Skip to main content

தேர்தல் பணிக்காக மாற்றப்பட்ட இன்ஸ்பெக்டர்கள்- டி.எஸ்.பிக்கள் மீண்டும் எப்போது பணிக்கு திரும்புவார்கள்? - ஏ.டி.ஜி.பி.க்கள் மற்றும் மண்டல ஐ.ஜிக்கள் நக்கீரனுக்கு விளக்கம்! -Exclusive

Published on 20/06/2019 | Edited on 20/06/2019

 

தேர்தல் முடிந்தும் ஏற்கனவே பணிபுரிந்த காவல்நிலையங்களுக்கு பணிமாறுதல் கிடைக்காததால் வீட்டையும் மாற்றமுடியாமல்  குழந்தைகளையும் பள்ளிக்கல்லூரிகளில் சேர்க்கமுடியாமல் குழப்பத்தில் குமுறிக்கொண்டிருக்கிறார்கள் இன்ஸ்பெக்டர்கள், டி.எஸ்.பி.க்கள் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள். இதில், பெரிதும் பாதிக்கப்படுவது மகளிர் இன்ஸ்பெக்டர்கள்தான். 

tn

 

இதுபற்றி, "தேர்தல் முடிந்தும்… பணிக்கு திரும்பாத இன்ஸ்பெக்டர்கள்… டி.எஸ்.பிக்கள்!  –குமுறும் மகளிர் இன்ஸ்பெக்டர்கள்!" என்ற தலைப்பில் 2019 ஜூன் -14 ந்தேதி நக்கீரன் இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். இச்செய்தி, பாதிக்கப்பட்ட காவல்துறையினர்களின் வாட்ஸ் -அப் குரூப்களில் உலாவி பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் சூழலில்  எப்போது பழையப்பணிக்கு திரும்புவார்கள்? என்று ஐ.ஜிக்கள் மற்றும் ஏ.டி.ஜி.பி.(சட்டம் ஒழுங்கு) ஏ.டி.ஜி.பி. அட்மின் ஆகியோரை தொடர்பு கொண்டு கேட்டோம். 

t

 

மேற்கு மண்டல ஐ.ஜி. சண்முக ராஜேஸ்வரன் ஐ.பி.எஸ்: 
"கூடிய சீக்கிரம் பழைய இடங்களுக்கு மாத்திடுவாங்க. மேக்ஸிமம் ஒருவாரத்துல மாத்திடுவாங்க"

 

மத்திய மண்டல ஐ.ஜி.  வரதராஜ் ஐ.பி.எஸ் :

"போலீஸ் கான்ஸ்டபிள், எஸ்.ஐக்கள் எல்லாம் தேர்தல் பணி முடிந்ததும் மாற்றப்பட்டுட்டாங்க. அதேமாதிரி, படிப்படியா இன்ஸ்பெக்டர்களும் பழைய இடங்களுக்கு மாற்றப்படுவதற்கான உத்தரவு வரும். மேலிட உத்தரவுக்காக காத்திருக்கோம். இந்த வாரத்துக்குள்ள வந்துடும்"

 

மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யா ஐ.பி.எஸ்: 
"டி.ஐ.ஜி. கிரைம் பிராஞ்ச், சேலம் ரேஞ்சுல எல்லோருக்குமே ட்ரான்ஸ்ஃபர் போட்டுக்கிட்டிருக்கோமே. யார் யார் யாரெல்லாம் வில்லிங்னெஸ் கொடுக்கிறாங்களோ எல்லோருக்குமோ பழைய இடங்களுக்கு ட்ரான்ஸ்ஃபர் போடுட்டோம். புது இடம் புடிச்சிருக்குன்னா அங்கேயும் பணி வழங்குறோம். குறிப்பா... ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்கள் அப்புறம் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் டி.ஐ.ஜி. மூலமா இன்ஸ்பெக்டர்கள்  ட்ரான்ஸ்ஃபர் போட்டுட்டோம்"

 

வடக்குமண்டல ஐ.ஜி. நாகராஜ் ஐ.பி.எஸுக்கு தொடர்புகொண்டபோது  ''எஸ்.ஐக்களுக்கு பணிமாறுதல் கொடுத்துவிட்டோம். அடுத்தது இன்னும் மூன்று நான்கு நாட்களில் இன்ஸ்பெக்டர்களுக்கும் பணி மாறுதல் கொடுத்துவிடுவோம்'' எனக்கூறினார்.   

j

 

இன்ஸ்பெக்டரகள் மற்றும் டி.எஸ்.பிக்கள் பழைய இடங்களுக்கு பணிமாறுதல் கொடுக்காமல் இருப்பது ஏன் என்று ஏ.டி.ஜி.பி.( சட்டம் ஒழுங்கு)  ஜெயந்த் முரளி ஐ.பி.எஸ்ஸிடம் நாம் கேட்டபோது, " விரைவில் பழைய இடங்களுக்கு திரும்புவார்கள். அதற்கென, இருக்கும் ஏ.டி.ஜி.பி.அதற்கான நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டிருக்கிறார்" என்றார். 

