Skip to main content

கஜா புயலில் கிடைத்த அனுபவம்: முன்னெச்சரிக்கை காட்டும் நாகை மீனவர்கள்

Published on 27/04/2019 | Edited on 27/04/2019

கஜா புயல் பாதிப்பில் இருந்து இன்னும் மீளாத டெல்டா மாவட்ட மீனவர்கள் தற்போது உருவாகியிருக்கும் புதிய புயலால் அச்சமடைந்து, முன் எச்சரிக்கையாக தங்களின் வாழ்வாதாரமான மீன்பிடி படகுகளை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

 

 Experience in the kaja storm: fishermen facing precaution

 

கடந்த நவம்பர் மாதம் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் கரையை கடந்த கஜபுயலின்  கோரதாண்டவத்தின் வடுக்கள் இன்றுவரை மாறாத ரணமாக அப்பகுதி மக்களிடம் உள்ளது. மீனவர்கள் மீன்பிடி படகுகளையும், வலைகளையும், கட்டுமரங்களையும், கடலுக்கும், காற்றுக்கும் இரையாக கொடுத்தனர். அதே போல் விவசாயிகள் பல்லாயிரக்கணக்கான மரங்களையும், வீடுகளையும் காற்றுக்கும், மழைக்கும் பலிகொடுத்துவிட்டு பரிதவித்து வீதியில் பொங்கி உண்ணும் நிலமை ஏற்பட்டது.

 

அந்த பாதிப்பில் இருந்து பாதி அளவிற்குக்கூட மீளாத நிலையில் யாரும் கேள்விப்பட்டிடாத வகையில்  வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி தமிழகம் மற்றும் ஆந்திர இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அதிரடியாக அறிவிதித்திருப்பது பலரையும் கலங்கடித்துள்ளது.

 

கஜா புயலில் பல்லாயிரக்கணக்கான மரங்களையும், வீடுகளையும், நூற்றுக்கணக்கான படகுகளும் இழந்த மக்களுக்கு புதிய புயல் எச்சரிக்கையின் அறிவிப்பு நாகை மாவட்ட கடலோர பகுதி மக்களிடம் பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 Experience in the kaja storm: fishermen facing precaution

 

கடலை மட்டுமே நம்பி கரையில் வாழும் மீனவர்களுக்கு உடமைகளே படகுகள் தான் என்பதால்,பெரும்புயலில் முழுமையாக பாதுகாப்பது முடியாது எனினும் தங்களால் இயன்ற அளவு தங்கள் படகுகளையும் மீன்பிடி வலைகளையும் பாதுகாக்கும் முயற்சியில் மீனவர்கள் ஈடுபட்டுவருகின்றனர். 

 

விசைப்படகுகள் மீன்பிடிப்புக்கு தற்போது மீன் இனப்பெருக்கத்திற்காக தடை விதிக்கப்பட்டுள்ளது. கரையோர மீன்பிடிப்பில் ஈடுபட்டுவருபவர்களையும் புயலால் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் வியாழக்கிழமையே அறிவித்தது. இதனால் நாகை,திருவாரூர், மாவட்டத்தில் மீன்பிடித்தொழில் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. மீனவர்கள் தங்களின் பிடி மீன்பிடி படகுகளை தரைகளில் பாதுகாப்பான இடங்களில் நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். 

 

 Experience in the kaja storm: fishermen facing precaution

 

இதுகுறித்து புஷ்பவனம் மீனவர் அய்யாக்கண்ணு கூறுகையில்," ஏற்கனவே கஜாபுயலில், இருந்த  உடமைகள் முழுவதையும் பறிகொடுத்து விட்டோம். கட்டிய துணிகளோடு தப்பித்தோம், அரசு கடமைக்கு ஏதோ கொடுத்தது. தற்போது கந்து வட்டிக்கும், நகை நட்டுகளை அடகுவைத்தும் புதிய படகுகளை வாங்கி இருக்கிறோம். இதையும் இந்த புயலுக்கு பலி கொடுக்க நாங்கள் தயாராக இல்லை. அதனால் முடிந்தவரை கரைக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக வைக்க முயற்சித்து வருகிறோம். படகுகளை கரைக்கு கொண்டுவர வாடகை இயந்திரத்திற்கே வட்டிக்கு வாங்கி தான் கொடுத்து வருகிறோம். கஜா பாதிப்பிலிருந்து 5 மாதத்திற்கு பிறகு கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் கடலுக்கு சென்றோம், அதற்குள் புதிய புயல் வருகிறது, வருமை தற்போது எங்களை வாட்டி எடுக்கிறது." என்கிறார் கண்ணீர் மல்க.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
Tamil Nadu fishermen incident for Sri Lanka Navy 

தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. அதோடு படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இத்தகைய சூழலில் நேற்று காலை (08.04.2024) ராமேஸ்வரத்திலிருந்து 250 மேற்பட்ட விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர்.

அதன்படி ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து விட்டு இன்று (09.04.2024) அதிகாலை 3 மணியளவில் மீனவர்கள் கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது ராட்சத மின் விளக்கு ஒளியை வீசியுள்ளனர். மேலும் ஒலிபெருக்கி மூலம்,‘இங்கிருந்து வெளியேறுங்கள். இல்லையென்றால் உங்களைக் கைது செய்வோம்’ என எச்சரிக்கை செய்துள்ளனர். அதன் பின்னர் மீனவர்களின் பல லட்சம் மதிப்புள்ள படகுகள், மின் பிடி வலைகள் மற்றும் ஜி.பி.எஸ். கருவிகளையும் சேதப்படுத்தியுள்ளனர்.

அதே சமயம் இரும்பு கம்பியைக் கொண்டு மீனவர்கள் மீது தாக்குதல் இலங்கை கடற்படையினர் நடத்தியதாகவும், மீனவர்களின் வலைகளை அறுத்து வீசி சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஒரு மீனவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மற்றொரு மீனவருக்குத் தோள் மற்றும் இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் காயம் அடைந்த 2 மீனவர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் தாக்குதல் நடத்திய சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

ராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேர் கைது?

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
20 Rameswaram fishermen incident

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. இத்தகைய சூழலில் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து இன்று (20.03.2024) காலை ஏராளமான விசைப் படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்றிருந்தனர். அவ்வாறு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர். மேலும் மீனவர்கள் 20 பேரை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகச் சிறைபிடித்து கைது செய்தனர். அதோடு மீனவர்களின் 3 படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இதனையடுத்து ராமேஸ்வரம் மீனவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். ராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேர் கைது செய்யப்பட்டதுடன் இரண்டு விசைப் படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ள சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் விசாரணைக்கு பின்னர் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள்  20 பேரும் விடுவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.