Skip to main content

குடித்துவிட்டு ஆய்வுக்குச் சென்றதாக குற்றச்சாட்டு; ஒன்றியக் குழு உறுப்பினர் கூட்டத்தில் பரபரப்பு !

Published on 14/09/2021 | Edited on 14/09/2021

 

Excitement over member's accusation that the officer was drunk and going for inspection!

 

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டம் அ.தி.மு.கவைச் சேர்ந்த ஒன்றியக்குழுத் தலைவர் செல்லத்துரை தலைமையில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயக்குமாரி, முருகன், ஒன்றியக்குழுத் துணைத் தலைவர் பூங்கோதை ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

 

இக்கூட்டத்தில் அ.தி.மு.க, பா.ம.க, தி.மு.க உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டம் ஆரம்பித்த சில மணித்துளிகளிலேயே பா.ம.க ஒன்றியக்குழு உறுப்பினர் சரவணன் பேசும்போது, எருமனூர் ஊராட்சியில் நடந்துவரும்  ஊரக வேலை வேலைவாய்ப்பு திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகவும், எம்.என்.ஆர் பதிவேட்டைக் கிழித்தெறிந்த ஊழியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஆய்வுக்கு வரும்போது துணை பி.டி.ஓ. ராஜேஷ் மதுபோதையில் வருகிறார். அவரை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றும் என்று கூறினார். 

 

Excitement over member's accusation that the officer was drunk and going for inspection!

 

அதற்கு யாரும் பதில் அளிக்காததால் கவுன்சிலர் சரவணன், 'துணை பி.டி.ஓ ராஜேஷ் எழுந்து பதில் கூறுங்கள்' என ஆவேசமாகக் கேட்டார். இதனைச் சற்றும் எதிர்பார்க்காத ராஜேஷ், 'நான் மது குடித்ததை நீங்கள் பார்த்தீர்களா..?' எனக் கேட்டார். "ஆமாம் நான் தெரிந்து தான் கூறினேன். படமெடுத்துக் காட்டவா...?" என சரவணன் கேட்டார். அதற்கு பதிலளித்த வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயக்குமாரி, "இதுபோன்று துணை பி.டி.ஓ செயல்பட மாட்டார். நேற்று முன்தினம் தடுப்பூசி போடும் முகாம் நடந்ததால் அவருக்குப் பணி அங்கு ஒதுக்கப்பட்டு இருந்தது" என்றார்.

 

இதையடுத்து தன்னை பற்றி பேசிய கவுன்சிலரைக் கண்டித்து துணை பி.டி.ஓ ராஜேஷ் கூட்டத்தை விட்டு வெளியேறினார். அவரைத் தொடர்ந்து அரசு அதிகாரிகள் அனைவரும் கூட்டத்தைப் புறக்கணித்து விட்டு வெளியேறி அலுவலகத்தின் முன்பு திரண்டனர். அதனைத் தொடர்ந்து சில ஒன்றியக்குழு உறுப்பினர்களும், அதிகாரிகளும் எவ்வித பதிலும் சொல்லாமல் அலட்சியமாக வெளிநடப்பு செய்ததைக் கண்டித்துக் கூட்டத்தைப் புறக்கணித்து வெளியேறி போராட்டத்திற்குத் தயாராகினர்.

 

Excitement over member's accusation that the officer was drunk and going for inspection!

 

அரை மணி நேரத்திற்கும் மேலாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிகாரிகளும், ஒன்றியக் குழு உறுப்பினர்களும் தனித்தனி குழுவாக இருந்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஒன்றியக்குழுத் தலைவர் ஆகியோர், அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் இடையே சமரசம் செய்ததையடுத்து அமைதி ஏற்பட்டது. பின்னர் ஒரு மணி நேரத்திற்குப் பின்பு ஒன்றியக்குழுக் கூட்டம் மீண்டும் தொடங்கி அமைதியாக நடைபெற்றது.

 

கூட்டத்தில் வரவு, செலவு கணக்குகள் உறுப்பினர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்களுக்கு அரசு அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும், முழு ஒத்துழைப்பு தராத அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.