவதையொட்டி உலகம் முழுவதும் இஸ்லாமிய மக்கள் நோன்பு இருந்து வருகின்றனர். சூரியன் உதயம் முதல் அந்தி சாயும் வரை உணவு உண்ணாமல், நீர் அருந்தாமல் நோன்பு இருப்பர். மாலை 6 மணிக்கு மசூதிக்கு சென்று நமாஸ் செய்துவிட்டு உணவு உண்பார்கள். காலை 5 மணிக்கு முன்பாக உணவு உண்பதை நிறுத்திவிடுவர். நோன்பு காலத்தில் இயலாத மக்களுக்கு மதம் பார்க்காமல் உதவுவார்கள்.

வேலூர் கோட்டை எதிரே 400 கிலோ சிக்கன் கறி கொண்டு சுடச் சுட ஆவி பறக்க நோன்பு பிரியாணி தயார் செய்யப்பட்டது. வேலூர் மக்கான் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 13 வது நோன்பு நாளில் பிரியாணி சமைத்து சுமார் 2000 வீட்டுக்கு பகிர்ந்து அளித்தனர்.

சனிக்கிழமை மாலை 5 மணியிலிருந்து பிரியாணி தயார் செய்யும் பணி தொடங்கிய நிலையில் நள்ளிரவு ஒரு மணி வரை பிரியாணி சமைக்கப்பட்டது. இந்தப் பணியில் சுமார் 130 பேர் ஈடுபட்ட நிலையில், மக்கான் பகுதியில் உள்ள வீடுகளுக்கு சுமார் அதிகாலை 2.30 மணிக்கு முன்பு பகிர்ந்தளிக்கப்பட்டது. ரம்ஜானை முன்னிட்டு 13 வது நோன்பு நாளில் அதிகாலையில் மக்கான் பகுதியில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களும் பிரியாணியை உண்டு மகிழ்ந்தனர்.