 

ஏ.டி.ஜி.பி. (அட்மின்) கந்தசாமி ஐ.பி.எஸ்ஸிடம் நாம் கேட்டபோது, " நேற்றே அதற்கான இன்ஸ்ட்ரக்‌ஷன்களை கொடுக்க ஆரம்பித்துவிட்டேன். விரைவில் பணிமாறுதல் பெறுவார்கள்" என்றார் நம்பிக்கையாக.

 

t

 

தினம் தினம் மகளிர் இன்ஸ்பெக்டர்கள் கண்ணீரோடு ஐ.ஜி., டி.ஐ.ஜிக்களிடம் மனு கொடுத்து கதறிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின், குடும்பச்சூழலை கருத்தில்கொண்டு பணிமாறுதல் கொடுத்தால் அவர்களை நம்பியிருக்கும் பொதுமக்களும் பயனடைவார்கள். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்ல வாசி.. அப்புறம்தான் சாப்பாடு; சங்கடத்தை வென்று சாதனை படைத்த 'நாதஸ்வர வித்வான்' பார்த்திபன்!

Published on 11/05/2023 | Edited on 11/05/2023

 

SINGER PAARTHEEBAN Interview 

 

தனியார் தொலைக்காட்சி பாடல் போட்டி நிகழ்ச்சியின் மூலம் பலரைத் திரும்பிப் பார்க்க வைத்த நாதஸ்வர வித்வான் பார்த்திபன் அவர்களுடன் ஒரு சிறப்பு நேர்காணல். அவர் கடந்து வந்த பாதை குறித்து பல்வேறு அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

 

என்னுடைய குடும்பம் ஒரு நாதஸ்வரக் குடும்பம். அப்பா, தாத்தா இருவரும் நாதஸ்வர வித்வான்கள். எனக்குப் படிப்பு வரவில்லை. அப்பாவிடம் நாதஸ்வரம் கற்றுக்கொண்டேன். அதன் பிறகு மாமாவிடம் கற்றுக்கொண்டேன். கடலூர் அரசு இசைப்பள்ளியிலும் நாதஸ்வரம் கற்றுக்கொண்டேன். சிறுவயதிலிருந்து பாட்டு பாடுவதிலும் எனக்கு ஆர்வம் உண்டு. எஸ்பிபி ஐயாவுடைய பாடல்கள் பலவற்றை கேட்டு நாதஸ்வரத்தில் வாசிப்பேன். அதன் பிறகு தான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்றேன். 

 

நம்முடைய பாரம்பரிய இசை வாத்தியங்கள் தற்போது குறைந்துகொண்டே வருகின்றன. சூப்பர் சிங்கர் போன்ற மேடைகள் எங்களைப் போன்ற கலைஞர்களை ஊக்குவிக்கின்றன. எங்களைப் போன்ற கலைஞர்களுக்கு இன்னும் நிறைய வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். சிறுவயதில் கிராமத்தில் நடக்கும் பல நிகழ்ச்சிகளுக்கு அப்பாவுடன் வாசிக்க நான் சென்றுள்ளேன். அப்போது சம்பளம் மிகக் குறைவு தான். வருடத்துக்கு ஆறு மாதங்கள் தான் வேலை இருக்கும். மீதி ஆறு மாதங்களுக்கு அந்தப் பணத்தை வைத்து தான் செலவு செய்ய வேண்டும்.

