அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது சூலூர் நீதிமன்றம்.
அதிமுக பெயரில் போலி இணையதளத்தை நடத்தியதாக கடந்த ஜனவரி 25- ஆம் தேதி முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் கே.சி.பழனிசாமியை போலீஸார் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
இதையடுத்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் ஜாமின் கோரி கே.சி.பழனிசாமி சூலூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் இன்று (11/02/2020) விசாரணைக்கு வந்த நிலையில் நிபந்தனையுடன் கூடிய ஜாமினை வழங்கிய நீதிபதி, சூலூர் காவல் நிலையத்தில் காலையும், மாலையும் ஆஜராகி கையெழுத்திட கே.சி. பழனிசாமிக்கு உத்தரவிட்டார்.