Skip to main content

சலூன் மற்றும் சலவை தொழிலாளர்களுக்கு உதவும் ஓய்வு பெற்ற காவல்துறை டி.எஸ்.பி

Published on 06/05/2020 | Edited on 06/05/2020
r

 

காவல்துறையில் உதவி ஆய்வாளர்,  பிறகு ஆய்வாளர்,  அதன்பிறகு டிஎஸ்பி ஆகிய பணிகளை சிறப்பாக  செய்து மக்களிடம் நல்ல பெயர் எடுத்து ஓய்வு பெற்றவர் ராஜேந்திரன்.  அவர் தற்போது விருத்தாசலத்தில் வசித்து வருகிறார்.  இவர் ராஜலட்சுமி ஹெச்.பி. கேஸ் கம்பெனி உடன் இணைந்து விருத்தாசலம் நகரில் உள்ள முடிதிருத்தும் தொழிலாளர்கள் மற்றும் சலவை தொழிலாளர்கள் என 100 குடும்பத்தினர்களுக்கு அவர்களின் உணவை தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அரிசி மூட்டைகளை வழங்கினார். 


மேற்படி தொழிலாளர்கள் தமிழக அளவில் மிகவும் நலிந்த பிரிவினரை சேர்ந்தவர்கள்.  கரோனா பாதிப்பினால் அவர்கள் தொழில்கள் முடங்கிக் கிடக்கின்றன. அதிலும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் அவர்களது தொழிலை தற்போது உள்ள சூழ்நிலையில் தொடங்கக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது.  காரணம் முடிதிருத்தும் கடைகளுக்கு வருபவர்கள்  மூலம் சென்னையில் கரோனா நோய் பரவியுள்ளது.

அதேபோன்று தமிழக அளவில் வந்து விடக்கூடாது என்பதற்காக சலூன் கடைகள் திறப்பதை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  அப்படிப்பட்டவர்களின் குடும்பங்கள் சிரமப்படக் கூடாது என்ற அடிப்படையில் இந்த உதவியை செய்துள்ளதாக ஓய்வு பெற்ற காவல்துறை டி.எஸ்.பி ராஜேந்திரன் கூறினார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

சரியாக முடி வெட்டாத சலூன் கடைக்காரர்; கடையை மூட முயன்ற காவலர்

Published on 20/02/2023 | Edited on 20/02/2023

 

thirunelveli police son salon shop viral incident 

 

மகனுக்கு சரியாக முடிவெட்டவில்லை என்று சலூன் கடைக்கு பூட்டுப்போட முயன்ற காவலரின் செயல் அப்பகுதியில் உள்ள மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்த நேவிஸ் பிரிட்டோ என்ற காவலரின் மகன் முடி வெட்டுவதற்காக  அப்பகுதியில் உள்ள சலூன் கடை ஒன்றுக்கு சென்று முடியை வெட்டிவிட்டு வீட்டுக்கு வந்து உள்ளார். சலூன் கடையில் இருந்தவர்  முடியை சரியாக வெட்டவில்லை என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில்  காவலர் தனது மகன், மனைவி ஆகியோரை அழைத்துக் கொண்டு சலூன் கடைக்குச் சென்றுள்ளார். ஆனால் அப்போது சலூன் கடையில் மகனுக்கு முடி வெட்டிய கடைக்காரர் இல்லாததால் ஆத்திரமடைந்த காவலர் நேவிஸ் பிரிட்டோ கடைக்காரரை தொடர்புகொண்டு அவதூறாகப் பேசியுள்ளார். மேலும் கடையின் ஷட்டரை மூடி கடையை பூட்டு போட முயன்றுள்ளார்.

 

இந்த சம்பவத்தின் காட்சிகள் அப்பகுதியில் உள்ளவர்களின் மூலமாக சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இது தொடர்பாக சலூன் கடைக்காரர்  காவலர் நேவிஸ் பிரிட்டோ மீது அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் வள்ளியூர் போலீஸ் டி.எஸ்.பி காவலர் நேவீஸ் பிரிட்டோவை ஆயுதப்படைக்கு மாற்றி அதிரடி உத்தரவை பிறப்பித்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

Next Story

முடி திருத்தகங்களில் வரிசையில் நின்ற இளைஞர்கள்!! (படங்கள்)

Published on 14/06/2021 | Edited on 14/06/2021

 

கரோனா தொற்று வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து கடந்த மே 10ஆம் தேதி, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்தது. டாஸ்மாக் மதுக்கடைகளும் அடைக்கப்பட்டன. தொடர்ந்து தொற்று அதிகரிப்பதைக் கருத்தில்கொண்டு, கடந்த மே 24ஆம் தேதிமுதல் முழுமையான ஊரடங்கு அமலுக்குவந்தது. அதன்பின்னர் கடந்த 7ஆம் தேதிமுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்குவந்தது.

 

அதேவேளை தொற்று அதிகமாக உள்ள கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களுக்கு குறைவான தளர்வுகளும் மீதமிருக்கும் மாவட்டங்களுக்கு சற்று அதிகமான தளர்வுகளும் அறிவிக்கப்பட்டன. அந்தவகையில் சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் அழகு நிலையங்கள் - சலூன்கள் திறப்பு, பூங்காக்கள் திறப்பு உள்ளிட்ட கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

 

மக்களின் தொடர் கோரிக்கையைத் தொடர்ந்து 27 மாவட்டங்களில் அழகு நிலையங்கள், சலூன்கள் இயங்குவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மேலும் 50% பேர் அனுமதிக்கப்படுவார்கள். காலை 6.00 மணிமுதல் மாலை 5.00 மணிவரை கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. 11 மாவட்டங்களில் இந்தக் கடைகளைத் திறக்க இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை. நீண்ட நாட்களுக்குப் பின்னர் கடை திறந்துள்ளதால், முடி திருத்துவதற்காக இளைஞர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர்.