Advertisment

“கரோனா காலத்தில் இணை நோயால் இறந்தவர்களின் இறப்பு சான்றிதழ்களை நிபுணர் குழு ஆய்வு செய்ய வேண்டும்”- நீதிமன்றம் உத்தரவு!!

publive-image

கரோனா காலத்தில் இணை நோய்களால் மரணமடைந்தவர்களின் இறப்பு சான்றிதழ்களை நிபுணர் குழுவை கொண்டு ஆய்வு செய்ய வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த வழக்கறிஞர் ஸ்ரீராஜலட்சுமி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், கரோனா தொற்று பாதித்து பலியாகும் நபர்களுக்கு, கரோனா காரணமான மரணம் என இறப்பு சான்றிதழ்களில் குறிப்பிடப்படாததால், மத்திய மாநில அரசுகள் வழங்கும் நிவாரண உதவிகள் மறுக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

Advertisment

சக வழக்கறிஞர் கண்ணன் கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த நிலையில், அவர் மூச்சுத்திணறலால் இறந்தார் என சான்று வழங்கப்பட்டதாக மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். கரோனா மரணம் என இறப்பு சான்றிதழில் குறிப்பிடாததால், பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கும், குடும்பத்திற்கும் அரசின் நிதியுதவி கிடைக்கப்பெறுவது தடைபடுவதாகவும் மனுவில் கவலை தெரிவித்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, கரோனா மரணங்கள் முறையாக பதிவு செய்யப்படவில்லை என நாடு முழுவதுமே குறை கூறப்பட்டுவருவதாக சுட்டிக்காட்டினர்.

Advertisment

தமிழகத்தை பொறுத்தவரை, கரோனா பாசிடிவ் சான்றிதழ் இல்லாவிட்டால், சம்பந்தப்பட்ட மரணங்களை கரோனா மரணங்கள் என பதிவு செய்வதில்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், மரணம் குறித்த தெளிவான பதிவுகள் இருந்தால் தான், எதிர்காலத்தில் தொற்று பரவலை சமாளிப்பது குறித்து ஆய்வு செய்ய முடியும் எனவும், இறப்புகளை துல்லியமாக குறிப்பிடுவது, நிவாரணம் வழங்க உதவியாக இருக்கும் எனவும் குறிப்பிட்டனர். இணை நோய்கள் உடையவர்களும் கரோனாவுக்கு பலியாகி உள்ளதால், கரோனா காலத்தில் வழங்கப்பட்ட இறப்பு சான்றிதழ்களை நிபுணர் குழுவை கொண்டு ஆய்வு செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இது தொடர்பாக எடுத்த நடவடிக்கை குறித்த ஆரம்பகட்ட அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 28ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

corona death case Chennai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe