முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது. பலமுறை இந்த ஆணையத்தைகாலநீட்டிப்புசெய்தது தமிழக அரசு.
இந்த விசாரணை ஆணையத்தில் பல்வேறு தரப்பினர் நேரடியாக ஆஜராகி விளக்கங்கள் கொடுத்த நிலையில் அப்போலோ மருத்துவமனை ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராக விலக்கு கோரியிருந்தது. இந்நிலையில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராக விலக்கு கோரிய அப்போலோமருத்துவமனையின் மனுவை இன்று உச்சநீதிமன்றம் விசாரிக்க இருக்கிறது. அதேபோல் ஆறுமுகசாமி ஆணையவிசாரணைக்கு விதித்த தடையை நீக்கக் கோரும் தமிழக அரசின் இடைக்கால மனுவையும் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ள இருக்கிறது உச்சநீதிமன்றம்.