 

பல கலைஞர்கள் இன்னும் வறுமையில் தான் வாடிக்கொண்டிருக்கின்றனர். இந்தக் கலையை எப்போதும் விட்டு விடக்கூடாது என்று என் தந்தை என்னிடம் கூறினார். ஒரு சில நிகழ்ச்சிகள் முடிவதற்கு நேரம் ஆகிவிடும். அப்போது நாங்கள் நேரத்திற்கு சாப்பிட முடியாது. நிகழ்ச்சி முடிந்த பிறகு உடனே சாப்பிட்டாலும் ஏன் என்று கேட்பவர்களும் உண்டு. அப்போது மனதிற்கு மிகவும் வருத்தமாக இருக்கும். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி எனக்கு சிறப்பான ஒரு அனுபவம். ஷிவாங்கி எல்லாம் எங்களுடைய செட் தான். அனைவரும் இன்னும் நல்ல நண்பர்களாகத் தான் இருக்கிறோம். 

 

நான் பங்கேற்ற சூப்பர் சிங்கர் சீசனுக்குப் பிறகு தான் கொரோனா வந்தது. எங்களுடைய சீசன் மிகவும் பிரபலமானது. இந்த நிகழ்ச்சியால் என்னுடைய கிராமத்தில் எனக்கு நிறைய புகழ் கிடைத்தது. நான் வாசிக்கும்போது என் அம்மா பட்ட கஷ்டங்கள் எல்லாம் என் நினைவுக்கு வரும். நாதஸ்வரம் வாசித்துக்கொண்டே பாடுவது மிகவும் கடினம் என்று கூறி அனிருத் என்னைத் தனிப்பட்ட முறையில் பாராட்டினார். வெளிநாடுகளில் இருக்கும் தமிழர்கள் நம்மை ஆத்மார்த்தமாக ரசிக்கின்றனர். 

 

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் எஸ்பிபி அவர்களின் பாடலை அவர் முன்னிலையில் பாடி பாராட்டுப் பெற்றது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம். நிகழ்ச்சியில் பாடுவதற்கு முன்னரே அவரை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றோம். அப்போதே அவர் என்னைப் பாராட்டினார். மேடையில் அவர் பாட நான் வாசித்தது ஒரு வாழ்நாள் தருணம். எங்களைப் போன்ற இசைக்கலைஞர்கள் இன்று திருப்தியாக இருக்கிறோம். மக்களுடைய ஆதரவு எங்களுக்கு இருக்கிறது. சந்தோஷமாக இருக்கிறது. இது மென்மேலும் வளர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

 

 

Next Story

என் மீது பாஜக சாயம் பூச முயற்சி: ரஜினிகாந்த்!

Published on 08/11/2019 | Edited on 08/11/2019

இயக்குனர் பாலச்சந்தர் சிலை திறப்பு நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தார் . அவர் கூறியதாவது ,

திருவள்ளுவரை வைத்து அரசியல் செய்வதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

திருவள்ளுவர் மிகப்பெரிய ஞானி. ஞானிகள், சித்தர்கள் மதத்திற்கு அப்பார் பட்டவர்கள். அவர் கடவுள் நம்பிக்கை கொண்டவர். அவர் நாத்திகர் இல்லை அவர் ஆத்திகர்.அதை மறுக்கவும் முடியாது மாற்றவும் முடியாது. பாஜக அவர்களோட முகநூல் கணக்கில் காவி உடை அணிவது போல் பதிவிட்டார்கள். அது அவர்களோட தனிப்பட்ட உரிமை. நாட்டில் பல பிரச்சனைகள் இருக்கும் இந்த நேரத்தில் இதை சர்ச்சை ஆகியிருக்க வேண்டாம்.

லதா ரஜினிகாந்த் மற்றும் முதலமைச்சர் சந்திக்க போறார்கள். அதை பற்றி?

குழந்தைகளுக்காக, மக்களுக்காகவும் ஒரு நிறுவனத்தை ஆரமிக்க இருக்கிறார்கள். அதை பற்றி பேச தான் அவர்கள் அங்கு சென்றுள்ளார்.


 

BJP PARTY ACTOR RAJINI KANTH SPEECH



உள்ளாட்சி தேர்தலில் உங்கள் கட்சி போட்டியிடுமா?

நாங்கள் போட்டியிட மாட்டோம்.

 

பொன். ராதாகிருஷ்ணன் நீங்கள் பாஜகவில் இனைய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அதை பற்றி விவாதிக்க பட்டதா?

அவர் எந்தவிதமான அழைப்பு விடவில்லை. பாஜக சாயம் என் மேல் பூச முயற்சி நடைபெறுகிறது. திருவள்ளுவர் போல என் மீதும் அந்த முயற்சி நடந்து வருகிறது. திருவள்ளுவரும் மாட்ட மாட்டார், நானும் மாட்ட மாட்டேன்.